சினிமா செய்தித் துளிகள் ரஜினிக்கு ஜோடியாகும் காத்ரீனா கைப்

29 Aug,2015
 


ரஜினிக்கு ஜோடியாகும் காத்ரீனா கைப்



இயக்குனர் ஷங்கர் தனது படங்களில் எப்படி பிரமாண்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதேபோன்று ஹீரோ, ஹீரோயினி விசயத்திலும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். குறிப்பாக அவரது படங்களில் தென்னிந்திய நடிகைகளை விட இந்தி

நடிகைகளே அதிகமாக நடித்துள்ளனர். அந்த வகையில், அவரது முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை மதுபாலா நடித்திருந்தார். அதையடுத்து இயக்கிய காதலனில் நக்மா, பின்னர் இந்தியனில் மனீஷா கொய்ராலா, ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய், முதல்வனில் மனீஷா கொய்ராலா, பாய்ஸில் ஜெனிலியா, அந்நியனில் சதா, சிவாஜியில் ஸ்ரேயா, எந்திரனில் ஐஸ்வர்யாராய் இப்படி தான் இயக்கியதில் ஓரிரு படங்களை தவிர மற்ற எல்லா படங்களிலும் இந்தி நடிகைகளைத்தான் நடிக்க வைத்துள்ளார் ஷங்கர்.

அந்த வரிசையில், கபாலி படத்தை அடுத்து ரஜினியை வைத்து தான் இயக்கும் எந்திரன்-2 படத்திலும் ஒரு இந்தி நடிகையைத்தான் நடிக்க வைக்க பேசியுள்ளார் ஷங்கர். அந்த நடிகை பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான கைத்ரீனா கைப். இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத காத்ரீனா கைப், 2016ல் எந்திரன்-2 படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்துள்ளாராம். தற்போது ரஞ்சித்தின் கபாலி படத்தில் நடிக்கயிருக்கும் ரஜினி, டிசம்பர் மாதத்தோடு இந்த படத்தில் நடித்து விடுவார் என்பதால், ஜனவரி மாதத்தில் இருந்து ஷங்கர் இயக்கும் எந்திரன்-2 படத்தில் நடிக்கிறார் ரஜினி.




கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக காஜல் அகர்வால்


'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே அடுத்து இயக்க உள்ள படம் 'கவலை வேண்டாம்'. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்திற்கான ஃபோட்டோ ஷுட்டில் மட்டும் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்,

அதன் பின் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். அதனால், அந்தப் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷை அதிரடியாக நீக்கி விட்டார்கள். இப்போது அவருக்குப் பதிலாக காஜல் அகர்வாலை நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

ஜீவா ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் முதல் படம் இது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொள்ள உள்ளார். காஜல் தற்போது தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள 'பிரம்மோற்சவம்', மற்றும் 'மொட்டை சிவா கெட்ட சிவா' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். கடந்த ஆண்டு தமிழில் 'ஜில்லா' படத்தில் மட்டுமே நடித்த காஜல் தற்போது தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். 'மாரி' படத்தைத் தொடர்ந்து காஜல் அகர்வால் நடித்துள்ள 'பாயும் புலி' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.





சமந்தாவை அதிர வைத்த ராகுல் பரீத் சிங்!


அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. தற்போது அவர் கைவசம் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல மெகா ஹீரோக்களின் படங்களாக உள்ளன. இருப்பினும், தெலுங்கில் சுத்தமாக வாஸ் அவுட்டாகி விடக்கூடாது

 என்று நினைக்கும் சமந்தா, சில தெலுங்கு படங்களில் நடிப்பதற்காகவும் முயற்சி செய்தார். ஆனால் அவர் கமிட்டாகயிருந்த சில படங்கள் கடைசி நேரத்தில் வேறு நடிகைக்கு சென்று விட்டன. குறிப்பாக, மகேஷ்பாபுவுடன் அவர் நடிக்கயிருந்த பிரமோற்சவம் படத்தில் இப்போது அவருக்குப்பதிலாக ராகுல் பரீத்சிங் கமிட்டாகியிருக்கிறார். அதேபோல், ராம்சரண் நடிக்கும் ஆர்சி 9 என்ற படத்தில் நடிக்க சமந்தா பேசிவந்த நிலையில் இப்போது அந்த படத்திலும் அதே ராகுல் பரீத் சிங்கே ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

 

ஆக, சமந்தாவுக்கான வாய்ப்புகளை புதிதாக வளர்ந்து கொண்டிருக்கும் ராகுல்ப்ரீத் சிங் வேகவேகமாக கைப்பற்றிக்கொண்டுள்ளார். இதனால் தற்போது தெலுங்கில் சுத்தமாக படங்களே இல்லாத நிலையில் இருக்கிறார் சமந்தா. மேலும், அடுத்தபடியாக தமிழில் படங்களை குறைத்துக்கொண்டு தெலுங்கிலும் சமஅளவு கவனம் செலுத்து திட்டமிட்டுள்ள சமந்தா, இப்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஐதராபாத்தில் முகாமிட்டு, அங்குள்ள தனது அபிமான ஹீரோக்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்துவதோடு, புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார்.


த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட்

 



ஜி.வி.பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி நடித்துள்ள "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா" படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் வழங்கியுள்ளது.

 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் டார்லிங் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன் அவர் நடித்த பென்சில் படம் ட்ராப்பாகிவிட்டநிலையில் தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் - த்ரிஷா இல்லனா நயன்தாரா.

த்ரிஷா இல்லனா நயன்தாரா பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளன. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களில் ரோகேஷ் எழுதிய பிட்டு படம் டீ என்ற பாடலும் ஒன்று. ஜி.வி.பிரகாஷ்குமாரும், அப்படத்தின் இயக்குநரும் இணைந்து பாடியுள்ள இந்தப்பாடல்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பிட்டு படம் டீ என்று தொடங்கும் அந்தப்பாடலில்,நான் உனக்கு பேய்ப்படம்.. நீ எனக்கு பிட்டு படம்... என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளது.

அப்படத்தின் நாயகனான பிரகாஷ்குமார், கதாநாயகியைப்பார்த்து நீ எனக்கு பிட்டு படம்... அதாவது நீ எனக்கு ஆபாசப்படம் என்று சொல்வதுபோல் இப்பாடல் உள்ளது. பிட்டுப் படம் என்பது ஆபாசப்படத்தைக் குறிக்கும் வார்த்தை என்பதால், ஒட்டுமொத்த பெண்களையும் இந்தப்பாடல் வரி ஆபாசமானவர்களாக சித்தரிப்பதாக ஆவேசம் அடைந்துள்ளனர் பெண்கள்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள பிட்டு படம் டீ என்ற இந்தப்பாடலைப்பாடி தெருவில் செல்லும் பெண்களைப்பார்த்து நீ எனக்கு பிட்டுப்படம் என்று ஆண்கள் கேலி செய்வார்கள். எனவே த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திலிருந்து இந்தப்பாடலை உடனடியாய் நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து கடும் கண்டனத்தை பெண்கள் பதிவு செய்து வருகின்றனர்.

படம் ரிலீசிற்கு தயாராகியுள்ள நிலையில், படம் தணிக்கைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர், படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

படம், செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படமும் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.



ஹன்சிகாவை ஆச்சர்யப்படுத்திய விஜய்!


தமிழ் சினிமாவுக்கு தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் வந்தவர் ஹன்சிகா. அதன்பிறகு பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த எங்கேயும் காதல் படத்தில் நடித்ததை அடுத்து விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் அவரது முறைப்பெண்ணாக நடித்தார்.

அதுவும் மாடர்ன் பெண்ணான ஹன்சிகா அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்து அசத்தினார். அந்த படத்தில் விஜய்-ஹன்சிகாவின் ரொமான்டிக் நடிப்பு பேசப்பட்டது.

ஆனபோதும் அதன்பிறகு விஜய்யுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பினை பெறாத ஹன்சிகா, தற்போதுதான் புலி படத்தில் மீண்டும் விஜய்யுடன் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனே விஜய்க்கு ஜோடியாக நடித்தபோதும், இன்னொரு நாயகியாக ஒரு இளவரசி கெட்டப்பில் ஹன்சிகா நடித்திருக்கிறார். அதாவது டைம் மிஷினில் 500 வருடத்துக்கு பின்னாடி விஜய் செல்லும்போது அங்கிருக்கும் மகாராணி ஸ்ரீதேவியின் மகளாக ஹன்சிகா வருகிறாராம். அப்போது அவர் விஜய்யை ஒன்சைடாக லவ் பண்ணுவாராம்.

மேலும், இந்த புலி படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள அனுபவங்களை தன்னை சந்திப்பவர்களிடம் வண்டி வண்டியாக கொட்டி வருகிறார் ஹன்சிகா. அப்போது, விஜய் தன்னுடன் நடிக்கும் அனைவரையுமே சமமாக பார்ப்பவர். அதோடு தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைப்பார். அதோடு, அவர் தன்னை பெரிய நடிகர் என்றும் நினைத்துக்கொள்வதில்லை. ஒரு புதுமுக நடிகர் மாதிரியே நடந்து கொள்வார். மேலும், எப்போதும் அவர் இளமையாகத்தான் இருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக அவருடன் நடனமாடுவது ரொம்ப கஷ்டமான விசயம். அத்தனை எனர்ஜி அவரிடம் வெளிப்படுகிறது. அந்த வகையில், விஜய்யைப்பார்த்து நான் பலசமயங்களில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் என்கிறார் ஹன்சிகா.





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies