சினிமா செய்தித் துளிகள் ஷுட்டிங்கில் ஓடிப் போக நினைத்த அனுஷ்கா

24 Aug,2015
 

பவன் கல்யாணிற்கு ஜோடியான காஜல் அகர்வால்


டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் சர்தார் படத்தில் அவருக்கு

ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கக் கூடும் என கூறப்பட்டது. காஜல் அகர்வால் சர்தார் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் பாபி இயக்குகின்றார். இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அனிஷா இப்படத்திலிருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை காஜல் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புனேவில் துவங்கிய இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.. இதில் காஜல் அகர்வால் கலந்து கொள்ளவுள்ளார்.இப்படம் தவிர நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் பிரமோற்சவம் படத்திலும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்




ஷுட்டிங்கில் ஓடிப் போக நினைத்த அனுஷ்கா




இன்று தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, தான் அறிமுகமான முதல் படத்தின் படப்பிடிப்பில் இருந்து

பாதியிலேயே ஓடிப் போக நினைத்தாராம். அனுஷ்கா நாயகியாக அறிமுகமான 'சூப்பர்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஒரு காட்சியில் நடிக்க அனுஷ்கா அவ்வளவு ரீ-டேக் வாங்கினாராம். நடனம் ஆட கொஞ்சம் கூட வராதாம். படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும், நாயகன் நாகார்ஜுனாவும் அதைக் கண்டு கோபப்படாமல் பொறுமையாக இருப்பார்களாம். ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டதாம். அதோடு படப்பிடிப்பை விட்டு ஓடிப் போகலாம் என்றும் முடிவு செய்தாராம். ஆனால், நாகார்ஜுனாதான் அனுஷ்காவிற்கு தைரியமூட்டி, ஆதரவாக இருந்து தொடர்ந்து நடிக்கக் காரணமாக இருந்தாராம்.

 

அனுஷ்காவே அந்த சம்பவத்தைப் பற்றி சமீபத்தில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். அன்று மட்டும் சினிமாவே வேண்டாம் என்று அனுஷ்கா ஓடிப் போயிருந்தால் இன்று தமிழ், தெலுங்குத் திரையுலகம் ஒரு அழகான, திறமையான நடிகையை இழந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அனுஷ்கா நடித்து அவருடைய திறமையை மேலும் வெளிப்படுத்தி வருகிறார். அனுஷ்கா நடித்துள்ள 'ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

நயன்தாராவுடன் ஜெயம்ரவி ரொமான்ஸ்!

 


டைரக்டர் மோகன்ராஜா இயக்கி வரும் தனி ஒருவன் படத்தில் நயன்தாரா ஆக்சன் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி

வருகின்றன. அதோடு, பட நாயகன் ஜெயம்ரவிக்கும், அவருக்குமிடையே பைட் சீன் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் அவர்களுக்கிடையே ரொமான்ஸ் காட்சிகள்தான் அதிகமாக இருப்பதாக அந்த படக்குழுவினர் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு நயன்தாரா எத்தனையோ இளவட்ட ஹீரோக்களுடன் நடித்திருந்தபோதும் இந்த படத்தில் ஜெயம்ரவியுடன் அதிக ரொமான்ஸ் காட்டி, நடித்திருப்பதாக சொல்கிறார்கள். அதோடு, ஜெயம்ரவியும் நயன்தாராவின் ரசிகர். அவருடன் ஒரு படத்திலேனும் நடித்து விட வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசையாக இருந்து வந்தது. அதனால் அந்த ஆசையை தீர்த்துக்கொள்ளும் வகையில் இந்த படத்தில் அவரும் ரொமான்ஸ் காட்சிகளில் நயன்தாராவுக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளாராம். இதனால் இந்த படத்தில் அவர்களின் ரொமான்ஸ் பேசப்படும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.

 

மேலும், நயன்தாராவுக்கும் ஆக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் அது ஜெயம்ரவியுடன் இல்லையாம். மேலும், இந்த படத்தில் துளியும் கிளாமர் என்பது இல்லாமல், முற்றிலும் பர்பாமென்ஸ் நடிகையாக உருவெடுத்துள்ள நயன்தாரா, சில காட்சிகளில் ஆவேசமாக நடித்து அசத்தியிருக்கிறாராம். அந்த வகையில் இந்த படம் அவரது ஆக்சன் பயணத்துக்கு நல்லதொரு பிள்ளையார் சுழியாகவும் அமையும் என்கிறார்கள்.



அஜீத்தைத் தொடர்ந்து விஜய்யும்!




அஜீத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு தளங்களில் தான் ஒரு முன்னணி நடிகர் என்ற கெடுபிடிகள் எதுவும் செய்யாதவர். குறிப்பாக,

தன்னையும் மற்ற நடிகர் நடிகைகளைப்போன்று கவனித்தாலே போதும் எனக்கென்று ஸ்பெசலாக எதுவும் தேவையில்லை என்று சொல்லக்கூடியவர். அதோடு, தனக்காக நிறுத்தப்பட்டிருக்கும் கேரவனுக்குள் காஸ்டியூம் சேஞ்ச் பண்ண போறதோடு சரி, மற்ற நேரங்களில் சக நடிகர், நடிகைகளுடன்தான் வெளியில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் நடிப்பதை ஒரு ரசிகர் போல் அமர்ந்து ரசிப்பார்.

ஆனால் இந்த விசயத்தில் இதுவரை விஜய் மாறுபட்டிருந்தார். அதாவது பெரும்பாலும் அவர் வீட்டில் இருந்து ஸ்பாட்டுக்கு வரும்போது அவரது கார் கேரவன் நிற்கும் இடத்திற்கு சென்று அதன் வாசலருகேதான் நிற்கும். அதிலிருந்து இறங்கி, அப்படியே அவர் கேரவனுக்குள் சென்று விடுவார். அதன்பிறகு எப்போது டைரக்டர் அழைக்கிறாரோ அப்போதுதான் மேக்கப் போட்டுக்கொண்டு வெளியில் தலைகாட்டுவார். அதேபோல் கேமரா முன்பு வந்து நடித்து முடித்ததும் அப்படியே கேரவனுக்குள் சென்று விடுவார். இப்படித்தான் புலி படத்திற்கு முன்பு வரை இருந்து வந்தார் விஜய்.

 

ஆனால் புலி படத்தில் நடித்து வந்தபோது விஜய்யின் நிலையில் நிறைய மாற்றங்கள். அதாவது, கேரவனை விட்டு வெளியே வருபவர், பின்னர் தனக்கான ஷாட் முடிந்த பிறகும் வெளியில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடத்திலேயே அமர்ந்து அவர்களுடன் பேசி வந்தவர், தம்பிராமைய்யா உள்ளிட்ட காமெடியன்களுடனும் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறார். அதனால் இந்த படத்தில் அவர்களுக்கிடையிலான காமெடி காட்சிகள் ரொம்ப இயல்பாக வந்திருக்கிறதாம். விஜய் தங்களுடன் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்ததை அப்படத்தில் நடித்தவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies