சினிமா செய்தித் துளிகள் அனுஷ்கா அதிகரித்த உடல் எடை எவ்வளவு தெரியுமா?

20 Aug,2015
 

இந்திய கனவுக்கன்னியான ஸ்ருதிஹாசன்!




பாலிவுட் திரையுலகில் லக் படத்தில் இருந்து தனது கதாநாயகி பிரவேசத்தை தொடங்கிய ஸ்ருதிஹாசன், பின்னர் தமிழ், தெலுங்கு

படங்களில் நடித்தபோதும் இப்போதுவரை இந்திக்கு கூடுதல் முக்கியத்துவமே கொடுத்து வருகிறார். அதோடு, மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகளையே அதிர வைக்கும் உடையணிந்து நடித்து அவ்வப்போது பெண்கள் அமைப்புகளின் எதிர்ப்புக்கும் ஆளாகி வருகிறார்.

ஆனால், அவருக்கு எந்த அளவுக்கு எதிர்ப்புகள் எழுகிறதோ அதற்கும் பன்மடங்கு மேல் இந்திய அளவில் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள். குறிப்பாக, ஸ்ருதிஹாசன் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படங்களின் புகைப்படங்களும் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்து வருகிறதாம். அந்த வகையில், சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் அவர் நடித்து வெளியான ஸ்ரீமந்துடு படம் சூப்பர் ஹிட்டாகியிருப்பதால் சமீபகாலமாக தெலுங்கில் மந்தமாகியிருந்த ஸ்ருதியின் மார்க்கெட் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக, அந்த படத்தில் அவர் நடித்த கவர்ச்சி படங்கள் வெளியிட்டதில் இருந்து கூகுள் தேடலில் ஸ்ருதியின் புகைப்படங்கள்தான் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக அவர் நடித்த பாடல் காட்சிகளின் புகைப்படங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பதிவிறக்கமும் செய்திருக்கிறார்களாம். அந்த வகையில், இந்திய அளவிலான தற்போதைய இளவட்ட ரசிகர்களின் கனவுக்கன்னி பட்டியலில் ஸ்ருதிஹாசனுக்கு முதலிடம் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள்


பாக்யராஜ் மகன் சாந்தனு திருமணம் நாளை நடக்கிறது




திரைப்பட இயக்குனர்– நடிகர் பாக்கியராஜ்– பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு. இவர் சக்கரைகட்டி, அம்மாவின் கைபேசி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

சாந்தனு– கீர்த்தி திருமணம் நாளை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது.



பாடகி அவதாரம் எடுத்த த்ரிஷா 



 
கோவி இயக்கத்தில், த்ரிஷா நடிப்பில் காமெடி, த்ரில்லர் படமாக உருவாக உள்ள நாயகி படத்தின் புரோமோஷனல் பாடலை, த்ரிஷாவே பாட உள்ளார். கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷா, அரண்மனை 2 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, ஹீரோயின் ஓரியண்டட் படமான நாயகி படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்புதல் தெரிவித்திருந்தார். நாயகி படத்தின் துவக்கவிழா, சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளராக இருந்து, திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா மேனேஜராக இருந்த கிரிதர், இப்படத்தை தயாரிக்கிறார். கோவி படத்தை இயக்குகிறார்.
கோவி இயக்கத்தில், த்ரிஷா நடிப்பில் காமெடி, த்ரில்லர் படமாக உருவாக உள்ள நாயகி படத்தின் புரோமோஷனல் பாடலை, த்ரிஷாவே பாட உள்ளார். கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷா, அரண்மனை 2 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, ஹீரோயின் ஓரியண்டட் படமான நாயகி படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்புதல் தெரிவித்திருந்தார். நாயகி படத்தின் துவக்கவிழா, சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளராக இருந்து, திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா மேனேஜராக இருந்த கிரிதர், இப்படத்தை தயாரிக்கிறார். கோவி படத்தை இயக்குகிறார்.
    

பூரி ஜெகந்தாத்தின் படங்களில் பணிபுரிந்துள்ள இசையமைப்பாளர் ரகு, இப்படத்திற்கு இசையமைக்கிறார். நாயகி படதுவக்க விழாவில், த்ரிஷா பேசியதாவது, இயக்குநர் கோவி, இப்படத்தின் கதையை என்னிடம் 1 மணிநேரத்தில் கூறிவிட்டார். அதில் 10வது நிமிடமே, எனது கேரக்டர் வந்து, படம் முழுவதும் வியாபித்துள்ளது. நாயகி காமெடி கலந்த திகில் படம் ஆகும். தற்போது நான் நடித்து வரும் அரண்மனை 2 படத்திற்கும், நாயகி படத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இந்த படத்தில் என்னுடன் கோவை சரளா, சென்ட்ராயன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

நாயகி படத்தின் போஸ்டர் டிசைனை, நான் டுவிட்டரில் போட்டபோது, அதற்கு ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு இருந்தது. அதற்கு குவிந்த வாழ்த்துக்களை பார்க்கும்போது, எனது பிறந்தநாளன்று குவிந்த வாழ்த்துக்களை போல இருந்தது. இசையமைப்பாளர் ரகு, பூரி ஜெகந்தாத் இயக்கத்திலான பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் ரகு, நாயகி படத்தின் புரோமோஷனல் பாடலை, நான் பாட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

நானும் அதற்கு சம்மதித்துள்ளேன். அப்பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இனி பாடுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வேன். அபியும் நானும் படத்தையடுத்து, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படத்தில், கணேஷ் வெங்கட்ராமன் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக த்ரிஷா கூறினார். த்ரிஷா, இதற்குமுன், கமல்ஹாசனின் "மன்மதன் அம்பு" படத்தில், கமலுடன் இணைந்து சில வரிகளை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 


அனுஷ்கா அதிகரித்த உடல் எடை எவ்வளவு தெரியுமா?



புதிய படத்துக்காக நடிகை அனுஷ்கா 20 கிலோ எடை கூடி, குண்டு பெண்ணாக காட்சி அளிக்கிறார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகை அனுஷ்கா, ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் இரு வேடங்களில் வந்து, பேயுடன் சண்டை போட்டதோடு, ‘வானம்’ படத்தில் விலைமாது வேடத்தில் துணிச்சலாக நடித்தார்.

மேலும், ‘தெய்வத்திருமகள்’ படத்தில் தோன்றிய வக்கீல் கதாபாத்திரம் பேசப்பட்டது. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் வாள் சண்டை போட்டு அதிரடி வேடத்தில் கலக்கினார். ‘பாகுபலி’யிலும் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு, அரண்மனையின் பாதாள குகைக்குள் அடைபட்டு கிடக்கும் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் குண்டு பெண்ணாக இன்னொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உடல் பருமனாக இருக்கும் பெண் கேலி, கிண்டலுக்கு ஆளாகி, பிறகு வைராக்கியத்தோடு கடும் உடற்பயிற்சிகள் செய்து எப்படி தன் உடம்பை ஒல்லியாக மாற்றுகிறார் என்பதே கதை.

இந்த படத்துக்காக அனுஷ்கா, 20 கிலோ எடை கூடி குண்டு பெண்ணாக மாறியிருக்கிறார். இதற்காக தினமும் நிறைய சாப்பிட்டாராம். புரோட்டீன் உணவுகளையும் அதிக அளவு சாப்பிட்டு, எடை கூட்டி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது

 

அனுஷ்கா குண்டாக இருப்பது போன்ற படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது




வேலாயுதம் படத்தின் தொடர்ச்சி ‘தனி ஒருவன்’ 


 
விஜய் தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் தடுமாறிய போது வேலாயுதம் தான் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் தனி ஒருவன். இப்படத்தின் ட்ரைலர் பார்க்கையில் வேலாயுதம் சாயல் தெரிகின்றதே என சிலர் கேட்டனர். இதற்கு விளக்கம் அளித்த ராஜா ‘ வேலாயுதம் படத்தின் தொடர்ச்சியாக சமுதாயத்தின் மீதான இன்னொரு பார்வையாக ‘தனி ஒருவன்’ இருக்கும் மற்றப்படி அதன் இரண்டாம் பாகம் இது இல்லை. “எதை வேண்டுமானாலும் சொல். ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ளும் முறையில் சொல்” என்று என் குருநாதரான என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அவரது அந்த ஆலோசனையைத்தான் நான் எனது எல்லாப் படத்திலும் கடைப்பிடித்து வந்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
விஜய் தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் தடுமாறிய போது வேலாயுதம் தான் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் தனி ஒருவன். இப்படத்தின் ட்ரைலர் பார்க்கையில் வேலாயுதம் சாயல் தெரிகின்றதே என சிலர் கேட்டனர். இதற்கு விளக்கம் அளித்த ராஜா ‘ வேலாயுதம் படத்தின் தொடர்ச்சியாக சமுதாயத்தின் மீதான இன்னொரு பார்வையாக ‘தனி ஒருவன்’ இருக்கும் மற்றப்படி அதன் இரண்டாம் பாகம் இது இல்லை. “எதை வேண்டுமானாலும் சொல். ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ளும் முறையில் சொல்” என்று என் குருநாதரான என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அவரது அந்த ஆலோசனையைத்தான் நான் எனது எல்லாப் படத்திலும் கடைப்பிடித்து வந்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies