சினிமா செய்தித் துளிகள் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டும் திரிஷா

19 Jul,2015
 

ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டும் திரிஷா


திரிஷா
சூழ்நிலைகள் தன்னை சோதித்துப் பார்த்த போதெல்லாம் தனிமையில் அதிக நேரத்தைச் செலவிட்ட த்ரிஷா ஒரு கட்டத்தில் எல்லா அனுபவங்களும் தன்னை புடம் போட்டு தங்கமாக்குவதாக தேற்றிக் கொண்டார்.

அந்த சமயங்களில் புரட்டிப் பார்த்த புத்தகங்கள் தன்னம்பிக்கை பற்றியதாகவும் ஆன்மீகத் தேடலுக்கு படிக்கட்டுகளாகவும் அமைய அதுவே அற்புதமான ஆதரவாக மாறியதாம்.

அதன் பலனாக மீண்டும் திரையுலகில் ஒரு வெற்றி வலம் வருவது என முடிவு செய்துள்ளார். கூடவே, ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவு புத்தகங்களை தேடித்தேடி படித்து வருகிறாராம். இதனால் மன அமைதியும் நிம்மதியும் அதிகரித்துள்ளதாகச் சொல்கிறாராம்.




ஒரு புகைப்படத்திற்காக விஜய்யை கோபத்திற்கு ஆளாக்கிய ஸ்ரீதேவி


இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது, இப்படத்தில் ஸ்ரீதேவி ஒரு முக்கியமான ராணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஸ்ரீதேவி ஒரு நாள் படப்பிடிப்பிற்கு தன் மகளை அழைத்து வந்துள்ளார். அவரை யாரோ தெரியாமல் போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதை அறிந்த ஸ்ரீதேவி, படக்குழுவிற்கு செம்ம ரைடு விட்டுள்ளார். இந்த செய்தியை தெரிந்து கொண்ட விஜய் நேரில் வந்து சமாதானம் செய்தும் ஸ்ரீதேவி சமாதானாம் ஆவதாக இல்லையாம்.




ரஜினிகாந்த்துக்கு நானா ஜோடி! மறுக்கும் ராதிகா ஆப்தே


 இயக்குநர் ரஞ்சித் இயக்கத்திலான படத்தில், ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக தான் நடிக்க உள்ளதாக வந்துள்ள தகவல் வெறும் வதந்தி தான் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
 
அட்டகத்தி படத்தின் மூலம், இயக்குநர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் பா.ரஞ்சித், கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். முதல்படம் வெற்றிப்படமாக அமையவே, அடுத்ததாக, கார்த்தி நடிப்பில், மெட்ராஸ் படத்தை இயக்கினார். அப்படமும், ரஞ்சித்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது.
 
லிங்கா படம் ஏற்படுத்திய தோல்வியின் காரணமாக, புதுமுக இயக்குநரின் படத்தில் நடிப்பதன் மூலமே, தமிழ்த்திரையுலகில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க முடியும் என்று ரஜினி நினைத்திருந்த நிலையில், ரஞ்சித்தின் படங்கள், ரஜினிக்கு புலப்பட்டன. பின் ரஜினி - ரஞ்சித் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. பின் சமீபத்தில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை, கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இயக்குநர் ரஞ்சித், பட துவக்கத்திற்கு முன்பே, அதுகுறித்த காட்சிகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக பயிற்சி பட்டறைகளை நடத்துவது வழக்கம். இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபடுவர். அதுபோலவே, ரஜினி நடிக்க உள்ள பெயரிடப்படாத புதுப்படத்திற்காகவும், வொர்க்ஷாப்பை உருவாக்கி, படக்குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினியும், இதில் கலந்துகொண்டார்.
 
இந்நிலையில், இந்த படத்தில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக, ராதிகா ஆப்தே நடிக்க உள்ளதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதனிடையே, இச்செய்தி்க்கு, ராதிகா ஆப்தே மறுப்பு தெரிவித்துள்ளார். இது வெறும் வதந்தி தான் என்று ராதிகா ஆப்தே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதற்குள் இதுபோன்ற இதுபோன்ற எத்தனை செய்திகள் வரவிருக்கின்றனவோ....
 
ரஞ்சித் டீம், படத்தில் நடிக்க உள்ள நடிகை மற்றும் படக்குழுவினர் குறித்த அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




கங்கனா ரணவத் மது அருந்துவாரா?


கவர்ச்சி, நடிப்பு இரண்டிலும் கலக்குபவர், கங்கனா ரணவத்.

அவருடன் ஒரு விறுவிறு பேட்டி...

‘நான் ராணிகளின் ராணி’ என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்களே?

அப்போது நான் குடித்திருந்திருப்பேன் (சிரிக்கிறார்).

இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டு. ‘குயின்’ படத்தில் உங்கள் நடிப்புக்காக விருதுகள் குவிந்தன. இப்போது ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ படம் வசூலை குவிக்கிறது. உங்கள் காட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறதே?

பத்தாண்டுகளுக்கு முன்பு 18 வயதுப் பெண்ணாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி திரையுலகுக்குள்  நுழைந்தேன். நான் எல்லாவித நடிப்புச் சோதனைகளிலும் இறங்கிவிட்டேன். காலத்துக்கு ஏற்றதுபோல் எந்த மாதிரி படங்கள் ஓடுகின்றனவோ அம்மாதிரி படங்   களில் நடித்தேன். அது எனக்குக் கைகொடுக்கவில்லை. எனவே நான் எனது சொந்த வழியில் செல்ல ஆரம்பித்தேன். அதுதான் என் புகழுக்கு காரணம்.

அனுராக் பாசுவின் ‘கேங்ஸ்டர்’ படமும் உங்களை கவுரவப்படுத்தியிருக்கிறதே?

அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆசிய சினிமா விருதை சிங்கப்பூரில் பெற்றேன். ஆனால் அதற்கு, இங்கே இந்தியாவில் என்னோடு அறிமுகமான சில நடிகைகள் ரொம்பவே சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு, இங்கே வித்தியாசமான படங்களுக்கு பெரிதாக இடமில்லை. மலைப்பிரதேசத்தில் இருந்து வந்த பெண் என்ற வகையில் எனக்கு அப்போது சினிமாவைப் பற்றி அதிகமாகவும் தெரியாது. இன்றைக்கோ, ஐந்தாறு வர்த்தக ரீதியான படங்களுக்கு நடுவில், நடிக்க வாய்ப்புள்ள ஒரு படத்தில் தோன்றலாம். வழக்கம்போல நடிக்காமல், வித்தியாசமாக நடிக்கும்  சவால் எனக்குப் பிடித்திருக்கிறது.

முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நீங்கள் மறுத்து விடுகிறீர்களே?

சூப்பர்ஸ்டார் நடிகர்களுடன் அதிசாகசப் படங்களில் நடிக்கும்போது நமக்கு சமமான வாய்ப்புக் கிடைக்காது. ‘டாப்’ நடிகர்களின் படங்களில் அவர்களுக்காகவே கதைகள் எழுதப்படுகின்றன. காரணம், அவர்களை காணத்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். ஆனால், சம வாய்ப்புள்ள படத்தில் நடிக்கத்தான் எனக்கு விருப்பம்.

ஆனால், விஷால் பரத்வாஜ் தனது ‘ரங்கூன்’ படத்தில் சைப் அலிகான், ஷாகித் கபூர் என்று இரு முன்னணி நடிகர்களுடன்  நடிப்பதற்கு உங்களை எப்படிச் சம்மதிக்க வைத்தார்?

‘ரங்கூன்’, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடக்கும் கதை கொண்ட படம். அதற்கென்று பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட் எல்லாம் தேவை. விஷால் பரத்வாஜுக்கு என்று முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள், ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ படத்துக்குப் பிறகு இதில் நடிப்பதற்கு என்னையும் அவரால் சம்மதிக்க வைக்க முடிந்தது. நான் ஒரு ஆய்வு தொடர்பான வேலைகளுக்காக நியூயார்க் செல்கிறேன், அதையடுத்து, சில நாட்கள் நாடோடி போல வாழும் வகையில் மெக்சிகோவில் உள்ள சிறு தீவுக்குச் செல்கிறேன். நான் நினைத்தபடி எல்லாம் வாழ எனக்கும் சில நாட்கள் தேவைப்படுகின்றன.

இப்போது நீங்கள் எந்த ஆணுடனும் ‘நெருக்கமான’ உறவில் இல்லைபோல் தெரிகிறதே?

நமக்கென்று ஒரு நெருக்கமான உறவு இருப்பது நல்லதுதான். இல்லாவிட்டாலும் ஒன்றும் மோசமில்லை. இப்போதைக்கு நான் யாருடனும் உறவில் இல்லை. ஆனால் எனது தனிமை எனக்குப் பிடித்திருக்கிறது. நம்மை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்ல விஷயம்தான். முறிந்துபோன உறவின் வலி எனக்குத் தெரியும். அது உண்ணவும் விடாது. உறங்கவும் விடாது. சிலசமயங்களில், நான் ஏன் ஆண்களுடனான நட்பு விஷயத்தில் துரதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். ஆனால் என் இதயம் உடைந்தபோது கூட நான் நம்பிக்கையை இழக்கவில்லை. நான் சந்தித்த துயரங்கள் என்னை நம்பிக்கை மிகுந்த பெண்ணாக மாற்றியிருக்கின்றன.




மெட்ரோ ரயிலில் சென்னையைச் சுற்றிப் பார்த்த த்ரிஷா

சென்னை: சென்னையில் மெட்ரோ டிரெயின் அறிமுகமாகி பலரின் வரவேற்பையும் பெற்று வரும் வேளையில், நடிகை த்ரிஷா 2 தினங்களுக்கு முன்னர் மெட்ரோ ட்ரெய்னில் சென்னையைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

வெள்ளிகிழமைகாலை 7.20 மணிக்கு ஆலந்தூர் ரெயில் நிலையம் சென்ற த்ரிஷா அங்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயில் நிலையம் உள்ளே வந்திருக்கிறார். அங்கு மெட்டல் டிடெக்டர் கொண்டு த்ரிஷாவை பெண் பாதுகாவலர்கள் பரிசோதித்தனர்.

எஸ்கலேட்டர் மூலமாக 4 வது மாடிக்குச் சென்ற த்ரிஷா கோயம்பேடு செல்லும் மெட்ரோ டிரெயினில் ஏறி உள்ளே சென்றார், அவரைப் பார்த்ததும் சந்தோசமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பயணிகளுடன் பயணம் செய்த த்ரிஷா அரும்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டார். மெட்ரோ பயணம் குறித்து த்ரிஷா கூறும்போது " மன்மதன் அம்பு திரைப்படத்தின் போது ஐரோப்பிய மெட்ரோ ட்ரெயின்களில் பயணம் செய்து இருக்கிறேன்.

@trishtrashers takes the Metro | i thoroughly enjoyed the ride - TOI pic.twitter.com/LUYDgdkqry
— Trisha Krishnan (@ActressTrisha) July 18, 2015

மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் போது நமது மெட்ரோ ட்ரெயின்கள் சுத்தமாகவும் நன்றாகவும் இருக்கின்றன, மெட்ரோ ட்ரெயினில் சென்னையைச் சுற்றிப் பார்த்தபோது த்ரில்லிங்காகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று கூறியுள்ளார்.


மணிரத்னம் படத்தில் நயன்தாரா ?

மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு 'கோமாளி' என பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. அந்தப் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் சொன்னார்கள். இப்போது அவர்களுடன் நயன்தாராவும் நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளாராம். நயன்தாரா இதுவரை மணிரத்னம் இயக்கத்தில் நடித்து இல்லை. இதற்கு முன் 'ராவணன்' படத்தில் கூட பிரியாமணி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவைக் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் வந்தன.

இப்போது மணிரத்னம் குழுவினர் நயன்தாராவைச் சந்தித்து கதையைச் சொன்னதாகவும் கதையைக் கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். இப்படி படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், நயன்தாரா என முக்கியமான நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் படத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மணிரத்னம் படம் என்றாலே இந்தியாவே திரும்பிப் பார்க்கும். அதோடு இந்த நட்சத்திரங்களும் படத்தில் நடிப்பதன் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் இந்தப் படம் மிகப் பெரிய வசூலை அள்ளவும் வாய்ப்பாக இருக்கும். மணிரத்னம் படத்தைப் பற்றி நாளுக்கு நாள் புதிய செய்திகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவராகவே அறிவிக்கும் வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதும் உண்மை.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies