சினிமா செய்தித் துளிகள் இன்டர்நெட்டில் பரவும் நயன்தாராவின் போலி ஆபாச படம் : அதிர்ச்சியில் நயன்

08 Jul,2015
 

இன்டர்நெட்டில் பரவும் நயன்தாராவின் போலி ஆபாச படம் : அதிர்ச்சியில் நயன்



  

நிர்வாண பெண் படத்துடன் நயன்தாராவின் முகத்தை ஒட்டி போலி ஆபாச படத்தை விஷமிகள் இன்டர்நெட்டில் பரவவிட்டுள்ளனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கதாநாயகிகளின் ஆபாச படங்களை இணையதளங்களிலும், வாட்ஸ் அப்களிலும் சமீப காலமாக அதிகம் காணமுடிகிறது. செல்பியில் எடுத்த படங்களும் பாத்ரூமில் திருட்டுத்தனமாக கேமராவை ஒளித்து வைத்து எடுத்த படங்களும் வந்த வண்ணம் உள்ளன.

நடிகைகள் வசுந்தரா, லட்சுமிமேனன், ஹன்சிகா, ராதிகா ஆப்தே போன்றோர் பெயரில் படங்களும், வீடியோக்களும் பரவி உள்ளது. ஹன்சிகா பாத்ரூமில் குளிப்பது போன்று வீடியோவை வெளியிட்டு இருந்தனர். முதல் பாகம், இரண்டாம் பாகம் என தொடர்ந்து இந்த வீடியோக்கள் வந்தது.

லட்சுமிமேனன் பெயரிலும் ஆபாச வீடியோவே வந்தது. மற்ற நடிகைகளை ஆபாச படங்களாக வெளியிட்டு இருந்தனர். ராதிகா ஆப்தே ஹாலிவுட் படமொன்றுக்கு ஆபாசமாக நடித்த வீடியோ காட்சியொன்றையும் திருடி வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா பெயரில் ஆபாச படம் இணைய தளம் மற்றும் வாட்ஸ் அப்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த படத்தை கூர்ந்து பார்க்கும்போது அது போலி படம் என்பது தெரியவந்தது. வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண்ணின் நிர்வாண உடலோடு நயன்தாராவின் முகத்தை ஒட்டி மார்பிங் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கலாமா? என்று நயன்தாரா தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது ‘மாயா’, ‘நானும் ரவுடி தான்’, ‘தனி ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’, ‘திருநாள்‘, ‘காஷ்மோரா’ என ஆறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இவை விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீசாக இருக்கின்றன.



பாபநாசம் படத்துக்கு வரிவிலக்குக் கொடுக்காததன் உண்மைக்காரணம்?



 
கமல் நடித்து வெளிவந்திருக்கும் பாபநாசம் படம் மக்களிடையே வரவேற்றைப் பெற்றிருக்கிறது. அந்தப்படத்துக்குத் தமிழகஅரசு வரிவிலக்குத் தர மறுத்த்திருக்கிறது.

தணிக்கைக்குழுவினரால் யு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த போதும் படத்தின் உள்ளடக்கம் பற்றி வரிவிலக்குக் குழு உறுப்பினர்கள் கொடுத்த அறிக்கைகளின் அடிப்படையில் வரிவிலக்கு மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

காவல்துறையினர் சிறுமிகளைத் துன்புறுத்தும் காட்சிகள் காவல்துறையினர் மீதான நம்பிக்கையைக் கெடுத்துவிடும் என்றும், தவுறு செய்த ஒருவன் பாவம் கழிக்க ஆற்றில் குளித்தால்போதும் என்கிற பிற்போக்கு சிந்தனை படத்தில் இருக்கிறதென்றும், பள்ளி மாணவியைக் குளிக்கும்போது படம் பிடித்துக்காட்டுவது சரியில்லை என்றும் காரணங்களைக் கூறி இத்திரைப்படம் வரிவிலக்குக்குத் தகுதியானதல்ல என்கிற பரிந்துரை செய்திருக்கிறார்களாம்.

அவற்றை ஏற்று இத்திரைப்படத்துக்கு வரிவிலக்குக் கொடுக்கவேண்டாமென் அரசு முடிவு செய்திருக்கிறது. இன்னொரு பக்கம், வரிவிலக்குக் குழுவினர் அரசாங்கம் எதை விரும்புகிறதோ அதை எழுதிக்கொடுத்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே உதயநிதி படத்துக்கு வரிவிலக்கு மறுத்தபோது ஏல்லோரும் ஒரேமாதிரி எழுதிக்கொடுத்ததையும் எடுத்துக்காட்டாகச் சொல்கிறார்கள்.

அப்படியானால் இந்தப்படத்துக்கு வரிவிலக்கு மறுக்க என்ன காரணம்? படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சிக்குக் கொடுத்ததால்தான் இந்தப்படத்துக்கு வரிவிலக்குக் கொடுக்க மறுத்துவிட்டார்கள் என்றொரு கருத்தும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.


புதிய சிக்கலில் சிம்புவின் வாலு

 



சிம்புவுக்கு படங்கள் ரிலீசாகிறதோ இல்லையோ அவரைப்பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துக் கொண்டுத்தான் இருக்கின்றன. அதுவும், குறிப்பாக சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படத்தின் செய்திகள் கடந்த இரண்டு வருடங்களாக வந்த வண்ணம் உள்ளது. ஆனால் படம் தான் இன்னும் ரிலீசாகவில்லை.

இப்படம் ஆரம்பித்தபிறகு சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்சனை, தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ்ன் பண பிரச்சனை என பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்தப் படம் ஒருவழியாக ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது புது பிரச்சனை ஒன்று எழுந்திருக்கிறது.

மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் ‘வாலு’ படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருக்கிறதாம். அதில் “வாலு படத்தின் வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் தற்போது வேறு ஒருவர் மூலமாக படத்தை வெளியிட முயன்று வருகிறார்கள். எனவே ‘வாலு’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

வாலு போய் கத்தி வந்த கதையாக, பல தடைகளைக் கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாலு படம் புதிய பிரச்சினையில் சிக்கியிருப்பதால் திட்டமிட்டபடி ஜூலை 17ம் தேதி படம் வெளியாகுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.



சேற்றில் மாட்டிக்கொண்ட 'கத்துக்குட்டி' ஸ்ருஷ்டி! 




 
இரா.சரவணன் இயக்கத்தில் நரேன் - ஸ்ருஷ்டி நடிக்கும் படம் 'கத்துக்குட்டி'. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. அப்போது வயலில் நாற்று நடுவதுபோல் ஸ்ருஷ்டிக்கு சீன் வைத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். மும்பையைச் சேர்ந்த ஸ்ருஷ்டிக்கு எப்படி சேற்றில் இறங்கி நாற்று நடத் தெரியும்? அதனால் ஸ்ருஷ்டி வயலில் இறங்காமல் தயங்கி இருக்கிறார். உடனே, துணைக்கு கிராமத்துப் பெண்கள் சிலரை வரவழைத்து அவர்கள் துணையுடன் ஸ்ருஷ்டியை வயலில் இறக்கி விட்டிருக்கிறார்கள். கிராமத்துப் பெண்கள் சொல்லிக் கொடுத்ததைப்போல் நாற்று நடும் காட்சியில் அசத்தலாக நடித்திருக்கிறார் ஸ்ருஷ்டி.
இரா.சரவணன் இயக்கத்தில் நரேன் - ஸ்ருஷ்டி நடிக்கும் படம் 'கத்துக்குட்டி'. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. அப்போது வயலில் நாற்று நடுவதுபோல் ஸ்ருஷ்டிக்கு சீன் வைத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். மும்பையைச் சேர்ந்த ஸ்ருஷ்டிக்கு எப்படி சேற்றில் இறங்கி நாற்று நடத் தெரியும்? அதனால் ஸ்ருஷ்டி வயலில் இறங்காமல் தயங்கி இருக்கிறார். உடனே, துணைக்கு கிராமத்துப் பெண்கள் சிலரை வரவழைத்து அவர்கள் துணையுடன் ஸ்ருஷ்டியை வயலில் இறக்கி விட்டிருக்கிறார்கள். கிராமத்துப் பெண்கள் சொல்லிக் கொடுத்ததைப்போல் நாற்று நடும் காட்சியில் அசத்தலாக நடித்திருக்கிறார் ஸ்ருஷ்டி.
    

இயக்குநர் 'டேக் ஓகே' சொல்ல, வயலில் இருந்து கிளம்பி வர வேண்டிய ஸ்ருஷ்டி அங்கேயே நின்றிருக்கிறார். அப்போதுதான் யூனிட்டுக்குப் புரிந்திருக்கிறது... ஸ்ருஷ்டியின் இரண்டு கால்களும் சேற்றில் மாட்டிக் கொண்டது. கால்களை வெளியே எடுக்க முடியாமல் ஸ்ருஷ்டி தத்தளிக்க, ஒருவழியாக கிராமத்தினரும் படக்குழுவினரும் வயலுக்குள் இறங்கி ஸ்ருஷ்டியை மீட்டிருக்கிறார்கள்.
 
 




ஹப்பா 50 லட்சம் பேராஸ திணறும் பரிணிதி சோப்ராவின் டுவிட்டர் பேஜ்.. ரசிகர்களுக்கு “லைவ் டிரீட்”



     பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பரிணிதி சோப்ரா டுவிட்டரில் கிட்டதட்ட 5 மில்லியன் (50 லட்சம்) பாலோயர்களை எட்டியுள்ளாராம். இதனைக் கொண்டாடும் வகையில் டுவிட்டரில் இன்று ரசிகர்களுடன் லைவ் சாட் செய்துள்ளார். இந்தியின் மற்றொரு முன்னணி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் கசின் இந்த பரிணிதி சோப்ரா.

பஞ்சாபி குடும்ப அழகி:

26 வயதாகும் இவர் அக்டோபர் 22, 1988 ல் ஹரியானாவில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். முதல் படத்திலேயே பிலிம் பேர் விருதை வென்று திரும்பி பார்க்க வைத்தார்.

மூன்று பட்டம் பெற்றவர்:

லண்டனில் நிதிநிர்வாகம், தொழில், பொருளாதாரம் என மூன்று பட்டங்களை பெற்றவர்.

முந்தியடிக்கும் கம்பெனிகள்:

பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவரையே தற்போது தங்கள் பிராண்டுகளுக்கு தூதுவராக நியமிக்க விளம்பர கம்பெனிகள் முந்தியடிக்கின்றன.

5 மில்லியன் ரசிகர்கள்:

அத்தகைய பேமஸ் கேர்ள் ஆகிய இவர் கிட்டதட்ட 5 மில்லியன் பாலோயர்களை டுவிட்டரில் தட்டிச் சென்றுள்ளார். அதனையடுத்து இன்று ரசிகப் பெருமக்களுடன் காலை 11.30 மணியளவில் நேரடியாக சாட் செய்த இந்த டிராமா குயின் கேர்ள் அவர்களுடைய ஃபன்னியான கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளாராம்.


  தன் 18வது வயதில் காதல் வலையில் சிக்கிய நித்தியாமேனன்!



தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் நித்யாமேனன். வெப்பம், ஜே,கே. எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

நித்யாமேனன் பற்றி வதந்திகளும் பரவுகின்றன. இயக்குனர்களை மதிப்பது இல்லை என்றும் மற்றவர்களிடம் கோபத்தில் எரிந்து விழுகிறார் என்றும் காதலில் சிக்கியுள்ளார் என்றும் கிசுகிசுக்கள் பரவுகின்றன.

இதற்கு நித்யாமேனன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

என்னை பற்றி தவறான வதந்திகள் பரவுகின்றன. நான் இயக்குனர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன். யாரிடமும் கோபப்படுவதும் இல்லை. நிறைய இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்ல வருகிறார்கள். பிடித்த கதைகளில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.

எனக்கு 18 வயதில் காதல் வந்தது. கல்லூரியில் படித்தபோது காதலித்தேன். ஆனால் இப்போது யாரையும் நான் காதலிக்கவில்லை. தனியாக சந்தோஷமாக இருக்கிறேன். நான் நடித்த படங்கள் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது பற்றி யோசிக்கமாட்டேன்.

என் கேரக்டர் சிறப்பாக வர முழு உழைப்பையும் கொடுப்பேன். வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.
இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.






எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்தில் நடிக்கும் ஸ்ரேயா ரெட்டி




தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன். இவர் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடித்து வெளிவந்த ‘காஞ்சிவரம்’ படம் தேசிய விருது பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கதையம்சம் உள்ள ஒரு படத்தை பிரியதர்ஷன் இயக்கவுள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போது இவருடன் ஸ்ரேயா ரெட்டியும் சேர்ந்துள்ளார். பிரியதர்ஷன் இயக்கத்தில் இருவரும் இணைவது இது இரண்டாவது முறை.

ஸ்ரேயா ரெட்டி, விஷால் நடிப்பில் வெளிவந்த ‘திமிரு’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, இவருக்கு தமிழில் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரங்கள் அமையவில்லை. தற்போது இந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் புதிய இடத்தை பெற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறார்.

பிரியதர்ஷன் இயக்கும் இந்த புதிய படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார். சாபு சிரில் கலை இயக்குனராகவும், பீனா பால் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்னர். இம்மாதத்தின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.

சமூக அக்கறையை வெளிப்படுத்தும் படமாக இருந்தாலும், இப்படத்திலும் காமெடி, காதல் உணர்வுகள் நிறைந்திருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies