சினிமா செய்தித் துளிகள் தனது எடையை 6 கிலோவால் குறைத்த திரிஷா!

17 Jun,2015
 

தனுஷ் படத்தை இரண்டு நாளில் முடிக்கும் எமிஜாக்சன்



‘ஐ’ படத்தின் வெற்றி எமி ஜாக்சனை தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக்கிவிட்டது. தற்போது உதயநிதியுடன் ‘கெத்து’, தனுஷுடன் ‘விஐபி-2’, விஜய்யை வைத்து அட்லி இயக்கும் புதிய படம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகியுள்ளார். இதில், ‘கெத்து’, ‘விஐபி-2’ ஆகிய இரு படங்களிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ‘விஐபி-2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 2 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளதாக எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, நேற்று முழுவதும் ஒரு வீட்டில் தனுஷ், அழகான சமந்தா, நான் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்ட படப்பிடிப்பு நடந்தது. இன்னும் இரண்டு நாட்களில் இதன் படப்பிடிப்பு முடிகிறது. சீக்கிரமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

‘விஐபி-2’ படத்தை வேல்ராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். தனுஷ், சமந்தா, எமிஜாக்சனுடன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.


சிங்கம் 3 படத்தின் கதாநாயகியை அறிவித்தார் டைரக்டர் ஹரி!



நடிகர் சூர்யாவும், டைரக்டர் ஹரியும், ‘ஆறு’ படத்தில் முதன்முதலாக இணைந்து பணியாற்றினார்கள். அதைத்தொடர்ந்து, ‘வேல்,’ ‘சிங்கம்,’ ‘சிங்கம்-2’ ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்தார்கள். 5-வது முறையாக இருவரும் ‘சிங்கம்-3’ படத்தில் இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள். இதுபற்றி நிருபரிடம் டைரக்டர் ஹரி கூறியதாவது:-

‘‘தமிழ் பட உலகில் இதற்கு முன்பு ‘முனி,’ ‘காஞ்சனா’ போன்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளன. ஆனால், அவை வேறு வேறு கதையம்சம் கொண்ட படங்கள். ‘சிங்கம்’ பட கதையின் தொடர்ச்சியாக, ‘சிங்கம்-2’ வந்தது. இப்போது, ‘சிங்கம்-2’ படத்தின் தொடர்ச்சியாக, ‘சிங்கம்-3’ வர இருக்கிறது.

ஒரே கதையின் தொடர்ச்சி மூன்றாம் பாகமாக தயாராவது, இதுதான் முதல் முறை. மூன்று பாகங்களிலும் ஒரே கதாநாயகன், ஒரே டைரக்டர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணிபுரிவதும் இதுதான் முதல் தடவை. ‘சிங்கம்’ படத்தில், சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்தார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் ஜோடிகளாக வந்தார்கள்.

‘சிங்கம்-3’ படத்தில் அனுஷ்காவும், சுருதிஹாசனும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் இரண்டாம் பாகம் படத்தில் இடம்பெற்ற ராதாரவி, நாசர் உள்பட அத்தனை நடிகர்-நடிகைகளும் மூன்றாம் பாகத்தில் இருக்கிறார்கள். இதில், சூர்யா பாதி நல்லவராகவும், மீதி வல்லவராகவும் வருகிறார். இரண்டாம் பாகத்தை விட, மூன்றாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் இன்னும் கூர்மையாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

‘‘தப்பு பண்ணுகிறவர்களை கைது செய்பவர் மட்டும் போலீஸ் அல்ல. தப்பே நடக்காமல் பார்த்துக் கொள்கிறவர்தான் போலீஸ்’’ என்ற ‘பஞ்ச்’ வசனத்துடன் சூர்யா அறிமுகமாவார். சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நான்காவது படம் இது. கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைப்பவர், அவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.

கதாபாத்திரத்துக்காக என்னென்ன செய்யலாம்? என்று தூங்காமல் யோசிப்பவர், அவர். என் படத்துக்கு வந்து விட்டால், வெறி பிடித்தவர் போல் நிற்பார். இந்த படத்தின் கதைக்காக 9 மாதங்கள் செலவிட்டு இருக்கிறேன். நான் இதற்கு முன்பு இயக்கிய ‘சாமி,’ ‘சிங்கம்’ மாதிரி கதை மிக உறுதியாக அமைந்து இருக்கிறது.

கதையும், திரைக்கதையும் தரமானதாக இருந்தால், வெற்றி நிச்சயம் என்பது என் கணிப்பு. ‘சிங்கம்-3’க்கு அனிருத் இசையமைக்கிறார். என் டைரக்ஷனில், சூர்யா படத்துக்கு அனிருத் இசையமைப்பது, இதுவே முதல் முறை. படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. காரைக்குடி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

கோவா மற்றும் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம். பொதுவாக, நான் தினமும் 5 மணி நேரம்தான் தூங்குவேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டால், தூக்கம் தொலைந்து போகும். தினம் 4 மணி நேரம் தூங்கினால் அதிகம்.’’


20 வயது காலேஜ் பெண்ணாக நடிக்க தனது எடையை 6 கிலோவால் குறைத்த திரிஷா!




நடிகை திரிஷா, சினிமாவில் நடிக்க வந்து 10 வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இருப்பினும், இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவே வலம் வருகிறார்.

இவர் தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை 2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கமலுடன் மீண்டும் இணைந்து ‘தூங்காவனம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதுமுக இயக்குனர் கோவி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்திலும் திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தில் 20 வயது காலேஜ் பெண்ணாக நடிக்கும் திரிஷா, இதற்காக 6 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார்.

எனினும், இந்த படத்தின் பிற்பாதியில் திரிஷாவின் உடல் எடை அதிகமாக இருக்கவேண்டும் என்பதால், அதன் படப்பிடிப்பு மூன்று மாதங்களுக்கு பிறகுதான் நடைபெறும் என கூறப்படுகிறது

இப்படத்தை திரிஷாவின் மேனேஜர், கிரிதர் தனது கிரிதர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

திகில் நிறைந்த காமெடி படமாக இது உருவாகவிருக்கிறது. திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பாடக்கர்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.


திருமணம் எப்போது?: காஜல் அகர்வால்

 



காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். தனுசுடன் 'மாரி' படத்திலும் விஷாலுடன் 'பாயும் புலி' படத்திலும் நடிக்கிறார். இந்தி பட மொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

காஜல் அகர்வாலுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் செய்திகள் பரவி உள்ளன. தொழில் அதிபர் ஒருவரை நிச்சயம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்தார். அவர் கூறியதாவது:–

நான் திருமணத்துக்கு அவசரப்படமாட்டேன். இப்போதைக்கு என் திருமணம் நடக்காது. அதற்கு நிறைய காலம் உள்ளது. ஒவ்வொரு விஷயமும் அதற்குரிய நேரத்தில் நடக்க வேண்டும். அது போல் என் திருமணமும் அதற்கான நேரம் வரும் போது நடக்கும்.

சினிமாவில் பெயர் சம்பாதிக்கவும், பணம் சம்பாதிக்கவும்தான் நடித்துக் கொண்டு இருக்கிறேன். என் முடிவுகளை நானே சுயமாக எடுக்கிறேன்.

பெரும்பாலான வீடுகளில் பெண்கள் அவர்களின் அம்மாக்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கிறார்கள். நான் அப்படி இல்லை. என் தாயை தொந்தரவு செய்ய மாட்டேன். நானே சொந்தமாக முடிவுகள் எடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடங்கியது அரண்மனை 2 படப்பிடிப்பு – ஹன்சிகா, திரிஷா பங்கேற்பு!




ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து வசூலிலும், பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனிலும் சக்கைபோடு போட்ட படம் ‘அரண்மனை’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். சந்தானம், வினய், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

பேய் படத்தில் காமெடியை புகுத்தி எடுக்கப்பட்டதால் இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்தனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சுந்தர்.சி முடிவு செய்தார். அதற்கான பணிகளிலும் தீவிரமாக இறங்கினார்.

இதையடுத்து அரண்மனை இரண்டாம் பாகத்தில் நடிக்க திரிஷா, ஹன்சிகா மொத்வானி, பூனம் பாஜ்வா ஆகியோரை கதாநாயகிகளாக தேர்வு செய்தார். சித்தார்த் கதாநாயகனாகவும், காமெடிக்கு சூரியும் தேர்வானார்கள். மேலும், படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்கினார் சுந்தர்.சி. இந்த படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகா, திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இந்த படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.

‘அரண்மனை -2’ படத்தை குஷ்பு தனது ஆவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங் வாழ்க்கையை படமாக்க எதிர்த்து ஐஸ்வர்யா !ராய்க்கு நோட்டீஸ்



பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங் வாழ்க்கை சினிமா படமாகிறது.

இவர் 20 வருடங்களுக்கு மேல் பாகிஸ்தான் சிறையில் இருந்தார். உளவு பார்த்ததாகவும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு தண்டித்தது.

டைரக்டர் ஓமங்குமார் பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித்சிங்குக்கு நேர்ந்த கொடுமைகளை அப்படியே படமாக்குகிறார். இதில் சரப்ஜித்சிங் தங்கை கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்.

சகோதரன் விடுதலைக்காக அவர் போராட்டங்களில் ஈடுபடுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

இந்த படத்துக்கு சர்பஜித்சிங் சகோதரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். கதையில் உண்மைகள் திரித்து கூறப்படுகின்றன என்று தெரிவித்து ஐஸ்வர்யா ராய்க்கும், டைரக்டர் ஓமங்குமாருக்கும் அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.



அஜித்துக்கு காலில் விழுந்தால் சுத்தமாக பிடிக்காதாம்!




சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தனி மனிதனாக வந்து போராடி ஜெயித்தவர் அஜித். இப்போது அதிகப்படியான ரசிகர்களின் பேவரிட் ஹீரோவாக இருந்து கொண்டிருக்கிறார்.

தனது ரசிகர் மன்ற நபர்கள் இரண்டு பேர் அடித்துக்கொண்டார்கள் என்பதற்காகவே ரசிகர் மன்றம்கூட தனக்கு தேவையில்லை என்று கலைத்தவர் அஜித். ஆனபோதும் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லை.

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். மேலும், தன்னிடம் உதவியாளர்களாக இருப்பவர்களோ அல்லது படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்பவர்களோ யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்று தனக்கு தெரியவந்தால், மாலையில் தான் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அந்த நபரை அழைத்து அவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அஜித்.

அப்படி அஜித் செய்த உதவியைப்பார்த்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த நபர்கள் அவரது காலில் விழுந்தால் அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காதாம். உடனே அவர்களை தடுத்து, நான் என்ன கடவுளா? உங்களை மாதிரி நானும் சாதாரண மனுசன்தான். என் கால்ல ஏன் விழுறீங்க? என்று சொல்லி திட்டுவாராம்.

அதேசமயம் அவர்கள் தனது உதவியை வாங்கிக்கொண்டு தன்னை வணங்கினால் தானும் பதிலுக்கு அவர்களை கையெடுத்து வணங்கி வழியனுப்பி வைக்கிறாராம் அஜித்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies