சினிமா செய்தித் துளிகள் விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் அஜித் மனைவியின் தங்கை

15 Jun,2015
 


விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பாவனா

 


மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருடைய அழகும், நடிப்பும் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால், ‘வெயில்’, ‘தீபாவளி’, ‘கூடல் நகர்’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழில் ஆர்வம் காண்பித்து வந்த பாவனா கடைசியாக அஜித்துடன் இணைந்து ‘அசல்’ படத்தில் நடித்திருந்தார்.

இதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் குறையவே மீண்டும் மலையாளம் பக்கம் திரும்பினார். அங்கு பல படங்களை கைவசம் வைத்து நடித்து வந்த பாவனாவிற்கு தமிழில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதை அவர் தவறவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து பாவனா கூறும்போது, எனக்கு விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது நான் மலையாளப் படம் ஒன்றில் நடித்து வந்ததால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக தவறவிட்டேன். எனக்கு தமிழில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது. அவை அனைத்தையும் நான் தவிர்த்துவிட்டேன். அந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டானது. அதனால் எனக்கு எந்த வருத்தமும் ஏற்படவில்லை. ஆனால் விஜய் படத்தை தவறவிட்டது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.


       நயன்தாரா, அனுஷ்கா படங்கள் ரிலீசுக்கு தயார்



நயன்தாராவின் ‘மாயா’, அனுஷ்காவின் ‘ருத்ரமாதேவி’ இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘மாயா’ பேய் படமாகவும் ‘ருத்மாதேவி’, யுத்த களத்தில் வீரதீரமாக சண்டை போட்டு எதிரிகளை அழிக்கும் ஒரு மகாராணியை பற்றிய படமாகவும் வருகிறது.

மாயா படத்தில் நயன்தாரா பேய் பிடித்த பெண் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூரியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன. இதன் டிசர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா மகாராணி கேரக்டரில் வருகிறார். வாள் சண்டை, குதிரை சவாரி போன்ற பயிற்சிகள் எடுத்து இதில் நடிக்கிறார். ராணா, அல்லுஅர்ஜுன், பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் போன்றோரும் இதில் நடிக்கின்றனர். குணசேகர் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கில் இப்படம் வருகிறது.

இப்படத்தைதணிக்கை குழுவினர் பார்த்து எந்த காட்சியையும் வெட்டாமல் ‘யு’ சான்று அளித்துள்ளனர். இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் ஸ்டிரியோ கிராபிக் 3டி படமாக இது வருகிறது.


விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் அஜித் மனைவியின் தங்கை



‘லிங்கா’ படத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் ‘நான் ஈ’ வில்லன் சுதீப்பை வைத்து புதிய கன்னட படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். சுதீப் தற்போது ‘புலி’ படத்தின் விஜய்-க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை முடித்தபிறகு கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் கே.எஸ்-ரவிக்குமார் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம்? என்று நீண்ட நாட்களாக நாயகி தேடுதல் வேட்டை நடத்தி வந்தார் கே.எஸ்.ரவிக்குமார். இந்நிலையில், தற்போது அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கையான பேபி ஷாமிலியை இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

பேபி ஷாமிலி, தமிழில் ‘அஞ்சலி’, ‘துர்கா’, ‘சின்னக் கண்ணம்மா’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தெலுங்கில், ஓய் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.ரவிக்குமார்-சுதீப் இணையும் புதிய படத்திற்கும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சோனியா அகர்வால்


 


சோனியா அகர்வால் ‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுபயலே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். தற்போது விவேக் ஜோடியாக நடித்த பாலக்காட்டு மாதவன் படம் ரிலீசுக்கு தயாராகிறது. மேலும் இரு தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

சோனியா அவர் கூறியதாவது:–

பன்னிரெண்டு வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சிறிய இடைவெளிக்கு பிறகு 'பாலக்காட்டு மாதவன்' படத்தில் நடித்தேன். காமெடி படமாக தயாராகியுள்ளது. இதற்கு முன்பு இப்படி கலகலப்பான காமெடி படத்தில் நடித்தது இல்லை.

சினிமாவுக்கு மீண்டும் வந்ததை தொடர்ந்து கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைத்துள்ளேன். தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். பாலக்காட்டு மாதவன் படத்தில் கொஞ்சம் குண்டாக தெரிய வேண்டும் என்பதற்காக உணவில் ‘சிக்கன்’ சேர்த்து சாப்பிட்டேன்.

நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதுமாதிரி படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

இப்வாறு சோனியா அகர்வால் கூறினார்.


ரோமியோ ஜூலியட் படத்தை வீடியோ எடுத்த 3 பேர் கைது



கோவை பீளமேடு உடையாம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள தியேட்டரில் ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படம் திரையிடப்பட்டு இருக்கிறது. நேற்று காலைக்காட்சி படம் ஓடிக்கொண்டு இருந்தது.

அப்போது தியேட்டரில் சினிமா பார்த்து கொண்டு இருந்த 2 பேர் திரையில் ஓடிய படத்தை வீடியோ காமிராவில் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர். அருகில் இருந்த சிலர் இது குறித்து தியேட்டர் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தியேட்டருக்கு விரைந்து வந்து 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் பெயர் சுப்புராஜ், கண்ணன் என்றும் மதுரையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்களுக்கு உதவியாக தியேட்டர் ஊழியர் செல்வம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் பிடித்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

இவர்கள் வீடியோ காமிரா மூலம் திரையில் படத்தை வீடியோ எடுத்து திருட்டு சி.டி. தயாரித்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து லேப்டாப், வீடியோ காமிரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies