சினிமா செய்தித் துளிகள் ஒன்றல்ல, இரண்டல்ல 10 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்

27 Apr,2015
 

ரஜினி பட டைட்டில் ‘தனிக்காட்டு ராஜா’வில் விக்ரம் பிரபு!


‘சிகரம் தொடு’, ‘வெள்ளக்காரதுரை’ படங்களை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘இது என்ன மாயம்’. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நவ்தீப், அம்பிகா, காவ்யா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நீரவ் ஷா  ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாகா’ படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இப்படங்களை அடுத்து புதிதாக ஒரு படத்தில் நடிக்க விக்ரம் பிரபு ஒப்புக் கொண்டு இருக்கிறார். ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய நவீன் ராகவன் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா’ என பெயர் வைத்துள்ளனர்.  இதே தலைப்பில்  ரஜினிகாந்த்,  ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, சில்க் ஸ்மிதா, செந்தாமரை ஆகியோர் நடித்த படம் 1982ஆம் வெளியானது. வி. சி. குகநாதன் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இப்படத்திற்கும் இளையராஜாதான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையுலகில் இசைஞானி என்றும் தனிக்காட்டு ராஜாதான் போல..!



செம்மரம் கடத்தி சொகுசு வாழ்கை வாழும் நடிகை


கடந்த ஏப்ரல் 7ம் தேதி, ஆந்திர வனப்பகுதியில், செம்மரம் கடத்தியதாக, தமிழகத் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. இச்சமபவம் குறித்து ஆந்திர அரசும் காவல்துறையும் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

அதே வேளை, இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்ற சர்ச்சையான கருத்தும் வெளியானது. இது குறித்து தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இச்சம்பவத்தை அடுத்து செம்மரக்கடத்தல் கும்பல்களை கூண்டோடு பிடிப்பதில் ஆந்திர போலீஸார் கடும் முயற்சி செய்துவருகின்றனர். இதில் நேற்று முந்தினம், தமிழ் சினிமா நடிகர் சரவணன் என்பவர் பிடிபட்டார்.

இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதை அடுத்து இச்சம்பவத்தில் நடிகை ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஊடகங்களில் வெளியான தகவல் பின்வருமாறு:

நடிகர் சரவணனின் கைதைத் தொடர்ந்து ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ராமுடு நிருபர்களிடம் கூறுகையில்,

”செம்மர கட்டைகள் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு படத்தில் நடித்துள்ளதோடு, தனது பினாமிகள் மூலமாக பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை தயாரிக்க நிதி உதவி செய்துள்ளார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் பலருடன் இவருக்கு தொடர்பு உள்ளது.

அவர்களுக்கு தனது சொந்த செலவில் ஆடம்பர பங்களாக்களையும், விலை உயர்ந்த கார்களையும் பரிசளித்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சரவணனின் வங்கி கணக்கு மூலமாக யாருக்கெல்லாம் பண பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில் பல முக்கிய புள்ளிகள், சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

செம்மர கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் பலர் சென்னையை மையமாக வைத்து தொழில் செய்து வந்துள்ளார்கள். சரவணனின் சகோதரர் லெட்சுமணன் என்பவரும் ஒரு படத்தில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது,” என்று கூறினார்.

இதை அடுத்து சரவணன் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தப்பி ஓடிய ரவி, சண்முகம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர் களின் குடோனில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள செம் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யபபட்டது.

இதற்கிடையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட் டத்தைச் சேர்ந்த மஸ்தான் வலி என்பவரும், அவரது சகோதரர் சங்கர்நாயக் என்பவரும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இந்த தகவல் கிடைத்த உடனேயே மஸ்தான் வலியைபோலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் சினிமாபடம் தயாரிப்பில் ஈடபட்டதும், அவரது படத் தில் கதாநாயகியாக நடித்த நடிகை நீத்து அகர்வாலை காதலியாக வைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தியதும் தெரிய வந்தது.

மஸ்தான் வலி தெலுங்கில் ’பிரேம பிரயாணம்’என்ற பம் தயாரித்தார். அதில் நீத்து அகர்வால் கதாநாயகி யாக நடித்துள்ளார். மஸ் தான்வலியிடம் மேலும் விசாரித்தபோ செம்மரக் கடத்தலில் நடிகை நீத்து வுக்கும் தொடர்பு இருப்பக தெரிவித்து உள்ளார். மஸ்தான் வலி செம்மரக் கடத்தலில் கிடைத்த பத்தை நடிகை நீத்துவிடம் கொடுத்து அவரது வங்கி கணக்கில் போட்டுள்ளார். பின்னர் வங்கி கணக்கில் இருந்து தனக்கு தேவைப்படும் போ£து தேவையான பணத்தை எடுத்து இருக்கிறார்.

இதையடுத்து போலீசார் மஸ்தான்வலி, நடிகை நீத்து அகர்வால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மஸ்தான்வலி கைது செய்யப்பட்டார். போலீசார் நடிகை நீத்துவை கைது செய்யச் சென்றபோது தலை மறைவாகி விட்டது தெரிய வந்தது. அவர் பெங்களூர் அல் லது முமபையில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவரை கைது செய்ய தனிப்படைகள் விரைந்துள்ளன.

நடிகை நீத்துக்கு மஸ்தான்வலி ரூ.35 லட்சம் மதிப்புள்ள பங்களா கட்டி கொடுத்துள்ளார். அதில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.



வடை போச்சே : புலம்பும் அஞ்சலி


காஞ்சனா 2’ வெற்றி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சில கிராமங்களில், ‘டிக்கெட் இல்லேன்னா பரவால்லஸ நின்னுக்கிட்டுக்கூட படம் பார்க்கிறோம்’ என்கிறார்களாம் ரசிகர்கள். ‘பேய்ப் படத்துக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸா’ என்று வியக்கிறார்கள் திரைத்துறையினர்.

அதிலும் நித்யாமேனனின் கால் ஊனமான கேரக்டர்ஸ ராகவாவின் மொட்டைத் தலையில் ‘சொ..சொய்ங்’’ என்று விளையாடிஸ காலை விந்தி விந்தி நடந்து, ரசிகர்களின் கண்களில் குளம் கட்ட வைத்துவிட்ட நித்யாவின் நடிப்பு பற்றி ரஜினி முதல் விஜய் வரை ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டித் தள்ளுகிறார்கள். ஆனால், ஒரே ஒரு நடிகை மட்டும் கடுப்பில் புலம்புகிறாராம். அவர் – அஞ்சலி.

காரணம் – முதலில் நித்யா மேனன் கேரக்டரில் நடிக்க அஞ்சலியைத்தான் அழைத்தார்களாம். ‘காஞ்சனா 2’ ஆரம்பித்தபோது, ராகவாவுக்கு உடல்நிலை சரியில்லை; போதாக்குறைக்கு பீக்கில் இருந்தார் அஞ்சலி. ‘‘என்னதுஸ கால் ஊனமான கேரக்டராஸ என்னை அழகா பார்த்துப் பழக்கப்பட்டுட்டாங்க ரசிகர்கள்ஸ ஊனமான அஞ்சலி கேரக்டரை நிச்சயம் அவங்க ஏத்துக்க மாட்டாங்க சார்!’’ என்று நியாயமாக மறுத்துவிட்டாராம்.

இப்போது, ‘மல்லு நடிகைக்கு இத்தனை திறமையா?’ என்று நித்யாவுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து, ‘வட போச்சே’ என்று புலம்பி வருகிறாராம் அஞ்சலி!


ஐஸ்வர்யா தனுஷை கவர்ந்த கொக்கு குமாரு!

சென்னை: வை ராஜா வை படத்தில் தனுஷ் கொக்கி குமாராக நடித்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

3 படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஐஸ்வர்யா தனுஷ். தற்போது வை ராஜா வை படம் மூலம் மீண்டும் நம்மை சந்திக்க வருகிறார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடித்துள்ள வை ராஜா வை படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படம் பற்றி ஐஸ்வர்யா கூறுகையில்,

வை ராஜா வை என் முதல் படமான 3ல் இருந்து வித்தியாசமானது. 3 படம் காதலை மையமாக வைத்து சீரியஸானது. ஆனால் இது ஜாலியான கமர்ஷியல் படம். இந்த படத்தில் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் கொக்கி குமாராக வருகிறார். அவர் நடித்த கதாபாத்திரங்களில் எனக்கு பிடித்தவற்றில் கொக்கி குமாரும் ஒன்று.

அத்தகைய கொக்கி குமாரு கதாபாத்திரத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. வை ராஜா வை படத்தை தெலுங்கில் டப் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்



ப்ரியா ஆனந்தின் வாலை சுருட்டிய ஐஸ்வர்யா தனுஷ்!


‘வாமனன்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டே ‘அரிமா நம்பி’, ‘எதிர் நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ போன்ற தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர்களுடன் டாப்ஸி, டேனியல் பாலாஜி, விவேக், சதீஷ், மனோபாலா, மயில்சாமி, காயத்ரி ரகுராம், சுவாமிநாதன், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

யுவன் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘வை ராஜா வை’ கமல்ஹாசனின் உத்தமவில்லன் வெளியாகும் மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்த தன் அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார் ப்ரியா ஆனந்த். அவர் கூறியதாவதுஸ

“கவுரி ஷிண்டே, கிருத்திகா உதயநிதி ஆகிய இரண்டு பெண் இயக்குனர்களிடம் பணியாற்றியுள்ளேன். இவர்கள் படப்பிடிப்பில் அரட்டையடித்துக் கொண்டு நடிப்பேன். ஆனால் என் 3வது பெண் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் ரொம்பவும் ஸ்ட்ரிக்காக இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சத்தமே இருக்கக்கூடாது என்பார். நானும் வேறு வழியில்லாமல் வாலை சுருட்டிக் கொண்டு அமர்ந்து விடுவேன்.

நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் நாயகன் உடனும் என்னை இணைத்து அவருடன் காதலா? என்று கேட்கின்றனர். நானும் எவ்வளவு பேரைத்தான் காதலிப்பது? இதில் எதுவும் உண்மை இல்லை” என்றார்.

ப்ரியா ஆனந்த் தற்போது கலைப்புலி தாணு தயாரிக்க ஆனந்த் சர்மா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் மற்றும் காஜல் அகர்வாலுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது




இனப் பிரிவினையை தூண்டும் படத்தில் ஐஸ்வர்யா ராய்!


கடந்த ஏப்ரல் 17ம் தேதி சென்னை தி. நகரில் கல்யாண் ஜுவல்லர்ஸின் மிகப்பெரிய ஷோரூம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரபு, நாகார்ஜுனா, ஷிவ்ராஜ் குமார், மஞ்சு வாரியர்,  விக்ரம் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

அன்றைய தினமே சில செய்தித்தாள்களில் அந்த நகைக்கடையின் விளம்பர போஸ்டர்கள் வெளியானது. அதில் ஐஸ்வர்யாராய் விலையுயர்ந்த ஆடை அணிந்து அமர்ந்திருப்பது போலவும் அவருக்கு அருகில் கருப்பு நிறத்தில் உள்ள ஒரு ஏழை சிறுவன் குடை பிடித்திருப்பது போலவும் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் இனப் பிரிவினை மற்றும் குழந்தைத் தொழிலாளர் போன்ற செயல்களை ஊக்குவிப்பது போல அந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைகளில் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் நல்லெண்ன தூதராகவும் இருக்கும் ஒருவர் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் தெரிவித்திருப்பதாவதுஸ

“விளம்பரத்திற்கான புகைப்படம் எடுக்கையில் நான் மட்டும்தான் இருந்தேன். இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் விரைவில் பேசுவேன். விளம்பரம் வெளியான தருணம் நான் திறப்பு விழாவில் இருந்ததால் என்னால் தடுக்க இயலாமல் போய்விட்டது. இந்நிலையில் அந்த விளம்பர படத்தை நீக்குவதாக கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

குழந்தை பெற்ற பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யாராய் தற்போது ஜஸ்பா என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனித்துவமானவன்’ - குட்டித்தலைக்கு பெயர் வெச்சாச்சு


கடந்த மார்ச் 2ம் தேதி அஜித் , ஷாலினி தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை முன்னிட்டு சமூக வலைகளில் ரசிகர்கள், பிரபலங்கள்  #KuttyThala என ஹேஷ்டேக் வார்த்தையில் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

அடுத்த கேள்வியாக அஜித் குழந்தைக்கு என்ன பெயர் என கேள்விகள் எழத்துவங்கியது. தற்போது அஜித்தின் மகன் பெயர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் , ஷாலினி தன் இரண்டாவது மகனுக்கு ‘ஆத்விக்’ என பெயரிட்டுள்ளனர்.

’ஆத்விக்’ என்றால் ’தனித்துவமானவன்’  என அர்த்தமாம். இதை அறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். இதை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகர்கள்
#AadvikAjithKumar என ட்ரெண்டை உருவாக்கியுள்ளனர்.




ஒன்றல்ல, இரண்டல்ல 10 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்.. தீபிகா


பாலிவுட்டில் எத்தனை நடிகைகள் வந்தாலும் யாரும் அசைக்க முடியாத கதாநாயகியாக வலம் வருப்பவர் தீபிகா படுகோனே. இவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி வருவதால் பாலிவுட் நடிகர்கள் பலர் தீபிகா படுகோனேவையே கதாநாயகியாக்க வேண்டும் என்று போட்டி போடுகின்றனர்.

இவர் தற்போது தமாஷா, பிக்கு உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார் என்று கடந்த சில வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் தங்களின் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் உள்ளனர்.அடுத்த ஆண்டு ரன்வீருக்கும், தீபிகாவுக்கும் திருமணம் நடக்கக்கூடும் என்று கூட பேச்சு அடிப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி தெரிவித்துள்ளார் தீபிகா. தீபிகாவுக்கு குழந்தைகள் என்றால் உயிராம். அதனால் ஒன்றல்ல, இரண்டல்ல 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் தீபிகா. ஆமாம் கல்யாணத்துக்கு அப்புறம் தானே..?
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies