இலங்கையை உலுக்கும் டெங்கு: கடந்த 24 மணி நேரத்தில் 55,000 பேர் பாதிப்பு-32 பேர் உயிரிழந்த சோகம்!

 

இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் நடப்பு ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,000-ஐக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு டெங்கு நோய் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.தற்போது டெங்கு பரவ நிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.குறிப்பாக கடந்த 24 நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோயாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையை உலுக்கும் டெங்கு
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இலங்கையில் மொத்தம் 55,406 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளனர். அத்துடன், இந்த கொடிய காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தற்போதைய பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியில் கூறியிருப்பதாவது: இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,024 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவலாக இந்த பாதிப்பு அதிகரித்து வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்றார்.

அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் அவசர உதவி எண் அறிமுகம்
டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், நிலைமையைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் இணைந்துஅவச ‘டெங்கு செயல்பாட்டு மையம்’ (Dengue Operations Centre) ஒன்றை அமைத்துள்ளது. டெங்கு தொடர்பான தகவல்கள், புகார்கள் மற்றும் அவசரத் தேவைகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் டெங்கு பரவல் குறித்த தகவல்களை வழங்கவும், கொசுக்கள் பெருகும் இடங்கள் பற்றி புகார் அளிக்கவும் 0117 966366 என்ற பிரத்யேக அவசர தொலைபேசி இலக்கம் (Hotline) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பதற்கும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் பொதுமக்கள் முன்வர வேண்டும் என சுகாதாரத் துறையினர் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முந்தைய ஆண்டுகளின் பாதிப்புகள்
இலங்கையைப் பொறுத்தவரை டெங்கு பரவல் என்பது புதிய ஒன்றல்ல. கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நாடு மிக மோசமான டெங்கு பேரழிவைச் சந்தித்தது. குறிப்பாக, 2017 ஆம் ஆண்டில் 1,86,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதுடன், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவே இலங்கையின் வரலாற்றில் பதிவான மிக மோசமான டெங்கு பாதிப்பாகும். அதனைத் தொடர்ந்து 2019 இல் 1,05,000-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகின.

வழக்கம்போல இம்முறையும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மேல் மாகாண மாவட்டங்களிலேயே அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதிக மக்கள் தொகை மற்றும் முறையற்ற நகரமயமாக்கல் காரணமாக இந்த பகுதிகளில் கொசுக்கள் எளிதாகப் பெருகுகின்றன.

தற்போது பெய்து வரும் பருவமழை, தேங்கும் நீர் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் தேங்கும் தண்ணீர் ஆகியவை டெங்கு கொசுக்கள் பெருகுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்க பொதுமக்களின் விழிப்புணர்வும், சுகாதாரப் பிரிவினருடன் இணைந்த கூட்டுச் செயல்பாடும் மிக அவசியமாகும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.