தோஹா மற்றும் கொழும்புக்கு இடையிலான ஐந்து தினசரி விமானச் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான (BIA) கத்தார் ஏர்வேஸின் வாராந்த விமானங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இது இலங்கை மற்றும் கத்தாருக்கு இடையே பயணிக்கும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிறுவனத்தின் இந்த விரிவாக்கப்பட்ட கால அட்டவணையானது வர்த்தக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடையற்ற பயண வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தெற்காசியாவின் முக்கியமொரு விமானப் போக்குவரத்து மையமாக கொழும்பு கொண்டுள்ள நிலையை இது மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



