நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் பெண்ணின் தாயை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
திருமணம் வேண்டாம் என்று மறுத்த இளம்பெண்
இந்த நிலையில், வர்ஷா யுவராஜாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இன்று காலை வர்ஷா தனது வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, அரிவாளுடன் அங்கு வந்த யுவராஜா திடீரென அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் வர்ஷா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வர்ஷாவின் தாயார் விநாயகஜோதி (45) வீடு திரும்பியுள்ளார். ரத்த காயங்களுடன் வெட்டுபட்டு கிடந்த மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து இளம்பெண் வர்ஷாவை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது தன்னுடைய மகளை காப்பாற்ற காப்பாற்றத் துடித்த அவரது தாய் குறுக்கே வந்து தடுத்துள்ளார். அந்த நேரத்தில் ஆத்திரல் இருந்த யுவராஜா விநாயகஜோதியையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த தாய் விநாயகஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பலத்த காயமடைந்த வர்ஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விநாயகஜோதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி
கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே, குற்ற உணர்ச்சி அல்லது போலீஸ் பிடிக்கு அஞ்சிய யுவராஜா, தான் கொலைக்கு பயன்படுத்திய இரத்தக் கறை படிந்த அரிவாளுடன் பக்கத்தில் உள்ள மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் நேராகச் சென்று சரணடைந்தார்.
அவரை உடனடியாகக் கைது செய்த மல்லாங்கிணறு போலீஸார், காவல் நிலையத்திற்குள் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணப் பேச்சுவார்த்தையில் அப்படி என்ன பெரிய தகராறு ஏற்பட்டது? இதற்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்ற கோணத்தில் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
கல்குறிச்சி நடந்த பரபரப்பு சம்பவம்
இதற்கிடையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உயிரிழந்த தாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த இளம்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு திருமண நிச்சயதார்த்தப் பிரச்சனை, இப்படி ஒரு தாயின் கொடூரக் கொலையில் போய் முடிந்த சம்பவம் கல்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



