
கணவரை கொன்று, உயிருக்கு போராடிய மகன் அருகில் மனைவி செல்போனில் ரீல்ஸ் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலைக்கான காரணத்தை இந்த பதிவில்
கர்நாடகா மாநிலம்,பெல்காம் மாவட்டம், சங்கேஷ்வர் தாலுக்காவில் உள்ள ஹெப்பாலைச் சேர்ந்தவர் கிரண். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு விஜயபுராவைச் சேர்ந்த கண் மருத்துவரான டாக்டர் பிரியங்காவைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு 8 வயத்தில் மகன் உள்ளார்.மருத்துவராக இருந்தபோதிலும்,பிரியங்கா பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். திருமணத்திற்கு பிரியங்காவும் தனது கணவரின் குடும்பத்தினரிடமிருந்து விலகியே இருந்து வந்துள்ளார்.
கொலை சம்பவம் நடந்தது எப்படி?
கிரணின் குடும்பத்தினர் வரும்போதெல்லாம், பிரியங்க அவர்களிடம் தகாரறில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, பிரியங்கா தனது கணவர் மீது தொடர்ந்து சந்தேகம் கொண்டிருந்ததால், தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.இந்த நிலையில் நேற்று மருத்துவர் கிரண் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு வந்துள்ளார். இதனையடுத்து புதன்கிழமை மதியம் மற்றொரு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சைக்கு அவர் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால், அவர் வேலைக்கு வராததால் மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டது.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கிரணைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். அப்போது,அவரது மனைவி பிரியங்கா அழைப்புகளை எடுத்து, “அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார், உடம்பு சரியில்லை, ஓய்வெடுக்கிறார்” என்று மாற்றி மாற்றிப் பதிலளித்துள்ளார். இது உறவினர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கொலையை கண்டுபிடித்த உறவினர்கள்
இதனைத் தொடர்ந்து உறவினர்கள் உடனே கிரணின் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது பிரியங்கா ஆரம்பத்தில் கதவைத் திறக்க மறுத்தார். பின்னர் உறவினர்கள் வற்புறுத்தியதைக் தொடர்ந்து கதவைத் திறந்தார். உள்ளே சென்ற உறவினர்கள், கிரணும் அவரது எட்டு வயது மகன் நிஹித்தும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதிர்ச்சியூட்டும் காட்சிகள்
தகவலின் பேரில் காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்தபோது ரத்த வெள்ளத்தில் படுக்கை அறையில் கிரணின் கிடந்துள்ளார். மேலும், கண் மருத்துவாரான பிரியங்கா எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன் அருகில் ரத்த காயங்களுடன் கிடக்கும் மகனைப் பொருட்படுத்தாமல், அமைதியாகத் தனது செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பயன்படுத்திக் கொண்டிருந்தார். அடுத்த அறையில் கிரணின் உடல் கிடந்தது.
இதனைத் தொடர்ந்து, உயிருக்கு போராடும் நிலையில் இருந்த சிறுவனை சிகிச்சைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர். மேலும் கிரணின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் பிரியங்காவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையில் தெரிந்த விவரங்கள்
கிரண் மற்றும் பிரியங்கா ஆகிய இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே பிரியங்கா தனது கணவரைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் வெளியாட்கள் யாரும் வந்து சென்ற தடயங்கள் எதுவும் கண்காணிப்புக் கேமரா பதிவுகளில் இல்லை. எனவே இது திட்டமிட்டே நடத்தப்பட்ட கொலை என்று காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
பிரியங்காவில் தற்போதைய நிலை
கைது செய்யப்பட்ட பிரியங்காவிற்கு திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) இல்லாதபோதும், தானே இன்சுலின் ஊசியைச் செலுத்திக் கொண்டதாக மருத்துவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
பிரியங்காவிற்கு ஏதேனும் மனநலப் பாதிப்புகள் உள்ளதா என்றும், இந்தத் தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன என்றும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



