ஈரான் – அமெரிக்கா இடையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தங்கள் பிராந்தியத்தின் மீதான அமெரிக்காவின் தாக்குதல் முடிவுக்கு வர வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ராணுவத்தினர் (IRGC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறு அறிவிப்பு வரும் வரை ஹார்மூஸ் நீரிணை மூடப்படுகிறது. தங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடு முடிவுக்கு வரும் வரை இந்த வழியாக எந்த ஒரு கப்பலும் அனுமதிக்கப் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையில் மோதல் போக்கு
இதுபற்றி கத்தார் நாட்டின் முன்னாள் இங்கிலாந்து தூதர் நிக்கோலஸ் ஹோப்டன் கூறுகையில், தெஹ்ரான், வாஷிங்டன் இடையில் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
போருக்கு பிந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஈரான், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் மாறுபட்ட விளக்கங்களை கொடுத்து வருகின்றன.
குறிப்பாக ஹார்மூஸ் நீரிணை தொடர்பான விஷயத்தில் முரண்பாடு அதிகமாக உள்ளது. அணுசக்தி விவகாரத்தை சுட்டிக் காட்டி தான் அமெரிக்கா உள்ளே நுழைந்தது.
ஆனால் தற்போது அதைவிட ஹார்மூஸ் நீரிணை தான் பிரதான விஷயமான மாறியிருக்கிறது. இதை தனது பேச்சுவார்த்தையில் ஈரான் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்றார்.
இந்தியா-அமெரிக்கா உறவுகள்:TRUMP நடவடிக்கைகள் மாற்றங்கள்
கத்தார், யுஏஇ எடுக்கும் முயற்சி
இந்த சூழலில் ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்கும் வகையில் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சரும் ஆலோசனை செய்து வருகின்றனர். தற்போதைய சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வருவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலையான சூழலை கொண்டு வரவும் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். ஈரான் – அமெரிக்கா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட வைக்கவும் காய் நகர்த்தி வருகின்றனர். இதற்கு பிராந்திய ரீதியில் அனைத்து நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முஜ்தாபா கமேனி அதிரடி எச்சரிக்கை
இதற்கிடையில் ஈரான் உச்ச தலைவர் முஜ்தாபா கமேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு பழி வாங்காமல் விட மாட்டோம். யாரெல்லாம் தவறு செய்தார்களோ, அவர்களை எல்லாம் தண்டிக்காமல் விட மாட்டோம் என்று எச்சரித்துள்ளார். இதுபற்றி ஈரானை சேர்ந்த அரசியல் விமர்சகர் மோஸ்தபா கோஷ்செஸ்ம் கூறுகையில், ஈரானை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பழி தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர்.
அமெரிக்காவை பழி வாங்க ஈரான் திட்டம்
கடந்த சில மாதங்களாக வீதிகளில் சிவப்பு வண்ண கொடிகளுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரின் கோரிக்கையும் ஒன்றாக தான் இருக்கிறது. பழி தீர்ப்பது. இந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அமெரிக்கா செய்தது சரி தான் என்று இந்த உலகில் ஒருவர் கூட சொல்ல வாய்ப்பில்லை.
அமெரிக்காவிற்கு உரிய பதிலடி கொடுக்காவிட்டால் அவர்கள் நம் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவர். அத்துமீறுவர். இவர்கள் மட்டுமின்றி இஸ்ரேலும் பதிலடியை சந்திக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் அமெரிக்கா உடன் எந்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடாலும் அவர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது என்றார்.



