அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் கூட்டாக கடந்த 28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோர் கடந்த மார்ச் 1ம் தேதி கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஈரான் உச்ச தலைவர் காமேனியின் உடல் அடுத்த மாதம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக நேற்று ஈரான் அரசு செய்தி நிறுவனம் வௌியிட்ட செய்தியில், “ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா காமேனியின் உடல் ஜூலை 9ம் தேதி மஷ்ஹாத் நகரில் உள்ள ஷியாக்களின் புனித தலமான இமாம் ரெசா புனித தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்” என தெரிவித்தது.




