மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், குணால் ஷா உருவாக்கிய CறேD நிறுவனத்தில் 900 மில்லியன் டொலர் முதலீடு செய்யும் திட்டத்தை அறிவிக்கிறார்.
அதே நேரத்தில், மெட்டாவின் கீழ் இயங்கும் வட்ஸ் அப் நிறுவனத்தின் சர்வதேச நிறைவேற்று உத்தியோகத்தராக குணால் ஷா நியமிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது…
ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவன். அப்பாவின் வியாபாரம் சரிவடைகிறது.
படிப்பில் உயரத்தை எட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஆனால், குடும்பத்தின் பொருளாதாரச் சுமை அந்தக் கனவை விட கனமாகத் தோளில் ஏறுகிறது.
பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறான். படிக்க வேண்டிய துறையைத் தேர்வு செய்கிறான். எதிர்காலத்தில் அதிக சம்பளம் தரும் பாடப்பிரிவு அவனது முன்னுரிமையல்ல.
டெலிவரி பணியாளராக வேலை செய்ய வேண்டும். சைபர் கபேயில் நேரம் செலவிட வேண்டும். மருதாணிப் பைகளை விற்று குடும்பத்துக்கு உதவ வேண்டும். அதற்கு வகுப்பறையில் செலவிடும் நேரம் குறைவாக இருக்க வேண்டும்.
அதனால்தான் மும்பையின் வில்சன் கல்லூரியில் மெய்யியலைத் தேர்வு செய்கிறான்.
அந்த இளைஞனின் பெயர் குணால் ஷா.
பலருக்கு மெய்யியல் என்பது வேலை வாய்ப்பு குறைவான பாடமாகத் தோன்றலாம். ஆனால், குணால் ஷாவுக்கு அது மனித மனதைப் புரிந்துகொள்ளும் ஜன்னலாக இருந்தது. மனிதர்கள் ஏன் ஒரு முடிவை எடுக்கிறார்கள்? ஏன் ஒரு பொருளை வாங்குகிறார்கள்? ஏன் சில பழக்கங்களை மாற்ற மறுக்கிறார்கள்? இந்தக் கேள்விகள்தான் அவரை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வந்தன.
காட்சி மாறுகிறது. 2026 ஜூன்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், குணால் ஷா உருவாக்கிய CறேD நிறுவனத்தில் 900 மில்லியன் டொலர் முதலீடு செய்யும் திட்டத்தை அறிவிக்கிறார்.
அதே நேரத்தில், மெட்டாவின் கீழ் இயங்கும் வட்ஸ் அப் நிறுவனத்தின் சர்வதேச நிறைவேற்று உத்தியோகத்தராக குணால் ஷா நியமிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் சுமார் 330 கோடி மக்களை இணைக்கும் தளத்தின் பொறுப்பு, இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஒரு தொழில் முனைவோரின் கைகளுக்கு வரவிருக்கிறது.
இது சாதாரண நியமனம் அல்ல. சுந்தர் பிச்சை அல்லது சத்யா நடெல்லா போன்றவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்று, சிலிக்கன் பள்ளத்தாக்கின் நிறுவனங்களில் படிப்படியாக உயர்ந்தவர்கள். ஆனால், குணால் ஷாவின் பயணம் வேறு.
அவர் இந்தியாவிலேயே தன் நிறுவனங்களை உருவாக்கியவர்.
2010-ஆம் ஆண்டு ப்றீசார்ஜ் என்ற டிஜிட்டல் கட்டண நிறுவனத்தை இணைந்து தொடங்கினார். மொபைல் ரீசார்ஜை எளிதாக்கிய அந்த நிறுவனம் இந்திய ஸ்டார்ட்அப் உலகில் பெரிய வெற்றியாக மாறியது. பின்னர் அது ஸ்னப்டீல் நிறுவனத்திடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டது.
அதற்குப் பிறகும் அவர் ஓயவில்லை. 2018 இல் CறேD-ஐ உருவாக்கினார். நல்ல கடன் வரலாறு கொண்ட கிரெடிட் கார்ட் பயனாளர்களுக்கான தளமாகத் தொடங்கிய CறேD, பின்னர் நிதிச் சேவைகளின் முழுமையான சூழலாக வளர்ந்தது.
ஆனால், குணால் ஷாவின் தனித்தன்மை தொழில்நுட்பத்தில் மட்டும் இல்லை.
அவருக்கு மிகவும் பிடித்த துறை Bஎகவிஒஉரல் ஏcஒனொமிcச் — மனிதர்களின் பொருளாதார முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் உளவியல்.
மனிதர்கள் தர்க்கத்தின் அடிப்படையில் அல்ல; பழக்கங்கள், உணர்வுகள், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள் என்பதே அந்த சிந்தனையின் மையம்.
இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால்தான் மெற்றாவின் இந்த முடிவின் முக்கியத்துவம் விளங்கும்.
இந்தியாவில் மட்டும் Wகட்சாப்ப்-ஐ பயன்படுத்துபவர்கள் சுமார் 50 கோடி பேர். தகவல்களைப் பகிர்வதற்கு மக்கள் அதை நம்புகிறார்கள். ஆனால் பணப் பரிவர்த்தனைகளில் அதே அளவிலான நம்பிக்கையை இன்னும் பெறவில்லை.
இதுவே மெட்டாவின் அடுத்த சவால். செய்திகளை அனுப்பும் செயலியை, வாங்குதல், விற்பனை, கட்டணச் செலுத்தல், வணிகச் சேவைகள் என வருமானம் ஈட்டும் தளமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு மெட்டாவுக்கு நீண்ட காலமாக உள்ளது.
அந்த மாற்றத்தை முன்னெடுப்பதற்கு, இந்திய நுகர்வோரின் மனநிலையையும், டிஜிட்டல் பழக்கங்களையும் ஆழமாகப் புரிந்துகொண்ட ஒருவரைத் தேர்வு செய்வது இயல்பான முடிவாக இருக்கலாம்.
அதே நேரத்தில் இன்னொரு கேள்வியும் எழுகிறது.
தானே உருவாக்கி வெற்றியடைந்த நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் ஒருவர் ஏன் வேறொரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்?
அதற்கான பதிலும் குணால் ஷாவின் சிந்தனையிலேயே இருக்கிறது.
CறேD இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும், அதன் வளர்ச்சி இந்திய சந்தையோடு அதிகம் இணைந்துள்ளது. ஆனால், வட்ஸ்அப் உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்களின் அன்றாட தொடர்பாடலைத் தொடும் தளம்.
ஒரு தொழில்முனைவோருக்கு இது ஒரு புதிய பதவி மட்டுமல்ல; மனிதர்களின் தொடர்பாடல், பணப் பரிவர்த்தனை, டிஜிட்டல் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடுத்த பரிணாமத்தை வடிவமைக்கும் வாய்ப்பாகவும் இருக்கலாம்.
இதில் இன்னொரு பெரிய மாற்றமும் இருக்கிறது.
இதுவரை இந்திய திறமைகள் அமெரிக்காவுக்குச் சென்று உலகத் தொழில்நுட்ப நிறுவனங்களை வழிநடத்தின. ஆனால், இப்போது உலக நிறுவனங்களே இந்தியச் சந்தையையும், இந்தியத் தலைமையையும் மையமாகக் கொண்டு சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.
அதிகமான பயனாளர்கள் ஆசியாவில் இருக்கிறார்கள். அதிகமான வளர்ச்சி வாய்ப்புகளும் இங்குதான் இருக்கின்றன. எனவே இந்தியாவைப் புரிந்துகொள்ளாமல் உலக டிஜிட்டல் சந்தையை வழிநடத்த முடியாது என்பதை தொழில்நுட்ப நிறுவனங்கள் உணரத் தொடங்கியுள்ளன.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, குணால் ஷாவின் எழுச்சி தனிநபரின் வெற்றிக் கதை மட்டுமல்ல.
உலக தொழில்நுட்ப அதிகார மையம் மெதுவாக தனது பார்வையை மாற்றிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகவும் அது பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் இறுதியில் மெட்டாவுக்குப் புதிய வருமான வாய்ப்புகளைத் தரலாம்.
குணால் ஷாவுக்கு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் மேடையை வழங்கலாம்.
ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, உலகத் தொழில்நுட்பத் தலைமையில் இந்திய சிந்தனைக்கும், இந்திய சந்தைக்கும், இந்திய தொழில் முனைவோருக்கும் கிடைத்திருக்கும் புதிய அங்கீகாரமாகவும் இந்த நிகழ்வைப் பார்க்க முடியும்



