பேராசெயிலிங் 100 அடி உயரத்தில் பறந்தபோது கடலில் விழுந்து தொழிலதிபர் பலி

 

தாய்லாந்து கடற்கரையில், பாரா செயிலிங்கின் போது 30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்த ஆஸ்திரேலிய தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புக்கெட்டில் பேராசெயிலிங் (Parasailing) சாகச விளையாட்டின் போது 71 வயது ஆஸ்திரேலிய முதியவர் ஒருவர் வானத்தில் இருந்து தலைகீழாகக் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெஞ்சைப் பதறவைக்க வைத்துள்ளது.எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாய்லாந்து பேராசெயிலிங் விபத்து வீடியோ
அந்த வீடியோவில்,ஆஸ்திரேலியவை சேர்ந்தவர் ரோஜர் ஹசி.இவருக்கு வயது 71. இவர் பிரபல பிரபல தொழிலதிபராக உள்ளார். இந்த நிலையில், விடுமுறையில் நேரத்தை கழிப்பதற்காக தனது மனைவியுடன் ரோஜர் ஹசி தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புக்கெட்டிற்கு வந்துள்ளார். அப்போது பேராசெயிலிங் (Parasailing) சாகச விளையாட்டை மேற்க்கொண்டுள்ளார். சாகச விளையாட்டு மேற்க்கொள்வதை மனைவி புகைப்படம் எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, பேராசெயிலிங் ரைடு செய்வதற்கு முன் ,பேராசெயிலிங் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பாதுக்காப்பு உடைகளை அணிவித்துள்ளனர்.

பேராசெயிலிங் செய்யப் போறோம் என்ற பயங்கர ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ரெடியாவதை பார்க்க முடிகிறது. பின்னர் 71 வயதான ரோஜர் ஹசி கடற்கரை தரையில் இருந்து மெல்ல..மெல்ல.. வானத்திற்கு பறந்தார். இந்த காட்சிகளை கடற்கரைக்கு அருகில் இருந்த மனைவில் கேமிராவில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். ஆனால், அவர் காற்றில் பறக்கத் தொடங்கிய அடுத்த 18-ஆவது வினாடியில், சுமார் 30 மீட்டர் (100 அடி) உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரெனப் பிடி நழுவி நேராகக் கடலுக்குள் விழுந்தார்.

100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த முதியவர் பலி
கடற்கரையில் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று கணிக்கக் கூட முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.கடலில் விழுந்த ரோஜர் ஹசியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவர் பட்டோங் (Patong) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.