தங்க உள்ளாடை!.. 27 கிலோ தங்கம்.. 539 கோடி பணம் பறிமுதல்!. பெண் எம்.பி

 

ஈரான் நாடு தங்களின் பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கியது.

தற்போது வரை அந்த போர் முழுமையாக நின்றபாடில்லை. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும் ஈரானின் ஹார்மூஸ் நீரிணையில் பதட்டம் நீடித்து வருகிறது. அந்த வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. இதனால், ஈரானை அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறது. இந்நிலையில்தான் ஈரானின் பெண் எம்பி வீட்டில் ஆடம்பரமான பொருட்கள் மற்றும் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த ஊழல் புகாரின் அடிப்படையில் ஹிந்தி அல் அப்பாசி என்கிற்ற பெண் எம்பி வீட்டில் சமீபத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அவரின் வீட்டிலிருந்து ரூ.539 கோடி பணம், 27 கிலோ தங்கம், தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டன முறைகேடாக சம்பாதித்த பணத்தில் அவர் வாங்கி குவித்து வைத்திருந்த ஆடம்பரமான பொருள்களை பார்த்து அதிகாரிகளை மறைத்து போனதாக சொல்லப்படுகிறது.