ஈழத் தமிழ் இளைஞர் தமிழகத்தில் கைது! -காணொளி
14 Jul,2014
திருச்சி விசேட சிறைக்கட்டிடத்தில் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்த ஈழத் தமிழர் தமிழக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜி. சுரேஸ்குமார் (34வயது) என்ற இந்த இளைஞரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் தமது உதவியாளர் ஒருவர் தேவை என்றும் தமது அறைக்கு குளிரூட்டி தேவை என்றும் கோரியும் உண்ணாவிரத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார்.
இந்தநிலையில் நாகர் பொலிஸ் அவர் மீது 309ஆவது பிரிவின்கீழ் வழக்கை பதிவுசெய்துள்ளனர். தற்கொலைக்கு முயற்சித்த குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த சுரேஸ்குமார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.