வடக்கு முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலக தீர்மானம்? கூட்டமைப்பு அவசர கூட்டம்!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலகுகின்ற முடிவிற்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இன்று வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நீடித்து உள்ளமையின் எதிரொலியாகவே விக்னேஸ்வரன் பதவி விலகுகின்ற தீர்மானத்தை எடுத்து உள்ளார்.
தற்போது வடமாகாண ஆளுனராக இருக்கின்ற முன்னாள் இராணுவ உயர் அதிகாரி சந்திரசிறியின் முதலாவது பதவிக் காலம் இன்று நிறைவுக்கு வருகின்றது. ஆயினும் மஹிந்த ராஜபக்சவால் இன்று இவருக்கான பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் இலங்கை ஜனாதிபதி முன்பாக அவர் இன்று மீண்டும் ஆளுனராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார்.
சிவில் சமூகத்தை சேர்ந்த ஒருவரையை இப்பதவிக்கு நியமிக்க வேண்டும், இராணுவ பின்னணி உடைய சந்திரசிறியை இப்பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலுயுறித்தி வருகின்றது.
மேலும் சந்திரசிறியை ஆளுனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சில மாதங்களுக்கு முன் சந்தித்து பேசியபோது சி. வி. விக்னேஸ்வரன் முன் வைத்து இருந்தார். இக்கோரிக்கையை மஹிந்த சாதகமாக பரிசீலித்து ஜூலை மாதத்தோடு ஆளுனரை வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்று விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் இராணுவ ஆட்சிக்கு ஓப்பான சந்திரசிறியின் பதவி நீடிப்பு அமைந்துள்ளது.
ஆகவே ஆளுனர் சந்திரசிறியின் பதவி நீடிக்கப்பட்டு உள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடுகின்ற வகையிலேயே பதவி விலகுகின்ற தீர்மானத்துக்கு விக்னேஸ்வரன் வந்து உள்ளார் என்று அறியமுடிகின்றது.
இன்னிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் அவசர கூட்டம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக தெரியவருகின்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலகுகின்ற முடிவிற்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இன்று வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நீடித்து உள்ளமையின் எதிரொலியாகவே விக்னேஸ்வரன் பதவி விலகுகின்ற தீர்மானத்தை எடுத்து உள்ளார்.
தற்போது வடமாகாண ஆளுனராக இருக்கின்ற முன்னாள் இராணுவ உயர் அதிகாரி சந்திரசிறியின் முதலாவது பதவிக் காலம் இன்று நிறைவுக்கு வருகின்றது. ஆயினும் மஹிந்த ராஜபக்சவால் இன்று இவருக்கான பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் இலங்கை ஜனாதிபதி முன்பாக அவர் இன்று மீண்டும் ஆளுனராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார்.
சிவில் சமூகத்தை சேர்ந்த ஒருவரையை இப்பதவிக்கு நியமிக்க வேண்டும், இராணுவ பின்னணி உடைய சந்திரசிறியை இப்பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலுயுறித்தி வருகின்றது.
மேலும் சந்திரசிறியை ஆளுனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சில மாதங்களுக்கு முன் சந்தித்து பேசியபோது சி. வி. விக்னேஸ்வரன் முன் வைத்து இருந்தார். இக்கோரிக்கையை மஹிந்த சாதகமாக பரிசீலித்து ஜூலை மாதத்தோடு ஆளுனரை வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்று விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் இராணுவ ஆட்சிக்கு ஓப்பான சந்திரசிறியின் பதவி நீடிப்பு அமைந்துள்ளது.
ஆகவே ஆளுனர் சந்திரசிறியின் பதவி நீடிக்கப்பட்டு உள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடுகின்ற வகையிலேயே பதவி விலகுகின்ற தீர்மானத்துக்கு விக்னேஸ்வரன் வந்து உள்ளார் என்று அறியமுடிகின்றது.
இன்னிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் அவசர கூட்டம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக தெரியவருகின்றது.
வடக்கு மாகாண ஆளுனராக மீண்டும் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்கா அதிபரின் மற்றொரு வாக்குறுதி மீறல் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், இராணுவப் பின்னணியில்லாத ஒருவரை ஆளுனராக நியமிப்பதாக, சிறிலங்கா அதிபர் கடந்த ஜனவரி 2ம் நாள் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
ஒருவேளை தனது உத்தரவுகளைக் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடிய- சிவில் அதிகாரிகள் எவரையும் அவரால் தனது அதிகாரிகள் மத்தியில், இருந்து தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம்.
அவுஸ்ரேலியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், சிறிலங்கா அதிபருக்கு உதவ வந்துள்ள சந்திரசிறியை நான் வாழ்த்த வேண்டும்.
இந்த நியமனத்தை நான் இன்னொரு வாக்குறுதி மீறலாகவே பார்க்கிறேன்.
மிக முக்கியமாக, ஒத்துழைப்பில்லாத, இறுக்கமான, தமிழர்களுடன் இராணுவ ரீதியான உறவை தொடர்வதன் அடையாளமாகவே இதனைக் காண்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.