சீனாவில் ஆற்றில் படகு மூழ்கி 20 பேர் பலி?
16 Jan,2015
சீனாவில் ஆற்றில் படகு மூழ்கி 20 பேர் பலி?
சீனாவின் கிழக்கு பகுதியில் ஷியாங்ஷு மாகாணம் உள்ளது. இங்குள்ள யாங்ட்ஷ் ஆற்றில் கப்பலை இழுத்து செல்லும் நீராவி படகு ஒன்று பயணம் செய்தது. அதில் 8 வெளிநாட்டு ஊழியர்கள் இருந்தனர்.
சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்களும் பயணம் செய்தனர். அந்த படகு ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கிறது.
தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். தண்ணீரில் தத்தளித்த 3 பேரை மட்டும் உயிருடன் மீட்டனர். மற்ற 20 பேரை காணவில்லை. அதை தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது