நவநீதம்பிள்ளையின் பணி ஓய்வு நிகழ்வில் புலம்பெயர் தமிழர்கள் .
06 Aug,2014
.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த ஆறு ஆண்டுகள் ஆற்றிய பணிக்கும், பணி ஓய்வுக்குமான மதிப்பளிப்பு (பிரியாவிடை) நிகழ்வு
ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (05-08-2014) நிகழ்வு இடம்பெற்றது.
மனித உரிமைகளுக்குக் குரல்கொடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் தமிழர் தரப்பினரும் கலந்துகொண்டு நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு பொன்னாடை மற்றும் சேலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரான்சிலிருந்து 12 பேரும் பிரித்தானியாவிலிருந்து ஒருவருமாக 13 ஈழத்தமிழர்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாரான நவநீதம்பிள்ளை அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். அவர் கடந்த யூலை 31ஆம் நாளுடன் பணி ஓய்வுக்குச் சென்றுள்ளார். எனினும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் வரை அவர் ஜெனீவாவில் தன்னுடைய பணிகளை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் இலங்கை தொடர்பில் கருத்துக்கூறும்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளராக தன்னுடன் பணியாற்றிய சக பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால் நீங்கள் (தமிழர்கள்) அவருடன் இணைந்து பணியாற்ற முடியும் என நவநீதம்பிள்ளை அம்மையார் கூறியுள்ளார்.
அத்துடன் சிறீலுங்கா தொடர்பான அனைத்துலக விசாரணைக்குத் தேவையான ஆதாரங்களை கையளிக்குமாறும், மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக்கு தொடர்ந்தும் ஆதரவினை வழங்கி பணியாற்ற வேண்டும் எனவும்