காற்றில் கரையாத நினைவுகள்--1

26 Jun,2018
 

 
காற்றில் கரையாத நினைவுகள்: பண்பாட்டின் கடைசிக் காட்சிகள்!
 
 
நாம் வசிக்கும் உலகம் விடிந்துவிட்டதை என் அறையின் சாளரம் வழியே விரல்களை நீட்டிக்கொண்டு வந்த வெளிச்சக் கதிர்கள் உணர்த்தின. வெளியே எட்டிப் பார்த்தபோது எப்போதும் கேட் கும் பறவைகளின் இசை காணாமல் போயிருந்தது. அவற்றைத் தாங்கி நிற்கும் மழைமரம் வீழ்த்தப்பட்டிருந்தது. வாழ்விடம் பறிக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவை காலி செய்திருந்தன.
வெற்றிடங்கள் எல்லாம் கட்டிடங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் மூச்சுத் திணறும் சூழலில், எனக்குள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வெறுமை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
நினைவு தெரிந்த நாளில் இருந்து அரை நூற்றாண்டு கால இடைவெளி யில் பார்க்கும் திசையெங்கும் நிகழ்ந்து இருக்கும் மாற்றங்கள் இந்த பூமியை அந்நியக் கிரகமாக ஆக்கியிருக்கின்றன.
மாணவர்கள் புன்னகையுடன் புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு நாம் சென்ற புகழ்பெற்ற பள்ளிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சீண்டுவார் இல்லாமல் நோஞ்சானாக மாற, புஷ்டியு டன் புதிய பள்ளிகள் ஊரெங்கும். விளையாடுவதும், படிப்பதும் செயல்பாடாக ஆகிவிட்ட செயற்கைச் சூழ லில் கல்வி. பாரம்பரியப் பள்ளிகள் களையிழந்து எந்த நொடியிலும் அணைந்துவிடும் விளக்காக நீடிக்கும் நிலை.
ஒரு மணி நேரம் முன்பே சென்று ‘நல்வரவு’ என்று போடுவதில் தொடங்கி ‘வணக்கம்’ போடும் வரை ஆர்வத் தோடு தவமிருந்த திரையரங்குகள் பல்லடுக்கு அங்காடிகளாக மாறிப்போய்விட்டன.
அந்தத் திரைகளில் தெரிந்த அவதா ரப் புருஷர்களும், சரித்திர நாயகர் களும், அங்கே காற்று மண்டலத்தை இனிய இசையால் நிரப்பிய பாடல்களும் நமக்கு மட்டுமே தெரியும் மாயச்சூழல். அவற்றின் மறைவோடு நமக்குள்ளும் ஒரு பகுதி மரித்துப்போன வருத்தம்.
 
கரைந்துபோகும் சாம்பிராணிப் புகை
சின்ன வயதில் நீள, அகலங்களை அளந்து பருவத்துக்கு ஏற்ற விளையாட்டை விளையாடிய மைதானங்கள் வீடுகளாக எழும்பிவிட்டன. அங்கே பந்தோடும், பம்பரத்தோடும், கில்லி தாண்டலோடும், நுங்கு வண்டியோடும், எதுவும் இல்லாதபோது ஓடிப் பிடித்தும் விளையாடி மகிழ்ந்த நினைவுகள் சாம்பிராணிப் புகையாகக் கரைந்து போகின்றன. கைகளைக் கொண்டு வாசனையைப் பிடிக்க முயல்வதைப் போல வீண் பிரயத்தனங்களுடன் பழமையில் நீந்த நினைக்கும் முயற்சிகள்.
மழை என்றால் நனைவதில் மகிழ்ந்து, உடையை ஈரமாக்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி யும் எந்த நோயும் அப்போது தாக்கவில்லை. தேங்கிய தண்ணீரிலெல்லாம் காகித ஓடங்கள் விட்டு மழையை வரவேற்ற அந்த நாளையும், மழை அறிவிப்பு வந்தால் இலவச இணைப்பாக வரும் விடுமுறை அறிவிப் பையும் எதிர்பார்த்து பிள்ளைகள் தொலைக்காட்சி முன் தவமிருக்கும் இந்த நாளையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அன்று சன்ன மழைக்கே கிணற்றில் நீர் சல சலக்க ஆரம்பித்துவிடும். சின்ன மழை பெய் தால் நிரம்பிவிடும் ஏரிகள் இப்போது ஆக்கிரமிப்புகளால் எந்த மழைக்கும் நிரம்பாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
எந்த நீச்சல்குளத்துக்கும் சென்று நீந்தப் பழகவில்லை. நீந்தக் கற்றுக்கொடுக்கும் ஆசானாக சுரைக் குடுக்கை முதுகில் ஏறியது. அதற்காகவே தோண்டப்பட்டதுபோல் அகல மாக வாய் விரித்து குளமாகக் காட்சியளிக்கும் வேளாண் கிணறுகள். யார் அதிக உயரத்தில் இருந்து குதிப் பது என்று போட்டிகள். மிதிவண்டிப் பழக்கமும் அவ்வாறே நண்பர்கள் விரல்பிடித்து கற்றுத் தர பாடமானது. பள்ளிப் பருவத்தில் நீச்சல் பழகிய பெரிய கிணறுகள் தூர்ந்து போய் கட்டிடங்களாகிவிட்டன. அங்கே நீர்ப் பாய்ச்ச நிலமும் இல்லை, ஏர் உழுவதற்கு ஆளும் இல்லை. நகரத்தின் பேராசைக் கரங்கள் அருகில் இருக்கும் கிராமங்களின் குரல்வளையையும் நெரிக்கத் தவறவில்லை.
 
கதவு தட்டாமல் வரலாம்
தூரத்துச் சொந்தமோ, சொந்தத்தின் சொந்தமோ, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பின்றி வீட்டுக்கு வரலாம். இருப்பதை அவர்களுக்குப் பரிமாற, குறை சொல்லாமல் சாப்பிடும் பண்பு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் வருகிற உறவினர் இரவில் படுப்பதற்காக ஒதுக் கிய கயிற்றுக் கட்டில் இப்போது தொய்ந்துபோய் தொல்பொருளாய் இருக்கிறது.
எப்படியெல்லாம் நம் உலகம் மாறிப்போய்விட்டது!
கற்பனைக்கும் எட்டாத இம்மாற்றங்களில் கரைசேர முடியாமல் தரைதட்டி நிற்கும் நினைவுகள் மனமெங்கும்.
நாகரிக வளர்ச்சியின் இடுக்குகள் வழியாக நழுவும் பண்பாட்டின் கடை சிக் காட்சிகள் புகையும் ஊதுவத்தியின் இறுதித் துண்டாய் ஞாபகங்களைக் கிளறிவிடுகின்றன. கனவாக இருந்த அனைத்தும் இன்று ஏன் நிறைவேறின என்கிற சலிப்புடன் வாழ்க்கையைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கி றோம்.
வாடகை வீட்டில் குடியிருந்தவர்களுடைய ஒரே கனவாக இருந்து, உண்பதிலும் உடுப்பதிலும் மிச்சம் பிடித்துக் கட்டிய பெரிய வீடு, வெளிநாட்டில் பிள்ளைகள் வாழ முதியோர் இல்லமாய் பயமுறுத்துகிறது.
இரவு நேரங்களில் ஒரே பேச்சுத் துணையாய் சத்தமாக ஒலிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள். நெருக் கிப் படுத்துக்கொண்டபோது வந்த ஆழ்ந்த தூக்கம் புரள வசதி வந்த பிறகு வாய்க்காமல் போனது. ஒரே ஒரு கடிகாரம் இருந்தபோது எல்லாம் குறித்த நேரத்தில் நடந்தன. அறைக்கொரு கடிகாரமும், ஆளுக்கொரு அலாரமும் இருக்கும்போதுதான் எல்லாம் தாமதமாகிறது.
 
பழமையை நோக்கிய பயணம்
வீட்டில் சாப்பிடும்போது அம்மாவிடம் அதிக எண்ணெய் ஊற்றி ஓட்டல் தோசைபோல வேண்டும் என்று அடம்பிடித்த நாம், இன்று உணவகங்களில் வீட்டுத் தோசையைப் போல வேண்டுமெனச் சொல்லி காத்திருக்கிறோம். கருப்பட்டிக் காப்பியை சல்லிசாக நினைத்த நாம், இப்போது அதிக விலை கொடுத்து கலப்படக் கருப்பட்டி யை வாங்கி வருகிறோம்.
சன்ன அரிசிக்காக நெல்லை மெருகேற்றியவர்கள் இன்று கொட்டை அரிசியே உடலுக்கு நல்லது என்று அதைத் தேடி அலைகிறோம். போந்தாக் கோழி முட்டை சுவையாக இருக்கும் என்று சொன்னவர்கள் நாட்டுக் கோழி முட்டைக்காக இரண்டு மடங்கு விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். வெகுதூரம் வந்துவிட்ட பிறகு, மீண் டும் கரிம விவசாயம், இயற்கை எரு, நாட்டுப் பசு, செக்கில் ஆட்டிய எண்ணெய், பாரம்பரிய உணவு வகைகள், மண்பாண்ட சமையல், வெல்லப் பலகாரம், சிறுதானியம், பருத்தி உடை என்று பழமையை நோக்கி நொண்டியடிக்கும் முயற்சிகளால் நம்பிக்கைத் துளிர்கள்.
ஒரு காலத்தில் மார்கழி மாதக் கோலங்களால் நிறைந்திருந்த தெருக் கள் வீடுகளின் பெருக்கத்தால் மூச்சுத் திணறி வாகனங்களை வழியெங்கும் பிதுக்கிக்கொண்டு நிற்கின்றன. நேரத் தைத் துரத்தும் நெருக்கடியில் மாதங்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே அறிவிக்கின்றன. மாலைவேளைகளில் வீட்டுக்கு வெளியே நின்று அனைத்தையும் அலசும் பெண்களின் கூட்டம் முகநூலிலும், அலைபேசி குறுஞ் செய்திகளிலும் காணா மல் போய்விட்டது.
 
தீவுகளான மனிதர்கள்
அன்று அடுத்த வீடு காலி யாக இருந்தால் யார் புதிதாகக் குடிவரப் போகிறார்கள் என்று காட்டிய அக்கறை இன்று அறவே இல்லை. யார் வந்தாலும் அவர்களோடு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்பதால் அண்டை வீடு அந்நியமானது.
உலகம் மட்டுமா மாறிப் போயிருக்கிறது? நாம் ஒவ்வொருவருமே மாறிப்போய்விட்டோம். நம் புன்னகையில் சிநேகம் இருப்பதைவிட பதற்றம் அதி கம் இருக்கிறது. வசதிகளின் நடுவே மகிழ்ச்சியைத் தொலைத்த வருத்தம்... 50 ஆண்டுகளாக நம்மைச் சுற்றி நிக ழும் மாற்றங்களைக் கவனித்த தலைமுறைக்கு அவசியம் இருக்கும். பெற்றவற்றைவிட இழந்தவை அதிகம் என்றும், முளைத்தவற்றைவிட தொலைத்தவை நிறைய என்றும் எண்ணும் இடைப்பட்ட தலைமுறை இது. திரும்பிப்போக முடியாத பாதிக் கிணற்றுப் பயணம்.
சொந்த ஊரில் அந்நியராக, பிழைக் கும் ஊரில் அகதியாகத் தொடரும் வாழ்வில் பழைய மகரந்த நொடிகளில் சற்று மனம் லயிப்பதற்கே இந்த ’காற்றில் கரையாத நினைவுகள்’.
 
 
அண்ணா நகருக்குச் சென்றிருந்த நான் அங்கு வாழும் என் நண்பர் ஒருவரின் நினைவு வர, சந்திக்கலாம் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டுக்குச் சென்றேன். மாலை நேரம். அவரோ தொலைக்காட்சியில் தோய்ந்து இருந்தார். என்னைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி அடைவார் என்று எதிர்பார்த்தேன். அவரோ தொலைபேசியில் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே என்பதுபோலப் பார்த்தார். ‘‘ நான் இந்த வழியாக வந்தேன், வெறுமனே எட்டிப் பார்க்க நினைத்தேன்..’’ என்று சமாளித்துத் திரும்பினேன்.
விருந்து என்பது தமிழகத்தில் வித்தியாசமான பதம். வீட்டுக்கு வருகிறவர் அனைவரும் விருந்தினர். இன்று உறவினர் மட்டுமே விருந்தினர். அதிலும் நெருங்கிய சொந்தம் மட்டுமே அடங்கும். ஒன்றுவிட்டவர்களைக் கழற்றிவிட்டுப் பல நாட்களாகிறது.
அந்தக் காலத்தில் அனைவரும் உறவினர்கள். ஓர் ஊரில் இருக்கும் அனைவரும் முப்பாட்டன் வகையில் சொந்தமாய் இருப்பார்கள். திண்ணையில் அமர்ந்திருக்கும் அனைவரும் உணவு வேளையில் உண்ண அழைக்கப்படுவார்கள். பின்னர், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் குடியேற நேர்ந்தாலும் அந்த நெருக்கம் நீடித்தது.
 
எப்போதும் வரலாம்
நகரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் வருவது மரியா தைக் குறைவு. அவர்களும் செய்தி தெரிந்தால் கோபப்படுவார்கள். நகரத்துக்குச் செல்வது அரிது. கிராமத்தில் இருந்து பண்டிகைக்குத் துணி எடுக்கவும், தீபாவளிக்குப் புதிதாக வெளி யான திரைப்படம் பார்க்கவும் நகரத்துக்கு வருகிறவர்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாததால், உறவினர் வீட்டில் தங்குவார்கள். வருவதை முன்கூட்டிச் சொல்லும் வசதிகள் அன்றுஇல்லை. வருகிறவர்களை எந்நேரமானாலும் வரவேற்று, வீட்டில் இருப்ப தைக் கொஞ்சம் சூடாக்கி அப்பளம் பொரித்தோ, பப்படம் சுட்டோ தட்டை நிரப்பிப் பரிமாறுவார்கள். இதற்காகவே சாப்பாடு போட பாக்கு மட்டை நீரில் நனைக்க பரணில் இருக்கும். எப்போதுமே கொஞ்சம் கூடுதலாகச் சமைப்பது அன்றைய வழக்கம்.
வருகின்ற உறவினர்கள் கூடமாட ஒத்தாசை செய்வார்கள். ஒருவர் காய்கறி நறுக்க, இன்னொருவர் வெங்காயம் உரிக்க, வெகு சீக்கிரம் சமை யல் மணக்க மணக்கத் தயாராகும். பாத்திரம் அலம்பி வைப்பது வரை உரிமையோடு உதவுவார்கள். தன்முனைப்பில்லா உறவுமுறை அது.
இன்று சொந்த வீட்டிலேயே சொல்லாமல் போனால் சோறு கிடைக்காது. அனைத்தையும் உண்டு கழுவி கவிழ்த்து வைப்பதே மாநகரங்களில் மாபெரும் சாதனை. பழையதை உண்ண அங்கு நாய்கள்கூடத் தயாராக இல்லை. சொல்லி வந்தாலும் உறவினர் கால் மேல் கால் போட்டு களித்திருக்கும் காலம் இது. அவர்களையும் அழைத்துக்கொண்டு உணவகம் செல்லும் நிலை. அல்லது, வெளியில் இருந்து தருவித்த பலகாரங்கள் சம்பிரதாயத்துக்காகப் பரிமாறப்படும். வந்தவர் கள் அவற்றைப் பார்வையிலேயே உண்டு முடித்து விடுவார்கள்.
 
பேசுவதெல்லாம் கதை
எங்கள் சின்ன வய தில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்தக் காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என்று வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம். அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு.
அவர்களுடன் யார் இரவில் படுத்துக்கொள்வது என்று போட்டிப் போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய்த் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்றுடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிற உறவுகள் உண்டு.
வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச்சரக்காகக் கருதப்பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷப் பலகாரங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் குதூகலம் தரும். இன்று அக்காள், அண்ணனோடு மட் டும் உறவு முடிந்துவிட்டது. அவர்க ளும் தங்குவதற்காக வருவதில்லை. திக் விஜயத்தோடு சரி. தங்காததற்குக் காரணம் தங்கள் வீடே சொர்க்கம் என்ற நினைப்புதான். கிடைக்கிற இடத்தில் பாயை விரித்துப் படுப்பவர் இப்போது இல்லை. வசதிகளோடு சமரசம் செய் யத் தயாராக இல்லை.
 
ஆச்சரியம் இழந்த கண்கள்
இன்றைய குழந்தைகள் புதிதாக வரும் உறவினரிடம் புன்னகையோடு உபசரிப்பை முடித்துக்கொள்கின்றன. அரு கில் சென்று ஆசையாய்ப் பேசுவது இல்லை. அவர்களுக்குக் கதைகளைச் சொல்ல கணினி இருக்கிறது. கணினிக் கதைகளில் கரிசனம் இருக்குமா!
பொழுதுபோகாமல் அலைந்த தலைமுறை அது. இன்று மிடுக்குக் கைபேசி யால் பொழுதுபோதாத தலைமுறை.
உறவு என்பது அன்று இருவழிப் போக்குவரத்து. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தந்தார்கள், ‘அல்ல அவசர’த்துக்கு ஓடி வந்துவிடுவார்கள். உடல்நலம் சரியில்லை என்றால் உடனிருந்து பணிவிடை செய்வார்கள். அன்று உறவு உரிமையாய் இருந்தது, இன்று கடமையாய்த் தேய்ந்தது.
எனக்குத் தெரிந்து பெரியப்பா வீட் டில் தங்கிப் படித்தவர்கள் உண்டு. வசதியின்மையால் அத்தை வீட்டில் வசித்து கல்லூரியைக் கடந்தவர்கள் உண்டு. அன்றும் விடுதி வசதிகள் இருந்தன.
ஆனாலும் உறவினர் வீடு கற்களால் ஆகாமல் கனிவால் ஆனதால் கதவுகள் அனைவருக்கும் அகலத் திறந்தன. அனுசரித்தும், பொறுத்துக்கொண்டும் உறவுகளோடு கூடிக் களித்த காலம் அது.
விதவைத் தங்கையைத் தங்களுடன் வைத்துக்கொண்ட அண்ணன்கள் உண்டு.
இன்றோ சென்னையிலேயே இருந்தாலும் எவ்வளவு வற்புறுத்தியும் தங்க மறுக்கும் நெருங்கிய சொந்தங்கள். இன்று சொந்தத்தைவிட சுதந்திரம் முக்கியம்.
 
உறவுச் சங்கியில் மாற்றம்
காலாண்டுத் தேர்வுக்கும், முழுஆண்டுத் தேர்வுக்கும் பயிற்சிகள் நெரிக் காத விடுமுறை உண்டு.
அப்போது உறவினர் வீட்டுக்குக் குழந்தைகள் செல்வார்கள். அங்கு புதிய மனிதர்களோடு பழகி, புதியன கற்றுத் திரும்பி வருவார்கள்.
நான் எங்கள் அத்தை வீட்டுக்கு 5-ம் வகுப்பு விடு முறையில் சென்று சதுரங் கம் கற்றேன், நீச்சல் பயின்றேன், தேங்காய் உறிக்கக் கற்றேன்.
இன்று எந்தக் குழந்தை யும் தங்கள் வீட்டைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அறையைவிட்டுக்கூட அகல விரும்புவதில்லை.
அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்து எப்போதாவது சந்திக்கும் சூழலுக்கு உறவுச் சங்கிலி மாறியதால் அதில் கணுக்கள்தோறும் விரிசல்கள்.
 
கை நீட்டும் நட்பு
இன்று உறவுவிட்ட இடத்தை நட்பு பிடித்துக்கொண்டது. அவசரமாகப் பணம் வேண்டும் என்றால் அன்று நெருங்கிய சொந்தம் நீட்டியது கை.
இன்று ஆத்ம நண்பர்கள்தான் ஆபத்துக்கு வருகிறார்கள். அவர்களே திருமணத்தின்போது அத்தனை இடத்திலும் நின்று சேவகம் புரிகிறார்கள். உறவு மரபுரீதியான வரவேற்பில் முடிந்து போகிறது.
எந்த நெருக்கமும் தொடராவிட்டால் தொய்ந்து போகும். இத்தனை மாற்றங்கள் நடுத்தரக் குடும்பங்களில் நடந்தாலும் இல்லாதவர்களிடம் இன்னமும் உறவின் செழுமை நீடிக்கிறது. அவலம் என்றால் அழுகிற கண்களும், கவலை என்றால் துடைக்கிற கைகளும் ஏழைகளிடம் மிச்சமிருக்கிறது. அவர்கள் இல்லம் சிறிதாக இருந்தாலும் இதயம் பெரிதாக இருக்கிறது.
அவர்கள் நமக்கு உறவின் மேன்மையை மவுனமாய்க் கற்றுத் தந்துகொண்டே இருக்கிறார்கள்.
 
ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்பு, எதிர்காலத்தில் தந்தியில்லாத தொலைபேசி புழக்கத்துக்கு வரும்; அதைப் போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்லலாம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்தத் தொலைபேசியில் கணக்கு போடலாம், கணினி பார்க்கலாம், மின்னஞ்சல் அனுப்பலாம், பாட்டு கேட்கலாம், பாடம் படிக்கலாம், புகைப்படம் எடுக்கலாம், புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம், குறுந்தகவல் தரலாம், குரலோசைத் தகவல் அனுப்பலாம், கைகுழல் விளக்காகப் பயன்படுத்தலாம், விழிப்பு மணி நேரம் குறிக்கலாம், சங்கேத வார்த்தையால் மூடி வைக்கலாம், அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் அனுப்பலாம், திரைப்படம் பார்க்கலாம், முன்பதிவு செய்யலாம், விளையாடி மகிழலாம், பொருட்கள் தருவிக்கலாம், அரட்டை அடிக்கலாம்.. என்று யாராவது நம்மிடம் சொல்லியிருந்தால், அவரை புத்திசுவாதீனம் அற்றவர் என்று பட்டம் கட்டிப் பரிகசித்திருப்போம்.
அன்று சாதாரண தொலைபேசியே அரிதாக இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கும் சாதனம் அது. திரைப்படங்களில் தென்படும் அதிசயக் கருவி. கதாநாயகன் தொலைபேசியில் பேசுவதுபோன்று சுவரொட்டிகள் முளைக்கும். தவறான அழைப்பால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அத்துமீறிய சிநேகம் ஏற்பட்டதுபோல திரைக்கதைகளும் உண்டு.
பல வீடுகளில் தொலைபேசியில் பேசுவதுபோல நிழற்படம் எடுத்து மாட்டுவதும் உண்டு. உயர்பதவியில் இருப்பவர்கள் தொலைபேசியில் பேசுவதுபோன்ற படத்தை செய்தித்தாள்கள் வெளியிடுவது உண்டு.
சாமானியர்கள் அவசரமாகப் பேசுவதற்கு அஞ்சலகத்துக்குச் செல்ல வேண்டும். எதிர்முனையில் இருப்பவருக்கும் சொந்தத் தொலைபேசி இருக்காது. இருப்பவர் வீட்டில் சொல்லி அழைக்க, மனு போட வேண்டும். அவரோ அலுத்துக்கொண்டே வரவழைப்பார். அந்நியர் வீட்டில் அத்தனை செய்தியையும் பேச முடியாது. லேசில் அழைப்பு கிடைக்காது. கிடைத்தாலும் தொடர்பு நீடிக்காது. பதிவுசெய்து காத்திருப்பவர் பட்டியல் நீளும்.
7-ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதைக் காதில் வைத்த தும் அத்தனை மகிழ்ச்சி. எங்கள் வகுப்பில் ஓரிருவர் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. எங்காவது வாய்ப்பு கிடைத்தால் அந்த எண்ணுக்கு சுற்றி, என்ன பேசுவது என்று தெரியாமல் தவிப்போம். அன்று தொலைபேசி இணைப்பு கிடைப்பது அபூர்வம். நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்தால் விரைவில் அளிக்கப்படும்.
1990-ல் பணியாற் றும்போதுகூட வெளியூருக்குப் பேச வசதியின்றி இருந்தது. அவசரமாக நாகையில் இருந்து நன்னிலத்துக்கு பேச மின்னல் அழைப்பைப் பதிவு செய்ய வேண்டும். சமயத்தில் மின்னலோடு இடியும் வரும். தேர்தல் நேரத்தில் மட்டும் எங்கும் பேசும் வசதி அனுமதிக்கப்படும். மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே எப்போதும் பேசும் வசதி உண்டு.
பொதுமக்கள் பேச தனியார் தொலைபேசி இணைப்பகங்கள் முளைத்த காலமொன்று உண்டு. அங்கு சாவகாசமாகப் பேசுபவரை விரைந்து முடிக்கும்படி பின்னால் இருப்பவர் நச்சரிப்பார்கள். அது கைகலப்பில் முடிவதும் உண்டு.
 
வயதும் தொழில்நுட்பமும்
இன்று 2 வயது குழந்தைக்கே அலைபேசி விளையாட்டுப் பொருளாகிவிட்டது. அழும் குழந்தைகளுக்கு அலைபேசியே வாயடைக்க வைக்கும் மருந்து. அதைப் பயன்படுத்தும் விதங்களை, சின்னக் குழந்தைகள் பெரியவர்களைவிட வேகமாக கற்றுக்கொள்கின்றனர். காரணம், பழுதாவதைப் பற்றி அவர்கள் பயப்படுவதில்லை. தொழில்நுட்பத் தடை குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஏற்படுவது இயற்கை.
அலைபேசி அறிமுகமானபோது அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது. நட்சத்திரங்களும், பெரும் முதலாளிகளும் மட்டுமே வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருளாக அது இருந்தது. செங்கல் அளவுக்குப் பெரிதாய் இருந்த அதை சிலர் காட்டும்பொருட்டு கைகளில் ஏந்தித் திரிவார்கள். ஒரு நிமிடம் பேச ஊர்ப்பட்ட காசு.
அன்று, திரை நடிகர்களிடம் மட்டும் இருந்த அலைபேசி இன்று திரையரங்கைப் பெருக்குகிறவர்களிடமும் இருக்கும் அளவு சகஜமாகியிருப்பது மிகப் பெரிய தகவல் புரட்சி. சில நேரங்களில் சமத்துவத்தை சாதுர்யமாக செய்துவிடுகிறது தொழில்நுட்பம். அன்று வீதிக்கொரு தொலைபேசிகூட இல்லாத நிலை. இன்று ஆளுக் கொரு அலைபேசி சாத்திய மாகியிருக்கிறது.
அலைபேசி வந்த பிறகு பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மலிவு விலையில் ஊர்தியை அமர்த்தி மாநகரத்தில் பயணம் செய்ய முடிகிறது. காத்திருக்கும் நேரத்தை அது கணிசமாகக் குறைத்திருக்கிறது. பேசி நேரத்தை வீணடிக்காமல் குறுஞ்செய்தி அனுப்பிக் காசையும், காலத்தையும் மிச்சம் பிடிக்க முடிகிறது. கணினி உதவியின்றி மின்னஞ்சலைப் பார்த்து உடனடியாக பதில் அனுப்ப முடிகிறது.
அன்றாடம் நம்மை எச்சரிக்க வேண்டிய நிகழ்வுகளை மணியடித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யலாம். வருகிற அழைப்பில் எது முக்கியம் என்பதை, எண்ணைப் பார்த்து முடிவுசெய்யலாம்.
பயணத்தின்போது அரிய தகவல்களை காணொலியாகக் காண முடிகிறது. ஒருவர் பேசுவதைப் பதிவுசெய்து பத்திரப்படுத்தலாம். யார் யார் பேசினார் என்பதை அறிந்துகொள்ளும் வசதி உண்டு. படித்த நண்பர்களின் தொலைந்த முகவரிகளைக் கண்டுபிடித்து, குழுவை அமைத்து, மறுபடியும் பள்ளிச் சிறார்களாய்ச் சிறகடிக்கலாம். ஒருவர் அளித்த செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்பி வைக்க முடியும்.
விபத்தின்போதும், பேரிடரின்போதும் நிவாரணப் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. இப்படி எத்தனையோ வகைகளில் உயிரைக் காப்பாற்றவும், உணர்வைப் பரிமாறவும் உதவும் ஒப்பற்ற சாதனமாக அதன் உயிர்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்னைப் பெருவெள்ளத்தில் அலைபேசி ஆற்றிய பணி அபாரம்.
ரோஜா மெத்தையைத் தந்தாலும் அதற்கே ஒவ்வாமை வரும் வரை விடாத மனம் நம்முடையது. அபூர்வமாகத் தகவல் பரிமாற மட்டுமே தேவைப்பட்ட கருவி பொழுதுபோக்குச் சாதனமாகி, போதைப்பொருளாகவும் ஆகிவிட்டது. ஒருவரது கைப்பேசியை 2 நாட்கள் பிடுங்கிவைத்துவிட்டால் அவருக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுவிடும்.
அதில் அவருக்கு வருகிற செய்திகளை 2 நாட்கள் தொடர்ந்து படித்தால் நமக்கு புத்திசுவாதீனம் பாதிக்கப்படும். அன்று தொலைபேசி மட்டும் பயன்பாட்டில் இருந்தபோது அத்தனை எண்களும் அத்துபடியாக இருந்தது. இன்று மனைவியின் எண்ணே மனப்பாடம் இல்லை.
அன்று காதலை வெளிப்படுத்துவது கடினமாக இருந்தது. கடிதம் எழுதி, ஒருவேளை, பெண்ணுடைய அப்பா வின் கையில் கிடைத்தால் என்னாகும் என்ற அச்சம். இன்று யாருக்கு வேண்டுமானாலும் எதையும் அனுப்பலாம் என்ற துணிச்சல். ‘சுயமி’ (செல்ஃபி) மோகம் சிலருக்கு அதிகம். எங்கு சென்றாலும் தங்களை விதவிதமாக ‘சுயமி’ எடுக்கும் நார்சிச மனப்பான்மை. உடனடியாக அதை முகநூலில் சேர்க்கும் அவசரம்.
அந்தஸ்தின் அடையாளமாக இருந்த அலைபேசி அடிமை சாசனமாகவும் ஆகிவிட்டது. சில நிறுவனங்க ளில் ஊழியர்கள் 23 மணி நேரமும் அதை விழிப்பில் வைத்திருக்க வேண்டும்.
எப்போது வேண்டுமானாலும் மேலாளரிடம் இருந்து அழைப்பு வரலாம்.
கதவைத் திறந்து வைத்தால் காற்றைவிட அதிகமாக கொசு வருவதுபோல, இரவு முழுவதும் வர்த்தக அழைப்புகளால் வாடுபவரும் உண்டு.
முன்பெல்லாம், ஓர் அழைப்பு வந்தால் வீடே தொலைபேசியைச் சுற்றி நிற்கும். இன்று மனைவியின் பேசியை கணவன் எடுப்பது அநாகரிகம். இணைக்க வந்த சாதனம் பிரிக்குமோ என்ற அச்சம். நேரத்தை சேமிக்க வந்த அலைபேசி இன்று உபரி நேரத்தையும் உறிஞ்சிக் கொள்கிறது.
-
 
 
சொந்த வீடு என்பது நடுத்தர வர்க்கத்து கனவாகவும், ஏழை மக்களின் ஏக்கமாகவும் இருந்தது ஒரு காலம். சம்பளக்காரர்கள் வாடகை வீட்டில் வாழ்க்கையைக் கழித்த நிலை. சின்னச் சின்ன வீடுகள் ஒரே வளாகத்துக்குள் கட்டப்பட்டு பல்வேறு தரப்பினர் சொந்தமாக வாழ்ந்த சூழல் அன்று இருந்தது.
அன்று வீடு கட்டுவதற்கு நிலம் வாங்குவதே பெரிய சாதனை. குடியேற்றமில்லாத இடத்தில் வாங்கிய பிறகு, அது களவு போகாமல் இருக்க வாரம் ஒரு முறை சுற்றுலாப் போல பார்த்து வருவார்கள்.
அங்கு பெரிய கட்டிடம் எழும்பி நிற்பதைப் போன்ற கற்பனையோடு திரும்புவார்கள். நிலம் வாங்கியதும் தம் பிடித்து, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேமிக்கத் தொடங்குவார்கள்.
 
சந்தோஷத்தின் வரைபடம்
வீட்டுக்கு வரைபடம் போடுவதே பெரிய அப்யாசம். பத்து பேரைக் கலந்தாலோசிப்பார்கள். சீட்டு போடுவார்கள். இருக்கும் தொகையை வைத்து கடக்கால் போடுவார்கள். வருங்கால வைப்பு நிதியையும், சீட்டுத் தொகையையும் கொண்டு மேலே கட்டத் தொடங்குவார்கள். அதற்குப் பிறகு நகைகள் அடகு. சிலருடைய நகைகள் கழுத்தில் இருந்ததைவிட கடையில் இருந்த நேரமே அதிகம்.
வீடு கட்டத் தொடங்கும் முன்பு குடிசை ஒன்றைப் போட்டு ஒருவரைக் குடும்பத்துடன் குடியமர்த்த வேண்டும். கட்டுமானத்துக்குத் தருவிக்கும் சாமான்கள் திருடு போகாமல் இருக்க அது அவசியம். முதலில் கிணறு தோண்ட வேண்டும். தண்ணீர் வந்துவிட்டால் பெரிய மகிழ்ச்சி.
வீடு தொடங்கியதும் வருவோர் போவோரெல்லாம் ஆளுக்கொரு யோசனை சொல்வார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் சரியெனப்படும். பின்னால் தேவைப்படுமென ஒதுக்கி வைத்த பணமெல்லாம் வழித்தெடுக்கப்படும். பெண்கள் கடுகு டப்பாவிலும், மிளகு டப்பாவிலும் ஒளித்து வைத்தவை வெளியில் வரும்.
 
அன்று வீட்டில் திண்ணை இருந்தது
வீட்டைக் கட்டுவது மேஸ்திரி மட்டுமே. பொறியாளர் யாரும் அப்போது இல்லை. பாதியில் அதிகப் பணம் கேட்டு தகராறு செய்வார். சில நாள் வேலை நின்றால் வேதனை ஏற்படும். வீடு முடியும்போது மேஸ்திரி குடும்பமும் உறவில் ஒன்றாக ஆகிப்போகும்.
அந்தக் காலத்தில் வீட்டின் வெளியே திண்ணைகள் இருக்கும். படிக்கவும், எழுதவும், அழகாய் அமர்ந்து மழையைப் பார்க்கவும், சிறிது நேரம் படுத்து உறங்கவும் திண்ணைகள் இரண்டும் திண்டு திண்டாய் இருக்கும்.
எங்கள் வீட்டை அத்துவானக் காட்டில் கட்டினோம். மனை விலை அங்குதான் கட்டுபடியானது. புதிதான பகுதியில் வீடு கட்டினால் பாதை இருக்காது, வடிகால் இருக்காது, மின்சார வசதியும் இருக்காது.
ஊரில் இருக்கும் பூச்சிபட்டு எல்லாம் விளக்கு வெளிச்சத்துக்கு ஓடி வரும். சுதந்திரத்தைச் சுவைக்க நினைத்தவர்கள் வாடகை வீட்டிலேயே வாழ்ந்திருக்கலாமே என எண்ணத் தொடங்குவார்கள்.
 
அத்துவானக் காடும் ஒரு கூடும்
பாம்புகள் படையெடுக்கும். பல்லிகள் பெருக்கெடுக்கும். ஒவ்வொரு வசதிக்கும் நடந்து நடந்து கால் தேயும். அந்த இடத்தில் யார் வீடு கட்டச் சொன்னது என்று அத்தனை பேரும் கேட்டுத் தொலைப்பார்கள். அக்கம்பக்கத்தில் புதிய வீடு வராதா என்று தவம் இருப்போம். யாரேனும் வீடு கட்ட வந்தால் கட்டச் சொல்லி வற்புறுத்துவோம்.
காய்கறித் தோட்டம் போடப்படும். மரங்கள் நடப்படும். புதிதாக ஒவ்வொரு வீடு முளைக்கும்போதும் நம்பிக்கை முளைக்கும். குழந்தைகளுக்கோ விளையாட ஆள் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படும். அருகில் இருக்கும் காலி மனைகள் விளையாட்டுத் திடல்களாக மாறும். விறகுக் குச்சிகள் மட்டையாகும். ரப்பர் பந்து சீறிப் பாயும்.
 
மேலே சுழலும் காற்றுப் பூ
 
அரிக்கன் விளக்கில் படிப்பு நிகழும். ஆனாலும் மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். மின்சாரம் வந்த பின்பு கவனம் சிதறும். இருந்தாலும் இஸ்திரி போட்ட சட்டையோடு பள்ளி செல்ல பரவசமடைவோம்.
குண்டு விளக்கு குழல் விளக்காக வசதிக்கேற்ப வளர்ச்சியடையும். மின்விசிறி மாட்டும்போது நந்தவனத்தையே வீட்டுக்குள் அழைத்து வந்ததைப்போல் ஆனந்தம் ஏற்படும். மின்விசிறிக்கு அடியில் யார் படுப்பது என்று குழந்தைகளுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படும்.
40 வயது நிகழும்போது வீடுகட்டி முடித்தால் பெரிய சாதனை நிகழ்த்திய திருப்தி ஏற்படும்.
சொந்த வீடு என சொல்லிடத்தான் எத்தனை பெருமை! மண்ணில் பூத்த மல்லிகைக்குத்தான் எத்தனை மணம்! நிலத்தில் காய்த்த கத்தரிக்குத்தான் எத்தனை சுவை!
வீட்டை ஒட்டிய பள்ளி. பணியிடம் சார்ந்த நண்பர்கள். கூப்பிடு தூரத்தில் உறவுகள். சொர்க்கமே இல்லமாக மாறிய நினைவு. எத்தனையோ பல மாளிகைகள் அருகில் முளைத்தாலும் ஏக்கம் இல்லை. பொறாமை இல்லை. நம்மைவிட அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்ற எண்ணம்கூட இருந்தது இல்லை. நமக்கு வாய்த்தது நமக்குப் போதும்.
 
நேற்று மாதிரி இன்றில்லை
இன்று பணிக்குச் சேர்ந்ததும் வீடு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.
வங்கிகள் வழங்கும் தாராளக் கடன். அலுவலகம் அளித்திடும் முன்பணம். சிலர் கட்டிய வீட்டோடு கட்டிக்கொள்ளும் மனைவி. பலருக்கு அவர்களே வாங்கும் அடுக்கக வீடு.
நிலத்தை அடிக்கடி பார்க்கும் அக்கறை தேவையில்லை. கதவையோ, ஜன்னலையோ தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. மெத்தப் படித்தவர்கள் கட்டும் கட்டிடங்கள். முகம் தெரியாத அவர்களிடம் நமக்கு ஒட்டோ, உறவோ இல்லை. தவணை தவறாமல் பணத்தைச் செலுத்தினால் உரிய நேரத்தில் வீட்டுச் சாவி நம் கைக்கு.
அங்கு மிதித்துச் செல்ல மண்ணும் இல்லை. நம்முடையது மட்டும் எனச் சொல்ல எந்த இடமும் இல்லை. கதவை வீட்டுக்குள் நுழைந்த உடனே சாத்த வேண்டும். இல்லாவிட்டால் பொருட்கள் களவு போகும். வீட்டுச் சத்தம் வெளியே போகும். அண்டை வீட்டோடு சண்டை நிகழும்.
 
நீ யாரோ? நான் யாரோ?
அருகில் இருப்பவர் யார் என நமக்கு முகமும் தெரியாது, முகவரியும் தெரியாது. நாமாகச் சென்று பேச முயன்றால் பெரும் ஏமாற்றமே அங்கு மிஞ்சும். தினமும் பார்த்தும் பேசாமடந்தையாக பலரும் இருப்பர். மின்தூக்கியில் அவர்களோடு செல்வதுகூடநெடும் பயணமாக நினைக்கத் தோன்றும்.
வீடே சிறையாக, கட்டிடமே கல்லறையாக, பாதி உயிரோடு மீதியைப் போக்க சுரத்தில்லாமல் இவற்றில் வாழ்பவர் உண்டு. பிறந்ததில் இருந்து மண்ணையே மிதிக்காமல் மண்ணுக்குள் செல்வதே அடுக்கக வாழ்க்கை. ஒவ்வொரு அறையிலும் கழிவறை உண்டு.
குளியலறைகள் நிறைய. ஆனால் குளிக்கத் தண்ணீரோ குறைவு. நேரம் பார்த்து தண்ணீரை நிரப்பும் ஒழுக்கக் கோட்பாடு. பகலிலும் வேண்டும் வெளிச்ச விளக்குகள். யார் கதவைத் தட்டினாலும் சரிபார்த்துத் திறக்கும் சங்கடங்கள். வளாகத்துக்குள் இருக்கும் வெற்றிடங்களில் மாலைவேளையில் பொழுதுபோகாமல் காற்று வாங்கக் காத்துக்கிடக்கும் பெரிசுகள். இந்த அடுக்ககங்களில் தன



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies