மீன் பிரியர்களே உங்களுக்கு வந்து விட்டது பேராபத்து..!
28 Jan,2018
வியாபாரத்தில் போட்டி மற்றும் அதிக லாபம் காரணமாக போலிகள் மற்றும் கலப்படம் அதிகரித்து விட்டது.
ஏற்கனவே பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை, போலி மாமிசம், காய்கறிகள் மார்க்கெட்டுக்கு வந்து பீதியை கிளப்பி வருகிறது. இது குறித்த விவாதங்கள்தான் இப்போது பரவலாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிளாஸ்டிக் மட்டன் சிக்கனை தொடர்ந்து கடல் வாழ் உயிரினமான மீனிலும் போலி வந்து விட்டது. இதையும் போலியாக தயாரித்து இருப்பது வழக்கம் போல சீனாக்காரன்தான்.
இந்த போலி மீனானது அதிக தண்ணீரை உறிஞ்சி வைத்திருப்பவை. இந்த மீனை துண்டு துண்டாக வெட்டி அமிழ்த்தினால், அதில் இருந்து ஸ்பான்சில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதை போல இருக்கும். இதனை வைத்து இது போலியான மீன் என்பதை கண்டறியலாம்.