பிரேசலில் 245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை -
23 Oct,2017
பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் சாகச விரும்பிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர்.
245 பேர் இணைந்து பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். பாலத்தில் இருந்து ஒரே நேரத்தில் கீழே குதித்தனர். 245 பேரும் பாலத்தில் ஊஞ்சல் ஆடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாகசப்போட்டி முடிந்தவுடன் சிலர் பாலத்தில் அடியில் உள்ள நீருக்குள் குதித்தனர். மீதி பேர் பாலத்திற்கு மேலே ஏறினர். இந்த சாகசப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் இது கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்டதாக கூறினார்.