...............................
நல்ல குணங்களுடன் நல்ல செயல்களைச் செய்யும் கணவனும் மனைவியும் இணைந்த
இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பானது. அச்சிறப்பு க்குச் சிறப்பு சேர்ப்பது நல்ல குழந்தைகளைப் பெறுவதாகும்.
ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனதும் அந்தப் பெண்ணு ம், அவளுடைய கணவனும், இருவரின் குடும்பத்தினரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தை பாக்கியத்தைத்தான். ஆனால், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றா ல், இருவரின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானமும் புத்திரகாரகனான குருவும் சுப பலத்துடன் அமைந்திருக்க வேண்டும். இல்லையெனில், புத்திர பாக்கியம் கிடைப்பது தடைப்படுகிறது. புத்திர தோஷம் என்பது குழந்தை பாக்கியம் இல்லாத நிலையை மட்டும் குறிப்பதல்ல; புத்திரர்களால் ஏற்பட க்கூடிய சிரமங்களையும் சேர்த்தே குறிக்கு ம். குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை ஏற்படுத்தும் புத்திர தோஷத்துக்கான கிரக அமைப்புகளையும் அதற்கான பரிகாரங்க ளையும் பார்ப்போம்.
5-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு அல்லது கேது ஆகிய கிரகங்கள் இரு ந்தால். புத்திர தோஷம் ஆகும். 5-ம் வீட்டுக்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும், பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும், 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெற்றிருந்தாலும் புத்திர தோஷ ம் உண்டாகும்.
தம்பதியரின் ஜனன ஜாதகத்தில் ஒருவருக்குப் புத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டு, மற்ற வருக்குப் புத்திரஸ்தானம் வலுப்பெற்று இருந்தால், அவர்களுக்குப் பெண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒருவருக்காவது புத்திரஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.
புத்திர தோஷத்துக்கு தீர்வு என்ன?
புத்திரதோஷத்தை நிவர்த்திசெய்யும்தலமாக பிரசித்தி பெற்றி ருக்கும் ராமேஸ்வர த்துக்குச் சென்று, கடலில் 21 முறை மூழ்கு வதுடன், அங்குள்ள 21 தீர்த்தங்களிலும் தீர்த்த மாட வேண்டும். பிறகு புத்திர பாக்கியம் அருளுமாறு பக்தி பூர்வமாகப் பிரார்த்தி த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எந்த கிரகத்தால் புத்திர ஸ்தானத்துக்கு தோஷம் ஏற்பட்டிரு க்கிறதோ அந்த கிரகத்துக்கு ரிய பரிகாரத் தலத்துக்குச் சென்று இறைவனை அர்ச்ச னை செய்து வழிபட்டு வர வேண்டும். இப்படி நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்தால், விரைவிலேயே புத்திர தோஷம் விலகி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குருவாலும் சந்திரனாலும் புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால், வியாழக்கிழமைய ன்று திருச்செந்தூர் சென்று முருகப் பெருமா னுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, அங்குள்ள ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வர வேண்டும். இப்படி 27 வாரங்கள் தொட ர்ந்து செய்து வந்தால், புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். சந்தானகோபாலனை விரதம் இருந்து பூஜித்து வந்தாலும் குழந்தைவரம் கிடைக்கும்.