முகத்திற்கே அழகை கொடுப்பது நமது கண்கள், ஆனால் முகத்தின் அழகை கெடுப்பதில் முக்கியமான ஒன்று கருவளையம்.
சிலருக்கு அதிகமாக கருவளையம் இருக்கும் போது முகத்தின் அழகே கெடும், இதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே.
இதற்கு முதல் காரணம் கண்களுக்கு கீழ் உள்ள தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இரண்டாவதாக போஷாக்கு இல்லாத உணவு வகைகளை உண்பதுகூட காரணமாக அமையலாம்.
தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச்சத்தும் உள்ள உணவு பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் கருவளையம் நாளடைவில் மறைந்துவிடும்.
முன்றாவது காரணம் கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம்.
அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம்.
நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.
அனிமியா மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவை இருந்தால் கருவளையமானது ஏற்படும்.
களைப்பு மற்றும் தூக்கம் அளவுக்கு அதிகமான வேலை இருப்பதால், உடலிலும் மனதிலும் அழுத்தமானது அதிகம் காணப்பட்டால் கண்களைச் சுற்றி கருவளையம் வரக்காரணம் ஆகும்.
நிறமூட்டும் நிறமிகள் பயன்படுத்துவதனால் சூரியக்கதிர்கள் அதிகமாகப்படுவதால் நிறமூட்டும் நிறமிகள் மெலனின் தன்மை கொண்டதாலும் கண்களுக்கு கீழ் கருவளையம் வரக்காரணமாகும்.
இதற்கு சிறந்த வழிமுறைகளை நாம் வீட்டிலே செய்யலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் குழைத்து, அதை வெதுவெதுப்பான சுட வைத்து குளிப்பதற்கு முன் தினமும் கண்களை சுற்றி பூசி 10 நிமிடம் கழித்து குளித்தால் கருவளையம் காணாமல் போகும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு இயற்கை வெளுக்கும் பண்புகள் உடையது. இது கருவளையங்களை போக்க வல்லது.
இரவில் ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கு சாறு எடுத்து கண்களுக்கு கீழ் 15 நிமிடங்கள் வைத்து பின் கழுவுதல் வேண்டும்.
பன்னீர்
பன்னீருடன் கடலைமா கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுதல் வேண்டும், இதனை வாரம் இரு முறை செய்து வந்தால் கண்களின் கீழ் இருக்கும் தோலை சுலபமாக்குகிறது.
தக்காளி
தக்காளியை ஒரு பசை போல் அரைத்து அதனை கண்களுக்கு கீழ் வைத்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுதல் வேண்டும். இப்படி செய்வதனால் தோல் மென்மையான மற்றும் பிரகாசிக்க உதவுகின்றது.
பாதாம் எண்ணெய்
பாதாம் விட்டமின் E கொண்டது, சிறிது பாதாம் எண்ணெயை கண்களின் கீழ் வைத்து மற்றும் மெதுவாக மசாஜ் செய்யவும்.
அதை ஒர் இரவு விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் கழுவுங்கள், கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் நாளடைவில் நீங்கும்.