சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் குங்குமப்பூ!
08 May,2017
குங்குமப்பூஸ Crocus Sativus என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. சாஃப்ரான் க்ரோகஸ் (Saffron Crocus) என்ற செடியின் பூவிலுள்ள சூலகத் தண்டு, மற்றும் சூலக முடிகள் ஆகியவற்றைத் தனியே பிரித்து, வெயிலில் உலர்த்திப் பொடியாக்கப்படுவதே குங்குமப்பூ. இதனுடன் வேறு எந்தப் பொருளும் சேர்க்கப்படுவதில்லை.
குங்குமப்பூ பெண்களுக்குப் பல வகைகளில் மருந்தாகப் பயன்படுகிறது. பருவ வயதை அடைந்தும் பூப்பெய்தாமல் இருக்கும் பெண்களுக்கு, குங்குமப்பூவைச் சாப்பிடக் கொடுத்து வந்தால், வயதுக்கு வருவார்கள்.
கர்ப்பிணிகளுக்கும் குங்குமப்பூ ஒரு வரப்பிரசாதம். கரு உண்டான நாள் முதல், காய்ச்சிய பசும்பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்த்து இரவில் அருந்தி வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும். கருவுற்ற ஐந்தாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை இதைச் சாப்பிடுவதன்மூலம் தாய்க்கும் சேய்க்குமாகச் சேர்த்து முழுப் பலன் கிடைக்கும்.
குழந்தை பிறந்த பிறகும் குங்குமப்பூவைச் சாப்பிட்டு வருவதன் மூலம் பிரசவ அழுக்குகள் வெளியேறும். உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்தத்தைச் சீராக எடுத்துச் செல்ல குங்குமப்பூ உதவுவதால், செரிமானமும் பசியும் மேம்படும். மேலும், இது இரைப் பைக் குடலில் ஒரு ஜவ்வு போல ஏற்படுத்தி அசிடிட்டியில் இருந்தும் பாதுகாக்கும்.
பிரசவ காலச் சிக்கல் ஏற்படக்கூடும் என மருத்துவர் சொல்லியிருந்தால், பெருஞ் சீரகத்தை (சோம்பு) நீர்விட்டுக் கொதிக்க வைத்து, அரை சிட்டிகை அளவு குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிடக் கொடுத்தால் சிரமம் இல்லாமல் குழந்தை பிறக்கும். பொதுவாக, 7-வது மாதத்திலிருந்து இந்தப் பெருஞ்சீரக டீயைக் குடிக்கலாம். ஆனால், குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பதெல் லாம் மூடநம்பிக்கை.
கண் நோய்களால் பாதிக்கப்படும் போது, குங்குமப்பூவைத் தாய்ப்பால் விட்டு அரைத்து இரண்டு சொட்டு வீதம் கண்களில் விட்டுவந்தால் பலன் கிடைக்கும். செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யக் கூடியது என்பதால், சமையல் செய்து முடித்ததும் அனைத்து உணவு களிலும் குங்குமப்பூவைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உணவு வாசனை யாக இருப்பதோடு, சுவையும் கூடும்.
கண்களில் உண்டாகும் அழுத்தத்தைச் சரிசெய்வதோடு, மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குங்குமப்பூ நிவாரணம் தரும். ஜலதோஷம், இருமல், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் இது மருந்தாகப் பயன்படும். அந்தரங்க உறுப்புகளில் ரணம் ஏற்பட்டால், குங்குமப் பூவில் தேன் சேர்த்து மையாக அரைத்து பூசி வந்தால் குணமாகும்.