யார் அந்த கருப்பு ஆடு: விசாரணைக்கு உத்தரவிட்ட ஏடிஜிபி!
22 Sep,2016
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்ததாக தகவல் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில் ராம்குமார் மின்சார ஒயரை கடித்ததாக கூறப்படும் அந்த சுவிட்ச் பாக்ஸ் மற்றும் ஒயர் புகைப்படம் வெளியாகியது. இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. டைல்ஸ் பதிக்கப்பட்ட அந்த சுவிட்ச் பாக்ஸை ராம்குமார் எப்படி எந்த காயமும் இல்லாமல் உடைக்க முடிந்தது உள்ளிட்ட பல சந்தேகங்கள் எழுந்தது.
இந்நிலையில் இந்த புகைப்படம் எப்படி வெளியானது என்ற சந்தேகமும், அதிர்ச்சியும் போலீஸ், சிறைத்துறை தரப்பில் நிலவியது. இந்நிலையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி விஜய்குமார் இது தொடர்பாக விசாரணை நடத்தி புகைப்படம் எவ்வாறு வெளியாகியது என்பதை கண்டறிய வேண்டும் என்று காவல்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ராம்குமார் கைது செய்யப்படும் போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்பட்ட போது அவர் கழுத்து அறுபட்ட புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த புகைப்படத்தை யார் எடுத்தது அது எப்படி வெளியாகியது என்ற கேள்வியும் நீதிமன்றத்தால் எழுப்பப்பட்டது.
ராம்குமாரின் வாய் எரிந்திருக்க வேண்டும்: பிரபல மருத்துவர் தகவல்!
ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தகவலில் பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சந்தேகங்களை தீர்க்கும் பிரேத பரிசோதனை இன்னமும் நடைபெறவில்லை.
இந்நிலையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை பிரேதப்பரிசோதனை செய்த பிரபல உடற்கூறு மருத்துவர் டிகால் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராம்குமார் மின்சர ஒயரை கடித்து தற்கொலை செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை விளக்கியிருக்கிறார்.
ராம்குமார் மின் கம்பியைக் கடித்திருந்தால் அவரது வாய் எரிந்திருக்கனும். ஆனால் அவரது வாயில் எரிந்ததற்கான காயம் இல்லை என்கின்றனர். நீர் பதம் இருக்கும் சமயத்தில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
மேலும் வாயின் உள்பகுதிக்குள் மின் கம்பியை அழுத்திக் கடித்திருந்தாலும், கால் வழியாக மின்சாரம் கடத்தப்பட்டு அந்த இடத்தில் காயம் கட்டாயம் ஏற்படும். மின் கம்பியைக் கடிக்கும்போது உடலின் உள் மின்சாரம் பாய்வதால் தோல் அதைத் தடுக்கும் வேலையில் ஈடுபடும் இதனால் உடலில் புண் ஏற்படுகிறது என மருத்துவர் டிகால் கூறியிருந்தார்.
ஆனால் மின்சார கம்பியை கடித்து இறந்ததாக கூறப்படும் ராம்குமாரின் உடலில் இந்தகைய காயங்கள் இருப்பதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட சான்றிதழில் இல்லை.