அமெரிக்க அடிவருடிகளான நோர்வே எரிக் சொல்ஹெய்ம் ,மேற்குலகமும் என்ன சொன்னதோ அதனையே செய்து முடித்துள்ளார்கள்.
30 Sep,2016
இலங்கை விவகாரத்தில் வகித்த பங்கு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக நோர்வேயின் முன்னாள் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 1998ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஏற்பாட்டாளராக சொல்ஹெய்ம் கடமையாற்றியிருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். இதற்கு முன்னதாக நோர்வே சராங்கம் வேறு சில நாடுகளிலும் சமாதானம் செய்யப் போய் அங்கே உள்ள போராட்ட இயக்கங்களை அழித்தது வரலாற்றில் உள்ளது. இன் நிலையில் எரிக் சொல்கிறார் இது தனக்கு ஒரு நல்ல பாடத்தை கற்று தந்தது எஎரிக் சொல்ஹெய்ம் ன்று.
அமெரிக்க அடிவருடிகளான நோர்வே, அமெரிக்காவும் மேற்குலகமும் என்ன சொன்னதோ அதனையே செய்து முடித்துள்ளார்கள். புலிகளை அழிக்க வழிகோலியும் உள்ளார்கள். இது தான் இவர் சொல்லும் பாடம் போல இருக்கே. தான் செய்த தவறுகளை நினைத்து மனம் கலங்கிய எரிக் சில முன் நாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு தனது சொந்த, ஏற்பாட்டில் நோர்வேயில் அடைகலம் கொடுத்துள்ளார். இதனைச் செய்தாவது பாவத்தை சற்று போக்க அவர் நினைத்துள்ளார் போலும்.