கவிஞர்:கலையடி அகிலன்
30 May,2016
நீ என் மீது கொண்ட
கடைக் கண்
பார்வையாலே என் உள்ளம்
சஞ்சலம் அடைய
உன் மீது நானும் நிலை மாறி
கண் கொள்ள
என்னை வேட்டையாடி
என் மனதை பறித்து
அசை தீயை பரவ செய்ய
என் உள்ளத்தில்
உன் மீது எவ்வித காரணம் இன்றி
நானும் கனவு பாலம் அமைக்க
அர்த்தம் இன்றி ஆயுரம்
கற்பனைகளை என்னில் வர
உன் மேல் காதலும் கரு கொள்ளுதே