டென்மார்க்கின் புதிய வென்ஸ்ர கட்சி அரசு கொன்ரன்ற் ஜெல்ப் உதவியை மிகவும் நவீனத்துவமாக மாற்ற இருப்பதாக கூறி அதற்கான புதுமைகளை கொண்டுவர எத்தனித்துள்ளது தெரிந்ததே.
கொன்ரன்ற் ஜெல்ப் உதவியை கணவனும் மனைவியும் பெற்றால் வீட்டுக்கான போலி ரில்ஸ்குல்லை வெட்டுவது, பிள்ளைகள் கொடுப்பனவில் கைவைப்பது, பிள்ளைகள் பராமரிப்பு நிலைய சலுகையில் வெட்டு என்று தனது நவீன திட்டங்களை கொண்டரவுள்ளதாக பேர்ளின்ஸ்க தெரிவிக்கிறது.
இது நவீனமாம் என்ற சிறீமான் பொது சனம் சிரிப்பதும் கேட்காமலில்லை..
இதற்குள் கொன்ரன்ற் ஜெல்ப் பெறுவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக இன்னொரு புள்ளி விபரம் கூறுகிறது, கடந்த டிசம்பரில் இருந்து 2800 பேர் புதிதாக வந்துள்ளனர்.
120.000 ஆக இருந்த தொகை 2014ம் ஆண்டில் 157.000 ஆக உயர்வு கண்டதுஸ
இதில் ஒவ்வொரு நான்கு பேருக்கும் மூன்று பேர் கொன்ரன்ற் ஜெல்ப் பெறுவதில் இருந்து விலத்த முடியாதவர்களாகும்.
போதைவஸ்த்தால் பாதிக்கப்பட்டோர், உடல் நிலை இயலாதோர், உளநிலை பாதிக்கப்பட்டோர் என்ற பிரிவினரே இருப்பதால் இவர்களுக்கு நெருக்கடி கொடுக்க இயலாது.
ஆனால் வென்ஸ்ர அரசு தனது வித்தைகளை காட்ட முயல்கிறது.. பயன் தருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்ஸ
கெல தொனிங் சிமித்திற்கு அகதிகள் உயர் தானிகர் பதவி கிடைக்குமா..
டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் கெல தொனிங் சிமித் ஐ.நா அகதிகள் பிரிவு உயர் ஸ்தானிகர் பதவியை பெற முயற்சித்து வருவது தெரிந்ததே.
இவருக்கு தற்போது அயலில் உள்ள ஸ்கன்டிநேவியன் நாடுகள் ஆதரவாக வாக்களிக்க இணங்கியுள்ளன, நோர்வே, சுவீடன், பின்லாந்து வாக்குகள் இவருக்குக் கிடைக்கும்.
சுவீடன் நாடு சிறியதாக இருந்தாலும் அகதிகளை எடுப்பதில் உலகில் பெரிய சாதனை படைத்துள்ளது, அந்த நாட்டுக்கு தலை வணங்க வேண்டிய நிலை ஐ.நாவின் மனச்சாட்சிக்கு இருக்கிறது.
இதனால் சுவீடனின் ஆதரசு கெல தொனிங் சிமித்திற்கு ஒரு பொன்னான வாய்ப்பாக மிளிர்கிறது.
ஆனால் சுவீடனைவிட அதிகமாக அகதிகளை எடுத்து ஐ.நாவின் மனதை அடி ஆழம்வரை தொட்ட நாடு ஜேர்மனிதான், அந்த நாடும் தனது தரப்பில் ஒருவரை நியமித்திருப்பதுதான் மனதை நெருடுகிறது.
இந்தப் பதவிக்கு உலகம் முழுவதும் இதுவரை 14 பேர் போட்டியிட இருக்கிறார்கள், இவர்களில் மூன்று பேர் பொது வாழ்வில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், இவர்களில் கெல தொனிங் சிமித் ஒருவர் மட்டுமே முன்னாள் பிரதமர் என்பது இன்னொரு சிறப்பு.
ஆனால் அகதிகள் உயர்தானிகர் பதவி என்பது வெறுமனே மிதிப்பிற்காக ஆட்களை உட்கார்த்தி பதவி அழகு பார்க்கும் இடமல்ல, உண்மையான திறமைசாலி இல்லாவிட்டால் இன்றைய அவல நிலமையை வெற்றி கொள்ள இயலாது.
கடந்த காலங்களில் கெல தொனிங் சிமித் வென்ஸ்ர கட்சியுடன் சேர்ந்து அகதிகளுக்கு எதிராக அரசியல் பிரச்சாரம் செய்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த தேர்தலில் கூட இவர் அகதிகளுக்கு ஆதரவான பிரச்சாரத்தை நடத்தவில்லை.. இப்படிப்பட்ட ஒருவரை இந்தப் பதவியில் ஐ.நா அமர்த்துமா.. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
டென்மார்க் கோண்பாக் பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தான் விரும்பிய ஒன்பதாம் வகுப்பு மாணவனை 38 வருடங்கள் காத்திருந்து இன்று மண முடித்துள்ளார்.
1977ம் ஆண்டு இளம் ஆசிரியையாக இருந்தபோது இங்கிலாந்து பயணம் செய்தபோது ஒன்பதாம் வகுப்பு மாணவனாக இருந்த கிளவுஸ் என்பவரை முத்தமிட்டார், அப்போது ஆசியைக்கு வயது 27 ஆகும், ஆனால் பாடசாலை ஆசிரியை மாணவனை காதலிப்பது முறைகேடான செயல் என்பதால் அந்தக் காதல் நின்று போனது.
ஆனால் தொடர்ந்து 38 வருடங்கள் காத்திருந்து இப்போது கிளவுசை விவாகம் செய்துள்ளார் இருந்தாலும் வயது குறைந்த ஒருவரை மணம் முடிப்பதை பலர் ரசிக்கவில்லை என்று பி.ரி பத்திரிகை எழுதியுள்ளது.
முன்னதாக இவரை மணந்திருந்தால் 4 வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டிருப்பார் இப்போது இருவருக்கும் இடையில் 12 வருடங்கள் வித்தியாசம் உள்ளது, இருப்பினும் இவர்களுக்கிடையில் சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
டென்மார்க் படைத்துறை அமைச்சரின் பதவி ஆடுகிறது
டென்மார்க்கின் படைத்துறை அமைச்சர் கார்ள் கொல்ஸ்ற்றின் பதவி எந்த நேரமும் பறி போகக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக டேனிஸ் அரசியல் விவகார நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
கார்ள் கொல்ஸ்ற் படைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போதே சிறுபான்மை வென்ஸ்ர அரசிடம் இவரைவிட வேறு ஆற்றல் உள்ளவர்கள் இல்லையா என்ற கேள்வியை ஏற்படுத்தியது.
பின்னர் இவர் குவைத் சென்று படைத்துறையுடன் நடத்திய உரையாடல்கள், இவருடைய கருத்துக்கள், உடல் மொழி யாவும் ஒரு படைத்துறை அமைச்சருடைய ஆளுமைக்கு உரியவை தானா என்ற கேள்வியையும் சாதாரண மக்களிடையே ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதற்கு அமைந்தாற்போல இவர் தெற்கு டென்மார்க் பிராந்திய சபையின் தலைவராக இருந்த போது தனக்குக் கீழ் பணியாற்றிய உதவியாளரை கடந்த மே 18ம் திகதி நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனக்கான பரப்புரைகளை செய்ய பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
இவருடைய உதவியாளரான கிறிஸ்டியான் இங்கமான் நீல்சன் என்பவர் இவரின் கீழ் பணியாற்றினாலும் அரச பணியில் இருந்தவர், அவர் தனது வேலை நேரத்தில் அரைப்பங்கு நேரம் தேர்தலில் கார்ள் கொல்ஸ்ற்றிற்கு வாக்களியுங்கள் என்று கேட்பதில் காலத்தை செலவிட்டுள்ளார்.
இவரினால் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன, அதில் நூற்றுக்கணக்கானவை அரசியல் பிரச்சாரமாக இருக்கின்றன.
இவருடைய உதவியாளரோ ஓய்வு நேரத்தில் அனுப்பியதாக கூறியுள்ளார், ஆனால் மின்னஞ்சல்களில் அனுப்பப்படும் நேரம் பதிவாகும் என்பதால் விசாரணைகள் நடக்கின்றன.
மேலும் 16.000 குறோணர் பணம் வழங்கப்பட்ட முறைகேடான பற்றுச் சீட்டு ஒன்றில் அமைச்சரின் பெயர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது, எப்போது இவருடைய பதவியை சீவும் என்றளவுக்கு விஷம் போல ஏறிச் சென்றது.
விவகாரம் இப்போது பிரதமர் லாஸ் லொக்க ராஸ்முசன் கைகளுக்கு போயுள்ளது, இவரை பதவியில் இருந்து விலத்துவதா இல்லையா என்ற முடிவு அவருக்கு உரியதாகும்.
படைத்துறை அமைச்சர் இழைத்திருப்பது பாரதூரமான குற்றச் செயலாகும் என்று நோக்கர்கள் கூறுகிறார்கள்.
பொதுத்துறை ஊழியரை தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்துவது டென்மார்க்கில் சட்டப்படி குற்றமாகும், அமைச்சரின் பதவி நூலில் ஆடுகிறது.
TKS.DURAI