கடந்த 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்களையும் பொது மக்களையும் அழைத்து நடத்திய நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் அவர்கள் வழங்கினார். அதில் பேசிய அவர் மருத்துவர்களுக்கும் பொதுமக் களுக்கும் இருக்கும் இடைவெளியை குறை க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
நீயா நானா கோபிநாத் அவர்கள், மருத்துவர்களிடம் பல
கேள்விக்கனைகளைத்தொடுத்தார். அதேபோல் பொதுமக்களிடமு ம் கேள்விக்கனைகளைத்தொடுத்தார் .
அந்நிகழ்ச்சியைப் பற்றிய இரண்டு விதமான விமர்சனங்களை இணை யத்தில் உலா வந்துகொண்டிருக்கி ன்றன• அந்த வீடியோக்க ள் இரண் டையுமே இங்கே பகிர்ந்துள்ளேன்.
இதில் விஷயம் என்னவென்றால்,
அந்நிகழ்ச்சி வெளியான சில தினங்கள் கழித்து யாரோ ஒரு மர்ம நபர், அவரது பெயரைக்கூட வெளியி ட துணிச்சல் இல்லாதவர் ஒரு வீடி யோவில் தனது குரலைப்பதிவு செய் து யூடிப்பில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நீயா நானா கோபிநாத் அவர்க ள் மருத்துவர்கள் – பொதுமக்களை வைத்து நடத்திய நிகழ்ச்சியையும் நீ யா நானா கோபிநாத் அவர்களையு ம் மிகவும் தரம் குறைந்த வார்த்தைகளாலும் அநாக ரீகமான முறையிலும் பேசியிருக்கி றார். அவரது வீடியோ இங்கே பகிர்ந்துள்ளேன். கீழுள்ள வீடியோவைபாருங்கள் இல்லை இல்லை கேளுங்கள் உங்களுக்கேதெரியு ம் அந்த மர்மநபர் எப்படிப்பட்டவர் என்பது.
அநாகரீகமான தரமற்ற விமர்சனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு நபரை விமர்சனம் செய்யும்போது, அந்த விமர்சனம் தரமான, நாகரீகமான, தனது பக்கத்தில் இருக்கும் கருத்துக்க ளை ஆதாரப்பூர்வமாக இருக்க வேண்டு மே தவிர இப்படி தரம் குறைந்த வார்த் தைகளை பிரயோகப் படுத்தி இருக்கும் அந்த மர்ம நபர், தனது கருத்துக்களின் வாயிலாகவே, தான் ஒரு அநாகரீகமான வன் என்பதை அவரே விளம்பரப்படுத்தி யுள்ளார்.
அதே நேரத்தில் . . .
நாகரீகமான, ஆரோக்கியமான, தரமான விமர்சனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் ப்ரவீன் ராஜ் என்ற மரு த்துவர், தனது விமர்சனதைத வீடியோவில் பதித்துள்ளார். அந்த வீடியோவில் அந்த மரு த்துவர் எந்த அளவிற்கு நாகரீகமான வார்த் தை களையும், தனது கருத்துக்களை ஆதார மாக எடுத்துரைத்து நீயா நானா கோபிநாத் நிகழ்ச்சியின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையையும் அளித்து அதை மறுத்தும் உள் ளார். இவரது இந்த விமர்சனம் ஒரு ஆரோ க்கியமான விமர்சனம் என்றால் அது மிகை யாகாது
ஆம்! ஒரு நிகழ்ச்சியை அல்லது தனி நபரை விமர்சிக்கும்போது அந் த விமர்சனம் நாகரீகமாகவும் ஆரோ க்கியமாகவும் ஆணித்தரமானதாக வும் இருக்க வேண்டும். அப்போதுதா ன் நாம் விமர்சனம் செய்த நபர், தவ று செய்திருந்தால் அதை உணரவோ அல்லது சிந்திக்கவோ அல்லது அவ ரும் அதற்கு நாகரீகமான முறையில் மறுப்புத் தெரிவிக்க ஏதுவாக இருக் கும் இதுதான் ஆரோக்கியமான, தர மான விமர்சனம்
ஆனால்
பலர் பல கோடி பேர் பயன்படுத்தும் இணையத்தில் தனது தரத்தைத் தாழ் த்திக்கொண்டும், அநாகரீகமாக பேசு வதும் எந்த விதத்தில் நியாயம் அது ஆரோக்கியமான விமர்சனமுமல்ல ! இன்னும் சொ ல்லப்போனால் அவர் விமர்சனம் செய்வதற்கே அருகதை அற்றவர் என்பதே விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய எனது அழுத்த மானகருத்து.
மருத்துவர்கள் எதிர் பொதுமக்கள் என்ற முறையில், கடந்த 17-08-2014 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற நீயா நானா நிகழ்சி யின் தொகுப்பு