அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி கொல்லப்பட்ட இடம் கண்டுபிடிப்பு. .பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்
25 Aug,2014
அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி கடந்த வாரம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியால் கழுத்தறுபட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில் அவர் கொல்லப்பட்ட இடத்தை பிரிட்டன் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேம்ஸ் ஃபோலி கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து ஆராய்ச்சி செய்ததில் அந்த இடம் சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃக்கூவா என்ற இடம் என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பத்திரிகையாளரை கடத்தி வந்த தீவிரவாதிகள் எந்த வழியாக அந்த இடத்தை அடைந்திருப்பார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல்களை வைத்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை கண்டுபிடித்து அதன்மீது தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Eliot Higgins என்பவர் சாட்டிலைட் மற்றும் அதிநவீன டெக்னாலஜியின் மூலம் இந்த இடத்தை கண்டுபிடித்துள்ளார் என்றும் இந்த தகவல்கள் அனைத்தும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க படைகளுக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் – இதயத்தின் இயக்கத்தையே நிறுத்தும் நேரடிக் காட்சிகள் – அதிர்ச்சி வீடியோ
பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்
உலகிற்கே அச்சுறுத்தலாகும் சிரியா ஈராக்கிய இஸ்லாமியதேசம்! அதிர்ச்சியூட்டும் காணொளிகள்
ISIS (Islamic State in Iraq and Syria) தொடர்பாகப் பிரான்சும் அமெரிக்காவும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. ‘இதுவரை இருந்த பயங்கரவாதக் குழுக்களை விட
உலகிற்கே மிக அச்சுறுத்த லாக ISIS இருக்கின்றது’ என அமெரிக்க ஊடக வியலாளரி ன் படுகொலை பற்றிக் கருத் துத் தெரிவிக்கையில் பிரான் சின் வெளி விவகார அமைச்ச ர் லொரோன் பபியுஸ் தெரி வித்துள்ளார்.
BFM மற்றும் RMC க்குச் செவ் வியளித்த அமைச்சர் “இந்தப் பயங்கர வாதிகள் பெரும் அச் சுறுத்தல் மூலம் அச்சத்தை மற்றவர்களிற்கு ஏற்படுத்துகி ன்றார்கள். மற்றைய பயங்கரவாதிகளை விட இவர்கள் மோசமான வர்கள். தங்களது சட்டத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டு ம் எனப் பயங்கரவாதத்தால் அச்சுறுத்துகின்றனர். அடிபணி யாதவர்கள் நாய்கள் போல் சுட்டுக் கொல்லப்படுகின்றார் கள். தற்போது இது போராக மாறியுள்ளது. இந்தப் போர் எ ங்களைச் சார்ந்தது. ஏனெனி ல் இந்தப் போரின் மறுமுனை எங்களை நோக்கியே உள்ளது. நாம் களத்தில் இறங்கத் தயாராக உள்ளோம். ISIS இன் தலைவரின் நோக்கமானது ஈராக், சரியா, ஜோ ர்டான், லெபனான், பலஸ்தீனம் ஆகியவற்றிற்குத் தான் தலைவ னாக வேண்டும் எனவும் மீறுபவ ர்கள் நாய்கள்போல் அழிக்கப்படு வார்கள் என்பதாகும். இது எங்க ளிற்கு, ஐரோப்பாவிற்கு மட்டுமல் ல உலகத்திற்கே பெரும் ஆபத்தும் அச்சுறுத்தலுமானது. இதற்கு நாம் இராணுவத்தீர்வை வழ ங்குவதை விட எமக்கு வேறுவழியில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கட்டார் அரசின் ISIS இனுடனான தொடர்பு பற்றிக் கேட்டபோது அத ற்குக் கருத்துத் தெரிவிக்க அமைச்சர் மறுத்துவிட்டார். அமெரிக்காவின் வான்தா க்குதல் பற்றி வினவியபோது “நாம் இந்த விடயத்தை ஆர ம்பத்தில் இருந்து கையாண்டி ருந்தால் வேறு விதமாகக் கையாண்டு இருப்போம். இ ப்போது சிரியாவின் பசார் - அல் -ஆசாத் ஒரு புறம் பயங்கரவாதிகள் ஒரு புறம். இதில் எதிர்த் தரப்பு மிகவும் பலவீனமான ஆயுதத்துடன் கள முனை யில் உள்ளார்கள். எமது இராணுவ தந்திர த்தில் நாம் ஒருபோதும் வான் தாக்குதலை அனுமதித்தி ருக்க மாட் டோம்” என அமைச்சர் தெரிவித்தார்.