விபச்சாரம் செய்யும் பெண்கள் அதிக பணம் கேட்டு மிரட்டியதாக புகார் செய்த சுவீடன் நபர் கைது.
15 Aug,2014
பாலியல் தொழில் செய்யும் இரு பெண்கள் தன்னிடம் அதிக பணம் கேட்டு மிரட்டியதாக காவல்துறையினர்களிடம் புகார் அளித்த சுவீடன் நாட்டை செர்ந்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சுவீடன் நட்டை சேர்ந்ந்த 55 வயது நபர் ஒருவர் இரண்டு பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் ஒரு மணி நேரத்திற்கு $436 செக்ஸ் உறவுக்கு தருவதாக பேரம் பேசி அழைத்து சென்றார். ஆனால் ஒரு மணி நேரம் திடீரென அவர் காவல்துறையினர்களை அவசரமாக அழைத்தார். காவல்துறையினர் என்ன என்று அவரிடம் விசாரித்தபோது, இரண்டு பாலியல் பெண்களும் தனக்கு அளித்த செக்ஸ் சேவைக்காக தன்னிடம் அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் செய்தார்.
சுவீடன் நாட்டு சட்டப்படி பாலியல் பெண்களுடன் உறவு கொள்வது சட்டப்படி குற்றம். எனவே போலீஸார் புகார் செய்த அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் சுவீடன் நாட்டின் Rosenlund பகுதியில் அதிகளவு விபச்சாரம் நடந்து வருவதாக சந்தேகப்பட்ட போலீஸார் அன்றைய தினமே பல இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி பாலியல் தொழில் செய்யும் பெண்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களை கைது செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று சுவீடன் போலீஸார் புலம்பி வருவதாகவும் அந்நாட்டு ஊடகன் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.