ரஷ்யாவில் இருந்து கிழக்கு உக்ரைனுக்கு சென்ற 300 மர்ம லாரிகள். உதவிப்பொருட்களா? ஆயுதப்பொருட்களா?
12 Aug,2014
உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் போராடி வரும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காக உக்ரைன் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரணப் பொருள்களுடன் 300 ரஷ்ய நாட்டு லாரிகள் நேற்று மாஸ்கோவில் இருந்து புறப்பட்டன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியுடன் மாஸ்கோவில் இருந்து புறபட்ட இந்த வாகனங்கள் உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் இருக்கும் பகுதியை சென்றடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த லாரியில் சென்ற செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கல் அந்த லாரிகளின் என்ன கொண்டு வரப்படுகின்றன என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உண்மையிலேயே உணவு மற்றும் மருத்துவபொருட்களைத்தான் அனுப்பியுள்ளதால் அல்லது கிளர்ச்சியாளர்களுக்கு தேவையான ஆயுதங்கள் இந்த லாரியில் சென்றுள்ளதா? என்பது குறித்து உலக நாடுகள் தங்கள் ஐயத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உணவு மற்றும் மருத்துவப்பொருட்கள் அடங்கிய 2,0000 டன் எடைகொண்ட உதவிப் பொருள்கள்தான் அந்த வாகனங்களில் இருப்பதாக் ரஷிய செய்தி நிறுவனங்கள் நேற்று செய்திகள் வெளியிட்டிருந்தன.
200-க்கும் மேற்பட்ட வெள்ளை நிற லாரிகள் மாஸ்கோவில் அணிவகுத்து நிற்கும் காட்சியை ஒளிபரப்பிய என்.டி.வி. தொள்லைக்காட்சி, குழந்தைகளுக்கான உணவு முதல் படுக்கைகள் வரை பல்வேறு உதவிப் பொருள்கள் அந்த வாகனங்களில் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இந்த வாகனங்கள் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் சென்றது குறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து கூற மறுத்துள்ளது.