களியாட்ட விடுதியில் பாலியல் தொழில்! 6 பெண்கள் உட்பட 16 பேர் கைது!
16 Jul,2014
கொழும்பு, கட்டுநாயக்க, ஹல்கஸ்தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள களியாட்ட விடுதியில் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்தமை தொடர்பில் 06 பெண்களும் 10 ஆண்களும் மேல்மாணகன மோசடித்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட தேடுதல் ஆணையை அடுத்தே மோசடித்தடுப்பு பிரிவினரால் குறித்த களியாட்ட விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் சனிக்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்