2022ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டை உலகம் எதிர்நோக்கியுள்ளது. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் கொரோனா வாட்டி வதைத்தை நிலையில், 2022இல் தான் பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும், ஆண்டின் இறுதி கட்டத்தில் சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் மீண்டும் உஷார் நிலையில் உள்ளன.
அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தாண்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது, பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இலங்கை பொருளாதாரா நெருக்கடி ஆகியவையும் இந்தாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகள். இது போன்ற முன்னணி சர்வதேச நிகழ்வுகளை மாதங்கள் வாரியாக நாம் திரும்பி பார்க்கலாம்.
1.பனிப்போருக்குப் பின் ரஷ்யா நேட்டோ நாடுகளுக்கு இடையே முக்கிய மோதலாக ரஷ்யா- உக்ரைன் இந்த மாதத்தில் தான் தொடங்கியது. உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24ஆம் தேதி அறிவித்தார்.
2. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து பிளாட்டினம் ஜூப்ளி கொண்டாடப்பட்டது. இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றார்.
3. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி மாற்றம் ஏற்பட்டதால் அந்நாட்டில் இருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 10 லடச்சத்தை தாண்டியது.
4. கோவிட் பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா அந்நாட்டு குடிமக்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியது. தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் ஐரோப்பிய நாடு இதுவே.
5. ஆப்ரிக்கா நாடான நைஜீரியாவில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலுக்கு வந்ததால், பீயர் உள்ளிட்ட மதுக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் வைத்து 40 லட்சம் பீயர் பாட்டில்கள் அழிக்கப்ட்டன.
6. 95 வயதான பிரிட்டன் ராணி எலிசபெத்திற்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ராணியின் பிளாட்டினம் ஜூப்பளி கொண்டாட்டங்கள் சுணக்கம் கண்டது.
7. பிரேசில் நாட்டில் நூற்றாண்டு காணாத மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்தனர்.
8. வின்வெளி ஆய்வுத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும் சீனா ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள் செலுத்தி புதிய சாதனை படைத்தது.
9. சிரியாவில் அமெரிக்க சிறப்பு படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஸ்மி அல் குரேஷி தற்கொலை தாக்குதல் மூலம் உயிரை மாய்த்துக்கொண்டார்.
10. கனடா நாட்டில் லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு கடும் நெருக்கடியை சந்தித்தது.
நினைவுகள் 2022 : அமெரிக்க நாணயத்தில் இடம் பிடித்த முதல் கருப்பின பெண்.. பட்டத்தை இழந்த பிரிட்டன் இளவரசர்.. ஜனவரி மாத நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..!
அமெரிக்க எழுத்தாளர் மாயா ஏஞ்சலாஅமெரிக்க எழுத்தாளர் மாயா ஏஞ்சலா
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..
NEWS18 TAMIL
2 MINUTE READ
LAST UPDATED : DECEMBER 29, 2022, 18:51 IST
INTER, INDIAWASHINGTONWASHINGTONWASHINGTON
Editor default picture
Published By :Kannan V
தொடர்புடைய செய்திகள்
நினைவுகள் 2022 -பிப்ரவரி மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ
நினைவுகள் 2022 -பிப்ரவரி மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ
சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று
சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு அதிகரித்த கொரோனா எண்ணிக்கை
இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு அதிகரித்த கொரோனா எண்ணிக்கை
மிரட்டும் கொரோனா! இந்தியாவில் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்?
மிரட்டும் கொரோனா! இந்தியாவில் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்?
2022ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டை உலகம் எதிர்நோக்கியுள்ளது. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் கொரோனா வாட்டி வதைத்தை நிலையில், 2022இல் தான் பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும், ஆண்டின் இறுதி கட்டத்தில் சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் மீண்டும் உஷார் நிலையில் உள்ளன.
அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தாண்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது, பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இலங்கை பொருளாதாரா நெருக்கடி ஆகியவையும் இந்தாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகள். இது போன்ற முன்னணி சர்வதேச நிகழ்வுகளை மாதங்கள் வாரியாக நாம் திரும்பி பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு ..
1. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் கொரோனா பரவல் உச்சம் தொட்டன. ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் 10 லட்சம் புதிய கோவிட்-19 பாதிப்பு பதிவானது.
2. உலகின் முதல் 3 டிரில்லியன் டாலர் நிறுவனம், அதாவது 3 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பு நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உருவெடுத்தது. ஒப்பீட்டு அளவில் பார்த்தால் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தை விட கூடுதல் சந்தை மதிப்பை நிறுவனம் கொண்டுள்ளது.
3. இருதய மாற்று அறுவை சிகிச்சையில் புதிய சாதனையாக அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற நபருக்கு பன்றியின் இதயத்தை பெருத்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர். அந்நாட்டின் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து காட்டினர்.
4. அமெரிக்காவைச் சேர்ந்த மாயா ஏஞ்சலாவின் உருவம் பொறித்த நாணயத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசு நாணயத்தில் இடம் பிடித்த முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மாயா ஏஞ்சலா பெற்றார்.
5. கோவிட்-19 லாக்டவுன் கட்டுப்பாடுகளை மீறி மது விருந்தில் பங்கேற்றதாக பிரிட்டனின் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
6. கசகஸ்தான் நாட்டில் பெரும் உள்நாட்டு கிளர்ச்சி வெடித்தது. எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சியில் 164 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக அந்நாட்டில் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டது.
7. ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம் பதிவானது. அந்நாட்டின் ஓன்ஸ்லோ பகுதியில் 50.7 டிகிரி வெப்பம் பதிவானது.
8. போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரதமர் ஆன்டோனியோ கோஸ்டா மீண்டும் பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
9. பாலியல் புகார்களுக்கு ஆளானாதால் பிரிட்டன் நாட்டின் இளவரசர் ஆண்ட்ரூவின் ராணுவ பட்டங்கள் பறிக்கப்பட்டன.
10. உக்ரைன் நாட்டின் 70க்கும் மேற்பட்ட அரசு இணையதங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலை மேலும் வலுப்படுத்தும் விதமாக தாக்குதல் நடத்தப்பட்டது.