மனைவியை கொலை செய்து 400 கிலோ மீற்றர் கொன்டு சென்ற டாக்டர்!!
19 Dec,2022
இந்தியாவின் உத்திரா பிரதேசத்தினைச் சேர்ந்த டாக்டர் ஆன சுரேன் தனது மனைவியான சரிதா என்பவருடன் அதே பகுதியில் தனியாக ஒரு வைத்தியசாலையினை நடாத்தி வநதார். இந்நிலையில் சுரேன் திடிரென தனது மனைவியை காணவில்லை தேடி தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கமைய பொலிஸார் விசாரணையினை ஆரம்பித்தனர். இதன்பொது அயலவர்களிடம் விசாரித்தபோது இருவருக்கும் மிக நீண்ட நாட்களாக சண்டை இருந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து கணவரான டாக்டர் மேல் சந்தேகம் கொன்ட பொலிஸார் தங்களது பாணியில் விசாரணையினை ஆரம்பித்தனர், இதன்பொது உண்மை வெளியில் வந்தது. அதாவது ஒரு வாரங்களுக்கு முன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஆத்திரமடைந்த சுரேன் மனைவி சரிதாவை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலயே பலியானதாகவும், அதன்பின் இரவோடு இரவாக அவரது உடலை சூட்கேஸ் ஒன்றில் வைத்து 400 கிலோ மீற்றர் வரை கொன்டு சென்று ஒரு காட்டில் போட்டு எரித்து விட்டதாகவும் இதற்கு உடந்தையாக தனது தந்தை இருந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.