மீனில் இருந்து தான் மனிதர்கள் பிறந்தார்கள்- ஆய்வில் கண்டு பிடிப்பு !
30 Sep,2022
439 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இந்த மீனில் இருந்து தான் மனிதர்கள் தோன்றினார்கள் என்று ஆராட்சியாளர்கள் தற்போது கண்டு பிடித்துள்ளார்கள். கடலில் 439 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உலவிய இரண்டரை அடி நீளமான மீனில் இருந்து தான் மனிதர்கள் தோன்றி இருக்கிறார்கள். இதனை என்று(armoured shark) அழைக்கிறாகள். ஒருவகை சுறா மீன் இனம்.
இந்த மீனின் உண்மையான பெயர்(Fanjingshania) ஆகும். தென் சீனக் கடல் படுகையில் இதன் எலும்புகள் கிடைத்துள்ள நிலையில். இதனை வைத்து மீனின் உருவம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் படத்தை வரைந்துள்ளார்கள். குறித்த மீன் இனமே முதன் முதலாக தாடைகளை கொண்ட மீன் இனம் ஆகும். மேலும் சொல்லப் போனால் அதன் டி.என். ஏ படிமங்கள் மனித இனத்தோடு ஒத்துப் போகும் வகையில் அமைந்துள்ளது.
இந்த உலகில் முதன் முதலாக உயிரினங்கள் தண்ணீரில் தான் தோன்றியது. அதன் பின்னரே அவரை தண்ணீரியும் தரையிலும் வாழ கற்றுக் கொண்டது. மேலும் சில உயிரினங்கள் தண்ணீரை விட்டு முற்றாக வெளியே வந்து தரையில் வாழ கற்றுக் கொண்டது. இது பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பரிநாம வளர்ச்சி ஆகும். அந்த வகையில், மனிதர்கள் மீன் ஒன்றில் இருந்து தான் வந்துள்ளார்கள் என்றால் , அது சற்று ஆச்சரியமான விடையம் தான்.