பூமி வெப்பம்தரும் மின்சாரம்
08 Sep,2022
பூமியின் ஆழப்பகுதி இப்போதும் வெடித்துப் பீறிடக் காத்திருக்கும் எரிமலைக் குழம்பாகத்தான் இருக்கிறது. இந்த வெப்பத்தை மின்னாற்றலாக மாற்றமுடியும். ஆனால், மேல் தரைப் பகுதியிலிருந்து பூமிக்கடியில் சில கிலோ மீட்டர்கள் தோண்ட வேண்டும். அதில் வெப்பத்தை கடத்தி மேலே கொண்டு வரும் கருவிகளை பதிக்கவேண்டும்.
இது மிகவும் செலவு பிடித்த காரியம் மட்டுமல்ல, அதிக காலம் எடுக்கக்கூடியது. ஆபத்தும் மிக்கது. இந்த சவால்களை சமாளித்து வெற்றிகரமாக பூமி வெப்ப மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்கிறது ஜீ.ஏ. டிரில்லிங். நிலத்தடி வெப்ப மின்சா, நிலையத்தை எங்கும் நிறுவ முடியும் என்கின்றனர் ஜீ.ஏ. டிரில்லிங்கின் ஆராய்ச்சியாளர்கள்.
அவர்களிடம் உள்ள 'பிளாஸ்மாபிட்' என்ற ஒரு புதிய கருவி, பூமிக் கடியில் பிளாஸ்மா கதிர்களைக் கொண்டு பூமிக்கடியிலுள்ள பாறைகளை துளையிட்டு 10 கி.மீ.,ற்கும் மேலே குழாய்க் கிணறு போல உருவாக்கிவிடும். அந்த ஆழத்தில் இருக்கும் தீராத வெப்ப ஆற்றலை வைத்து அனல் மின் நிலையத்தை தரைக்கடியிலேயே அமைக்கலாம் என்கின்றனர் ஜீ.ஏ.டிரில்லிங்கின் அதிகாரிகள்.