குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது: உலக சுகாதார மையம்
03 Jun,2022
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாம மக்களை பயமுறுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக குரங்கு வைரஸ் பரவி வருகிறது. இந்த குரங்கு வைரஸை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகமே என உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கு வைரஸ் என்னும் புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன
இந்த நிலையில் பண்டிகை காலங்கள் வருவதால் குரங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு, குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகமே என தெரிவித்துள்ளது
எனவே குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது