வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் இளம் மனைவிகளை மயக்கி பணம் பறிக்கும் கும்பல் கைது -
08 Jan,2022
பெண்களின் எண்களுக்கு மிஸ்ட் கால் கொடுக்கும் இந்த கும்பல், பின்னர் அவர்களுடன் நட்பு பாராட்டுவார்கள்.அவர்களிடம் கடனாக பணம், நகை போன்றவற்றை பெற்றுகொள்ளும் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், பின்னர் தங்கள் செல்பொனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தப்பி விடுவர்.
வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் இளம் மனைவிகளை குறிவைத்து பணம், நகை பறிக்கும் கும்பலை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் இளம் மனைவிகளை குறித்து வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. கணவர்கள் வெளிநாட்டில் பணியாற்றும் சூழலில் தனியாக இருக்கும் பெண்களின் எண்களுக்கு மிஸ்ட் கால் கொடுக்கும் இந்த கும்பல், பின்னர் அவர்களுடன் நட்பு பாராட்டுவார்கள்.
தங்களை மருத்துவர்கள், இஞ்சினியர் என குறி அறிமுகமாகும் இந்த கும்பலை சேர்ந்த நபர்கள், பின்னர் கும்பலை சேர்ந்த பிற நபர்களையும் இளம் பெண்களிடம் தங்கள் உறவினர்கள் என கூறி அறிமுகப்படுத்துவார்கள். இதையடுத்து, அவர்களிடம் கடனாக பணம், நகை போன்றவற்றை பெற்றுகொள்ளும் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், பின்னர் தங்கள் செல்பொனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தப்பி விடுவர்.
சமீபத்தில் 4 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 65 சவரன் நகை ஆகியவற்றை இவ்வாறு பறிகொடுத்த பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்துல் சலாம், அஷ்ரஃப், ரஃபீக் ஆகிய மூவரை கைது செய்தனர்.
நடிகை Shamna Kasim இடமும் இந்த கும்பல் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. திரிச்சூர், மணப்பூர்,எர்ணாகுளம் ஆகிய நீதிமன்றங்களில் இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.