வீட்டுக்கு அடியில் 90க்கும் மேற்பட்ட ‘பாம்புகள்’ - அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பாம்புகள்பாம்புகள்
19 Oct,2021
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு வீட்டுக்கு அடியில் 90க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்துள்ளது. அல் வுல்ஃப் என்பவர் அந்த வீடியோவை பேஸ்புக்கில் ஷேர் செய்த நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகியது.
அல் வுல்ஃப் என்பவர் சோனோமா கவுண்டி ஊர்வன மீட்பு இயக்கத்தின் இயக்குனராக இருக்கிறார். இவர் 32 வருடங்களாக பாம்புகளை பிடித்து வருகிறார். பாம்புகள் இருப்பதாக எங்கு இருந்து அழைப்பு வந்தாலும் உடனே சென்று, அந்த உயிரினங்களை பிடித்து வனப்பகுதியில் விட்டு வருகிறார்.
இதுபற்றி பேசிய அல் வுல்ஃப், ‘கலிபோர்னியாவில் உள்ள ஒரு வீட்டில் பாம்புகள் இருப்பதாக எனக்கு அழைப்பு வந்து இருந்தது. நான் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு தேடிய போது பாம்புகள் இல்லை. வீட்டுக்கு அடியில் இருக்குமோ என்று தேடி பார்த்தேன். அப்போது அங்கு வீட்டுக்கு அடியில் கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தன, இதனை பார்த்தவுடன் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு இருந்த எல்லா பாம்புகளும் விஷப் பாம்புகள் ஆகும். கிட்டத்தட்ட 4 மணி நேரம் போராடி எல்லா பாம்புகளையும் பிடித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் முதல் தடவை பார்க்கும் போதே அந்த வீட்டில் 81 பாம்புகள் இருந்தன. அந்த வீட்டில் அவ்வளவு தான் பாம்புகள் இருக்கின்றன என்று நினைத்தேன், ஆனால் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
பொதுவாக குளிர்காலத்தில் பாம்புகளின் இனப்பெருக்கம் அதிகமாக நடைபெறும். அதனால் தான் ஒரே வாரத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. வீட்டின் அடியில் பாம்புகள் இருப்பதை அந்த வீட்டின் உரிமையாளர் அறிந்திருக்கவில்லை. பாம்புகளை பிடித்து காட்டில் விட்ட பிறகு தான், அவர் நிம்மதி அடைந்துள்ளார். உயிரினங்களை பாதுகாப்பது நம் கடமை ஆகும். அதனை நாம் காப்பாற்றுவதும் அவசியம் ஆகும்’ என்று அல் வுல்ஃப் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு இதே வீட்டிற்கு வந்த அல் வுல்ஃப் 59 குட்டி பாம்புகளையும், 22 பெரிய பாம்புகளையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போது பேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது, சிலர் ஆதரவாகவும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதில் பெரும்பாலான பாம்புகளுக்கு நாங்கள் எதிரிகளாக இருந்து வருகிறோம். நீங்கள் மனிதாபிமானத்துடன் பாம்புகளை வளர்த்து வருகிறீர்கள். சுற்றுசூழலுக்கு இது நல்லதொரு முன்னுதாரணம் ஆகும். காடுகளில் வாழும் உயிரினங்கள் மனிதர்களின் தேவையால் அழிந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இது போன்ற ஒரு செயல் பாராட்டப்படக் கூடியது. அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
ஒருவரின் வீட்டின் கீழ் இத்தனை பாம்புகள் ஊர்ந்து செல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இப்படிப்பட்ட ஒருவரை பார்ப்பது அரிதான விஷயம் ஆகும் என்றும், நூடுல்ஸ் போன்று சுற்றி கொண்டிருக்கும் பாம்புகளை எப்படித்தான் பயமில்லாமல் பிடிக்க முடிகிறதோ என்றும் பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.