ஜுலை இறுதிக்குள் அடுத்த கொரோனா அலை அமைச்சர் எச்சரிக்கை!
05 Jul,2021
அகடந்த சில நாட்களாகப் புதிய கொரொனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை வீழச்சியடையாமல் அதிகரித்துச் செல்ல ஆரம்பித்துள்ளது. டெல்டா வைரசானது அதியுச்சத் தொற்றுத் திறன் கொண்டது. பிரித்தானியர்களும் அடுத்த அலையின் ஆபத்தினைச் சாட்சிப்படுத்தி உள்ளனர். இது பிரான்சிலும் மிகவும் வேகமாகப் பரவுகின்றது. நாங்கள், சமூக இடைவெளிகள், கொரோனத் தடுப்பு ஊசிகள், கொரோனப் பரிசோதனைகள், எச்சரிக்கை, தனிமைப்படுத்தல் என்பவற்றால் இதனைத் தவிர்க்க முடியும்ஞ
என பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் எச்சரித்துள்ளார்.
ஆனால் பிரான்சில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, எந்த சமூக இடைவெளிகளும் இன்றி, கூட்டம் கூட்டமாக மக்கள் உணவகங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கூடும் நிலையில், டெல்டா வைரசின் தொற்றினால் பிரான்சில் அடுத்த அலையின் தாக்கம் மிகவும் மோசமாகவே இருக்கும்.