செங்கல்பட்டில் ஷாக்.. 6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 17 வயது சிறுவன் கைது
02 Jul,2021
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற சிறுமி(பெயர் விவரங்கள் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார்.
லட்சுமியின் தந்தை அந்த பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மின்சார கட்டணம் செலுத்துவதற்காக மகளை உடன் அழைத்துச் சென்றுள்ளார் லட்சுமியின் தாய். பின்னர் இறைச்சி கடைக்கு வியாபாரத்துக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்த சென்றுள்ளார். லட்சுமி வீட்டுக்கு தனியாக வந்திருக்கிறார்.
போலீசில் புகார்
போலீசில் புகார்
ஆனால் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்த அந்த தம்பதி தங்கள் மகள் வீட்டை வந்து சேரவில்லை. இதை அறிந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இதையடுத்து சதுரங்கப்பட்டினம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
கொரோனாவால் 4 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்... உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்..! கொரோனாவால் 4 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்... உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்..!
முட்புதரி மாணவி
முட்புதரி மாணவி
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமி வீட்டின் அருகிலிருந்த முட்புதரில் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் போலீசிடம் தெரிவித்தனர்.
என் வீட்டு வேலைக்காரப் பொண்ணு கூட ஜம்முன்னு இருக்கும்.. மாணவிகளிடம் அசிங்கமாக பேசிய பேராசிரியர்! என் வீட்டு வேலைக்காரப் பொண்ணு கூட ஜம்முன்னு இருக்கும்.. மாணவிகளிடம் அசிங்கமாக பேசிய பேராசிரியர்!
பாலியல் கொடுமை
பாலியல் கொடுமை
இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமி திட்சிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி.. பேராசிரியர் செய்த பாலியல் சேட்டை.. உதவிய பேராசிரியை.. குமுறிய மாணவிகள்.. பரபரப்பு கடிதம் திருச்சி.. பேராசிரியர் செய்த பாலியல் சேட்டை.. உதவிய பேராசிரியை.. குமுறிய மாணவிகள்.. பரபரப்பு கடிதம்
கொலை செய்தான்
கொலை செய்தான்
மின்சார கட்டணம் செலுத்த அம்மாவுடன் சென்ற சிறுமி, தனியாக வந்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளான். வன்கொடுமை செய்ய முயற்சித்த போது சிறுமி கத்தியதால் , சிறுவன் கல்லால் தாக்கி சிறுமியை கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.