15 மைல் விட்ட விண் கல் பூமியில் விழுந்த இடம்: 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்
19 Jun,2021
யூக்கிரேன் நாட்டில் சுமார் 6 லட்சத்தி 50, 000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், 15 மைல் விட்டம் கொண்ட விண் கல் ஒன்று வீழ்ந்துள்ளது. ஆனால் உலகில் டைனசோர்கள் வாழ்ந்து அவை முற்றாக இறந்த பின்னர் இந்த பெரிய விண் கல் பூமியில் விழுந்துள்ளது. அதனால் ஏற்பட்ட பெரும் பள்ளத்தாக்கு இன்று வரை காணப்படுவதோடு, அந்த இடத்தில் தோண்டத் தோண்ட , பூமியில் இல்லாத வேறு வகையான வேதிப் பொருட்கள் இருப்பது பெரும் ஆச்சரியமான விடையமாக உள்ளது. மனித இனம் கூட, இந்த பூமியில் உருவாக வில்லை. விண்வெளியில் இருந்து வந்த ஒரு கல்லில் வந்த உயிரினமே மனிதர்கள் என்று , அதிக அறிவு கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறார்கள். அதுவும் உண்மை தான்.
ஏன் எனில் உலகில் எல்லா உயிரினங்களும் 5 அறிவோடு இருக்க. எப்படி மனிதர்கள் மட்டும் 6 அறிவோடு இருக்கிறார்கள் என்பது அதிசயமான விடையம் தானே. தற்போது யூக்கிரேன் நாட்டில் உள்ள இந்த பாதாள இடத்தை ஆராய்ந்து வருகிறார்கள் விஞ்ஞானிகள். இதில் பல தகவல் கிட்டும் என்று கூறுகிறார்கள்.