சீனாவில் 2 தலையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்!
11 May,2011
சீனாவில் சீசுயாங் மாகாணத்தில் சுனிங் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக நிறைமாத கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார்.
விவசாயியின் மனைவியான அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. உயிருடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அக்குழந்தைகள் 2 தலையுடன் உடல் ஒன்றாக ஒட்டிய நிலையில் இருந்தன. அவற்றின் எடை 9 பவுண்டு இருந்தது. உயரம் 51 சென்டிமீட்டராகும்.
அக்குழந்தையை பார்த்து பயந்த பெற்றோர். அவற்றை தங்களால் வளர்க்க முடியாது என ஆஸ்பத்திரியில் ஒப்படைத்து விட்டனர். பின்னர் அக்குழந்தைகள் சாஸ்ருயிங் என்ற இடத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
2 தலையுடன் ஒட்டிப் பிறந்த அக்குழந்தைகளுக்கு 2 முதுகு தன்டுவடங்கள், 2 உணவு குழாய்கள் மற்றும் அனைத்து உறுப்புகளும் உள்ளன. எனவே, ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை தனித்தனியாக பிரிக்க முடியுமா? என டாக்டர்கள் தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர்.