கொரோனா பரவ அமெரிக்க இராணுவ வீராங்கனையே காரணம் :
29 Apr,2020
சீனாவுக்கு கொரோனாவைக் கொண்டு வந்தது அமெரிக்க இராணுவ வீராங்கனையான மாட்யே பெனாசி என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க இராணுவ வீராங்கனை மாட்யே பெனாசியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
சீன சமூக ஊடகங்களில் இவரும் இவரது கணவரும் தான் தற்போது அதிகம் பேசப்படுகின்றனர்.
இதனால் இவர்களது வாழ்க்கையே தடம் புரண்டது. இவர்களது முகவரியும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது,
“இது துர்சொப்பனத்திற்குள் செல்வது போல் உள்ளது” என்கிறார் மாட்யே பெனாஸி.
மாட்யே பெனாஸி அமெரிக்க ராணுவத்தில் சிவிலியன் ஊழியர், இவர் வர்ஜினியா மையத்தில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
இவரது கணவர் பெண்டகனிலிருந்து ஓய்வு பெற்ற ஏர்ஃபோர்ஸ் அதிகாரி. இவ்வளவு பெரிய இடத்தில் பணியாற்றினாலும் இவர்களுக்கு உதவ ஆளில்லை.
அமெரிக்க இராணுவத்தினர் மூலம்தான் கொரோனா பரவியது என்று சீனா தெரிவிக்கும் நிலையில் அதற்குப் பதிலடியாகத்தான் ட்ரம்ப், வுஹான் வைரஸ், சீனா வைரஸ் என்று பேசத்தொடங்கினார்.
கடந்த ஆண்டு வுஹானில் நடந்த ராணுவ உலக விளையாட்டுப் போட்டிகளில் பெனாஸி கலந்து கொண்டார். மிலிட்டரி ஒலிம்பிக் போட்டிகளாகும் இது.
இதில் சைக்கிளிங் போட்டியில் பெனாஸி கலந்து கொண்டார், ஆனால் கடைசி சுற்றில் வரும்போது விபத்து ஏற்பட்டு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும் பந்தயத்தை முடித்துவிட்டுத்தான் வந்தார்.
ஆனால் உலகையே இவர் கொரோனாவினால் தொற்ற வைக்கப் போகிறார் என்ற போலி செய்தி உருவாகியது.
ஜார்ஜ் வெப் என்ற 59 வயது மதிக்கத்தக்க செய்தியாளருக்கு சுமார் 2 கோடியே 70 லட்சம் வாசகர்கள் உள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் இவரைப் பின் தொடர்கின்றனர்.
தான் ஒரு ‘புலன் விசாரணை நிருபர்’ மட்டுமே சதிக்கோட்பாட்டாளர் அல்ல என்று சிஎன்என் தொலைக்காட்சியில் இவர் சமீபத்தில் மறுத்தார்.
பெனாசிஸை தாக்கி வெளியான வீடியோக்கள் சீன மொழியில் ஆக்கம் செய்யப்பட்டு சீனாவில் ஒளிபரப்பப் பட்டு வலம் வந்தது.
“அடுத்து என்ன நடந்தாலும் சரி, என்ன சேதம் செய்ய வேண்டுமோ செய்தாகிவிட்டது. இனி வாழ்க்கை எங்களுக்கு சகஜமானது இல்லை. ஒவ்வொரு முறையும் என் பெயரை கூகுள் செய்தீர்கள் என்றால் பேஷண்ட் ஜீரோ என்பது பாப் அப் ஆகும்” என்கிறார் பெனாஸி