சீனா வைரஸ் பற்றிய தகவல்
28 Mar,2020
சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கடுமையாக பரவி வருகிறது.
முதல் கொரோனா பாதிப்பு சீனாவில் உகான் நகரில் டிசம்பர் 8 ஆம் தேதி கண்டறியபட்டது. ஆனால் ஜனவரி 14 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் சீனா இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
உகானில் உள்ள 34 வயதான கண் மருத்துவரான டாக்டர் லி வென்லியாங் மத்திய மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். சார்ஸ் போன்ற நோய் பரவுவதைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிக்க முயன்றார், ஆனால் “வதந்திகளை” பரப்பியதற்காக அரசாங்கத்தால் லி தண்டிக்கப்பட்டார். நிவாரண முயற்சிகளுக்கு உதவும் போது லி கடந்த பிப்ரவரி 7 ந்தேதி நோயால் இறந்தார். பின்னர் சுதாரித்து கொண்ட சீன அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.
கொரோனா வைரசை முதலில் மருத்துவர்கள் இது ஒரு வைரஸ் நிமோனியா என்று நினைத்தார்கள் சாதாரண மருந்துகளால் குணப்படுத்த முயன்றார்கள். பின்னர், 2019 டிசம்பரில், இது சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து கொரியா மற்றும் தாய்லாந்து வரை பரவியது.
இந்த கொடிய நோய்க்கிருமியை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கும் ஆதாரங்களை புதைக்க சீனா முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மருத்துவர்கள் புதிய வைரஸைக் கண்டறிந்தவுடன், சீன அதிகாரிகள் ஆய்வகங்களை மூடிவிட்டு வைரஸின் மாதிரிகளை அழித்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.
சீனா வைரஸ் பற்றிய தகவல்களை அடக்குவதன் மூலம் உலகை முட்டாளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொடிய வைரஸ் கண்டுபிடிக்க வழிவகுத்திருக்கக்கூடிய ஆதாரங்களை சீனா புதைக்க முயன்றதாகவும், அது வெடித்தது குறித்து சரியான நேரத்தில் மற்ற நாடுகளை வேண்டுமென்றே எச்சரிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சீனாவில், இந்த வைரஸைப் பற்றி எச்சரிக்கை மணிகள் அடித்தவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் கூற்றுக்கள் கூறப்பட்டுள்ளன.
சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனாவை “சீன வைரஸ்” என்று குறிப்பிட்டார். அதற்கு, சீனா ஆட்சேபனைகளை எழுப்பியது மற்றும் எந்த தவறான செயலையும் கடுமையாக மறுத்தது. இருப்பினும், “ஸ்பானிஷ் காய்ச்சல்” அல்லது “புது டெல்லி சூப்பர்பக்” பயன்படுத்துவதை சீனா ஒருபோதும் எதிர்க்கவில்லை.ஆனால் கொரோனா வைரஸை “சீன வைரஸ்” என்று அழைப்பதை அது கடுமையாக எதிர்க்கிறது.
இப்போது, சீனாவில் வைரஸ் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டதாக சீன அரசாங்கமும் ஊடகங்களும் கூறி வருகின்றன. மார்ச் 12 ஆம் தேதி, சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜன் டுவிட்டரில் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு வைரஸ் வந்துவிட்டதாகக் கூறினார். அக்டோபர் 2019-ல் உகானில் நடந்த இராணுவ உலக விளையாட்டுப் போட்டிகளின் போது, அமெரிக்க இராணுவ விளையாட்டு வீரர்கள் இந்த வைரஸை அவர்களுடன் கொண்டு வந்ததாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.