பிரார்த்தனைகள் நிறைவேற வைக்கும் நேரம்
22 Dec,2019
ஒரு சிலர் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பார்கள். ஒருசிலர் அசதியாக இருக்கிறது என்று சொல்லி 8 மணிக்குதான் எழுந்திருப்பார்கள். இன்னும் சிலர் இன்று விடுமுறைதான் என்று 10 மணிக்கு மேல்
எழுந்திருப்பதையும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இரவு நேரத்தில் பணிபுரிவர்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. ஆனால் சராசரி மனிதர்கள், பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும், அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது.
முதலில் சிரமமாக இருந்தாலும் பிறகு இந்த நடைமுறையானது நமக்கு பழக்கமாகிவிடும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில்தான் தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருவார்கள். அப்பொழுது விழித்திருந்து அவர்களை மனதால் நினைத்து வழிபட்டு, என்ன வரம்கேட்டாலும் கொடுக்க காத்திருப்பார்கள். பிரார்த்தனைகள் பலிக்கும் அந்த நேரத்தைதான், பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்கிறார்கள்.